search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's petition"

    கண்டாச்சிபுரம் அருகே புதிதாக டாஸ்மாக்கடையை திறக்கக் கூடாது என மாவட்ட வருவாய் அதிகாரியிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது ஆயந்தூர். இங்குள்ள காரணை பெருஞ்சானூர் சாலையில் அரசு சார்பில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்கப்பட உள்ளது.

    இதைத்தொடர்ந்து அங்கு அதிகாரிகள் தீவிர ஏற்பாடு செய்து வந்தனர். இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு டாஸ்மாக்கடை திறக்கப்படும் என தெரிகிறது. இதுபற்றிய தகவல் ஆயந்தூர் கிராம மக்களுக்கு தெரியவந்தது.

    இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மனுக்கள் வாங்கிக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அதிகாரி பிரியாவிடம் மனு கொடுத்தனர்.

    அதில் எங்கள் கிராமத்தில் அரசு சார்பில் டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. அந்த கடையை திறக்கக் கூடாது. அவ்வாறு திறந்தால் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். #tamilnews
    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி 2 கிராம பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். #thoothukudiProtest #Sterlite
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

    இதனால் அங்கு பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை.ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலையின் ஒப்பந்த பணியாளர்கள், லாரி உரிமையாளர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று தெற்கு வீரபாண்டியபுரம், மீளவிட்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேலையில்லாமல் வருமானமின்றி தவிப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். #thoothukudiProtest #Sterlite
    ×