search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மலைச்சாமி
    X
    மலைச்சாமி

    கருணாநிதி உடல்நலம் பாதிப்பு: மனவேதனையில் மதுரை தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை

    கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் மனவேதனை அடைந்த தி.மு.க. தொண்டர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தேன்கல்பட்டி காலனியைச் சேர்ந்தவர் கந்தன். இவரது மகன் மலைச்சாமி (வயது 30). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து மலைச்சாமி உள்ளூர் தி.மு.க. நிர்வாகிகளிடம் அடிக்கடி விசாரித்து வந்தார். இந்த நிலையில் மனமுடைந்த அவர் வி‌ஷம் குடித்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் மலைச்சாமியை செக்கானூரணியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மலைச்சாமியின் தாயார் அழகம்மாள் செக்கானூரணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மலைச்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. செல்வி, பஞ்சவர்ணம் என்ற சகோதரிகள் உள்ளனர்.
    Next Story
    ×