search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Watchman suicide"

    மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் சரவணன் நகர் கொண்டாரெட்டி தெருவை சேர்ந்தவர் தாஜன் (வயது52). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

    மதுகுடிக்கும் பழக்கம் உள்ள தாஜன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் கேட்டு மதுகுடித்து வந்தார். அதுபோல் தாஜன் நேற்றும் வேலைக்கு செல்லாமல் மதுகுடிக்க மனைவியிடம் பணம் கேட்டார். ஆனால் லட்சுமி பணம் கொடுக்க மறுத்து விட்டார்.

    இதனால் விரக்தி அடைந்த தாஜன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கருவடிக்குப்பத்தில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடிக்குப்பம் மேயர் நாராயணசாமி நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது73). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு இருதய நோய் இருந்து வந்தது. இதற்காக அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். ஆனாலும் அவ்வப்போது நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்.

    இந்த நிலையில் சுந்தரமூர்த்தியின் மனைவி விஜயா நேற்று அருகில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று இருந்தார். அப்போது சுந்தரமூர்த்திக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அங்குள்ள மதுகடைக்கு சென்று மதுகுடித்த அவர் பின்னர் வீட்டின் குளியலறையில் இரும்பு கம்பியில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குணாளன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதேபோல் வில்லியனூர் அருகே கரிக்கலாம்பாக்கம் அரசன்குளம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது53). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்து வந்தும் நோய் கொடுமை தீரவில்லை.

    இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லட்சுமி நேற்று வீட்டின் அருகில் உள்ள கொய்யாமரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×