என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » volunteer suicide
நீங்கள் தேடியது "Volunteer suicide"
கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தேன்கல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் மலைச்சாமி (வயது 30). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கூலி வேலை செய்து வந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து மலைச்சாமி உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் அடிக்கடி விசாரித்து வந்தார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மலைச்சாமியை செக்கானூரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மலைச்சாமியின் தாயார் அழகம்மாள் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மலைச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செல்வி, பஞ்சவர்ணம் என்ற சகோதரிகள் உள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தேன்கல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் மலைச்சாமி (வயது 30). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கூலி வேலை செய்து வந்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து மலைச்சாமி உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் அடிக்கடி விசாரித்து வந்தார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் விஷம் குடித்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மலைச்சாமியை செக்கானூரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மலைச்சாமியின் தாயார் அழகம்மாள் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மலைச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செல்வி, பஞ்சவர்ணம் என்ற சகோதரிகள் உள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X