search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vigilance raid"

    • ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர்.
    • மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது‌.

    காளையார்கோவில்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 43 கிராமங்களில் உள்ள வீடுகளுக்கான மத்திய அரசின் குடிநீர் வழங்கல் திட்டமான 'ஜல்ஜீவன்' இணைப்பு திட்டத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான டெண்டர் சில தினங்களுக்கு முன்பு விடப்பட்டது.

    இதில் ஏராளமான ஒப்பந்ததாரர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சிவகங்கையில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி.க்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று இரவில் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனையை தொடங்கினர். இந்த சோதனையில் குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு பணிகள் விட்டது தொடர்பான டெண்டர் ஆவணங்களை கைப்பற்றினார்கள்.

    அப்போது அங்கிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேஸ்வரியின் காரை சோதனை செய்தபோது அதில் ரூ.1 லட்சத்தை கைப்பற்றினர். மேலும் அலுவலகத்தின் வெளியே நின்று கொண்டிருந்த சிலுக்கப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் திருமூர்த்தி வாகனத்திலிருந்தும் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதன்படி மொத்தம் கணக்கில் வராத ரூ.3 லட்சத்து 34 ஆயிரத்து 500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை இன்று அதிகாலை சுமார் 3 மணி வரை விடிய விடிய நடைபெற்றது. தொடர்ந்து அந்த பணம் தொடர்பாக விரிவான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாகக் குற்றச்சாட்டு

    சென்னை:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். இங்கு இவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    நேற்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழு வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வீட்டிற்கு சோதனையிடுவதற்காக வந்தது. வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டினர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய்-தந்தை மட்டும் இருந்தனர்.

    வீட்டிலிருந்து வெளியே யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.

    இதேபோல், ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கும் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டிலும் சோதனையிட்டனர்.

    2012 - 16 காலகட்டத்தில் ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது.

    இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக 354 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக கூறி, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ராமேஸ்வர முருகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ளது.
    • லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.

    கோபி:

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக இருப்பவர் ராமேஸ்வர முருகன் (55). இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் ஆகும். இங்கு இவருக்கு சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது தாய் மற்றும் தந்தை வசித்து வருகின்றனர். ராமேஸ்வர முருகன் அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் வெள்ளாங்கோவில் உள்ள ராமேஸ்வர முருகன் தந்தை வீட்டிற்கு சோதனையிடுவதற்காக வந்தனர். வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் வீட்டின் கதவை பூட்டினர். வீட்டில் ராமேஸ்வர முருகனின் தாய்-தந்தை மட்டும் இருந்தனர்.

    வீட்டில் இருந்து வெளியே யாரும் செல்ல அனுமதிக்கவில்லை. அதேபோல் வெளியே இருந்து யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ள போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீசார் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டு வருகின்றனர்.

    இதேபோல் ராமேஸ்வர முருகனின் மாமனார் அறிவுடைநம்பி வீடு ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ளது. இவர் அதே பகுதியில் சொந்தமாக நகைக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டிற்கும் இன்று காலை வந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரது வீட்டிலும் சோதனையிட்டு வருகின்றனர்.

    ராமேஸ்வர முருகன் பள்ளி கல்வித்துறை இயக்குனராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    • ஆனந்தியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஆனந்தியின் கணவர் அரிநாராயணன் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்தவர் அரி நாராயணன். இவரது மனைவி ஆனந்தி. இவர் சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த 25-06-2022 அன்று இவர் போலி பத்திரம் பதிவு செய்த புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு ஒரு ஆண்டாக வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டுக்கு ஒரு ஜீப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வந்தனர். தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு பால்சுந்தர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வந்திருந்தனர்.

    அவர்கள் ஆனந்தியின் வீட்டுக்குள் சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே சட்டத்திற்கு புறம்பாக போலி பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இன்று அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. ஆனந்தியின் கணவர் அரிநாராயணன் பாப்பாக்குடி வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலராகவும் இருந்து வருகிறார். மேலும் மருதம்புத்தூரில் சி.பி.எஸ்.இ. பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

    • லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர்.
    • வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்தவர் லதா சந்திரன். இவர் ஆளூர் பேரூராட்சி தலைவராக இருந்த து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்தது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையிலான போலீசார், லதா சந்திரனிடம் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கூடுதல் சூப்பிரண்டு ஹெக்டேர் தர்மராஜ், இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை 6 மணிக்கு சுங்கான்கடையில் உள்ள லதா சந்திரன் வீட்டிற்கு சென்றனர்.

    வீட்டில் லதா சந்திரன் மற்றும் அவரது கணவர், மகன்கள் இருந்தனர். அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். லதா சந்திரன் பேரூராட்சி தலைவராக இருந்தபோது எந்த வகையான சொத்துக்களை வாங்கினார் என்பது குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். இதை தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்களை சரி பார்த்தனர்.

    போலீசார் கேட்ட விவரங்களுக்கு அவர் பதில் அளித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காலை தொடங்கிய சோதனை மதியத்திற்கு மேலும் நீடித்தது. முன்னாள் பேரூராட்சி தலைவி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லதா சந்திரன் ஏற்கனவே ஆளுர் பேரூர் அ.தி.மு.க. செயலாளராக இருந்துள்ளார். தற்போது வீராணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவராகவும் உள்ளார்.

    • காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது பொருட்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
    • வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றார். திருப்பூரைச் சேர்ந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு குரூப்-2 தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்தில் 5-ம் இடத்தையும், பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பிடித்தார்.

    அதன் பின்னர் அரசு பணியில் தனது முதல் பயணத்தை தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி ஆணையராக மகேஸ்வரி தொடங்கினார். பணியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே அந்த நகராட்சியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காக கடந்த 2014ம் ஆண்டு விருது பெற்றார்.

    அதன் பின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். குமாரபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2018-ம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது.

    2019-ம் ஆண்டில் தர்மபுரியை சிறந்த நகராட்சியாக மாற்றியதற்காகவும் விருது வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்லில் மாநகராட்சி ஆணையராக பதவியேற்ற மகேஸ்வரி ஆர்.எம்.காலனி 1-வது கிராஸ் பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறார். இவரது கணவர் மருந்துகள் விற்பனை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். மகள் வெளியூரில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி வீட்டுக்கு இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் வந்தனர். அவர்கள் மகேஸ்வரி வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    வீட்டில் இருந்த ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றை எடுத்து சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது வேறு யாரும் அந்த குடியிருப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    காஞ்சிபுரத்தில் பணியாற்றியபோது கொரோனா காலக்கட்டத்தில் கிருமிநாசினி கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் வெளியூரில் வசித்து வருகின்றனர். காஞ்சிபுரம் உள்பட மகேஸ்வரியின் உறவினர் 5 பேர் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இதனால் திண்டுக்கல் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி.
    • சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்:

    சென்னை அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள். மலர்விழியின் பெற்றோர் விழுப்புரம் 36-வது வார்டு சாலமேடு புகாரி நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களது வீட்டிலும் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினார்கள்.

    சென்னை மற்றும் விழுப்புரத்தில் இருந்து வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். சோதனை முடிந்த பின்னரே ஆவணங்கள் ஏதும் சிக்கியதா? என்பது தெரியவரும்.

    பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெற்றோர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர்.
    • சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

    சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இதையொட்டி சோதனை நடந்து வரும் பகுதிகளில் ஏராளமான உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
    • ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    சென்னை அறிவியல் நகரத்தின் துணை தலைவராக இருப்பவர் மலர்விழி. ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரியான இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இந்த குடியிருப்பில் 13-வது மாடியில் மலர்விழியின் வீடு உள்ளது. இவரது வீட்டுக்கு இன்று காலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென சென்றனர். அவர்கள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியிடம் தங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக வீட்டில் சோதனை நடத்தி சில தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது என்று கூறினர்.

    இதையடுத்து வீட்டுக்குள் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    தர்மபுரி மாவட்ட கலெக்டராக மலர்விழி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந்தேதி பணியில் சேர்ந்து 2020-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி வரை பணி புரிந்துள்ளார்.

    தனது பணி காலத்தில் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி வசூல் செய்வதற்கு சொத்து வரி ரசீது புத்தகம், குடிநீர் கட்டண ரசீது புத்தகம், தொழில் வரி ரசீது புத்தகம் உள்ளிட்ட புத்தகங்களை அச்சிட்டு வாங்கி உள்ளார். இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மலர்விழி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    2-வது குற்றவாளியாக சென்னை சுப்பாராவ் நகரை சேர்ந்த கிரசண்ட் நிறுவன உரிமையாளரான தாகீர் உசேன், பத்மாவதி நகரை சேர்ந்த நாகா டிரேடர்ஸ் உரிமையாளரான வீரய்யா பழனிவேலு ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களை நடத்தி வரும் இவர்கள் இருவரும் வரி வசூல் புத்தகங்களை அச்சிட்டு கொடுப்பதில் ஏற்பட்டுள்ள முறைகேட்டுக்கு துணை புரிந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் 251 ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்களை அச்சிட்டு வினியோகம் செய்ததில்தான் ரூ.1½ கோடி வசூலித்ததில் முறைகேடு நடந்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இந்த ரசீது புத்தகங்களை அச்சிடுவதற்கு மலர்விழி ஐ.ஏ.எஸ் ரூ.1 கோடியே 31 லட்சத்து 77,500 கூடுதலாக கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதன் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

    வரி வசூல் ரசீது புத்தகங்களை அச்சிட்டு வாங்குவதில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி அரசின் நிதியை மோசடி செய்யும் எண்ணத்துடன் குற்றவியல் சதியில் கலெக்டராக இருந்த மலர்விழி ஈடுபட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தங்களது முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்து உள்ளனர். ஒப்பந்த புள்ளி கோரப்படாமல் 2 தனியார் நிறுவனங்களில் இருந்தும் அதிக விலைக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

    இப்படி நேர்மையற்ற முறையில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 500 வீட்டு வரி ரசீது புத்தகங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 மற்றும் 3-வது குற்றவாளிகளான தனி நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொகை தர்மபுரி மாவட்ட அச்சு பொறிகளின் விலையுடன் ஒப்பிடும்போது முற்றிலும் அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மலர்விழி ஐ.ஏ.எஸ். உள்பட 3 பேர் மீதும் 120பி (கூட்டு சதி) மற்றும் ஊழல் தடுப்பு சட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழியின் வீடு உள்பட சென்னையில் 5 இடங்களிலும் வெளி மாவட்டங்களில் 5 இடங்களிலும் என மொத்தம் 10 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். விழுப்புரம், தர்மபுரியில் தலா ஒரு இடத்திலும் புதுக்கோட்டையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கருக்காக்குடி பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். தொழிலதிபரான இவர் அ.தி.மு.க.வில் உள்ளார். அரசு ஒப்பந்ததாரரான இவர் ஏராளமான பணிகளை எடுத்து நடத்தி வருகிறார்.

    இவரது சகோதரர் முருகானந்தம். பா.ஜ.க.வில் இருக்கும் இவர் புதுக்கோட்டை மாவட்ட பொருளாளராக பணியாற்றி வருகிறார்.

    சகோதரர்கள் இருவரும் சேர்ந்து நிதி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக தொழில் செய்து வருகின்றனர்.

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர்களாக செயல்பட்டு வந்த இவர்கள் மீது அதிக சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் பழனிவேலுக்கு சொந்தமான கருக்காக்குடியில் உள்ள இரண்டு வீடுகள், புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வந்தார். தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார்.

    கிருஷ்ணன் கடந்த 2019-ம் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.

    இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அரசின் திட்டங்கள் செயல்படுத்துவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் டெண்டர் விடப்பட்ட விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள வன ரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது.

    அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

    ரசீது புத்தகங்களை அச்சிட்டதில் ஏற்பட்டுள்ள முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். 2-வது எப்.ஐ. ஆரில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வட்டார வளர்ச்சி அதிகாரி கிருஷ்ணன், விழுப்புரத்தை சேர்ந்த பாப்பாத்தி, சென்னையை சேர்ந்த வீரய்யா பழனிவேலு, தாகீர் உசேன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வனராஜா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு சொந்தமான இடங்களிலேயே லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. ஆட்சியின்போது மாவட்ட கலெக்டராக இருந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது முறைகேடு புகார் கூறப்பட்டு இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாார் வழக்குப்பதிவு செய்திருப்பதும் அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவண்ணாமலையில் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். லஞ்ச புகார் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

    திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகம் 2-ல் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம், ஆவடி பத்திரப்பதிவு, வட்டாச்சியர் அலுவலகங்கள், நாகை வட்டாச்சியர் அலுவலகம், கடலூர் மாநகராட்சி அலுவலகம், புதுப்பாளையம் பகுதியில் இயங்கும் 2 கட்டுமான வரைபட அனுமதி பெற்று தரும் அலுவலகம், ஆத்துார் வட்டார போக்குவரத்து அலுவலகம்,

    திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள, மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் சிறுபூலுவபட்டியிலுள்ள திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், தேனி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சோதனையில் சிக்கிய பணம் மற்றும் பொருட்கள் குறித்த முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை.

    திருவள்ளூர், நசரத்பேட்டை போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் ஊழியர்கள் கையில் இருந்த பணத்தை தூக்கி எறிந்தனர். கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. வெளி ஆட்களை பணியில் அமர்த்தி சோதனைச் சாவடி ஆய்வாளர் பணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர்.
    • தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பூந்தமல்லி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் குன்றத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தூக்கி எறியப்பட்ட பணம் மற்றும் கணக்கில் வராத பணம் எவ்வளவு அலுவலக ஊழியர்களிடம் உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது அரசு அலுவலகங்களில் பரிசுபொருட்கள் மற்றும் பணம் பெறுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • தீபாவளி சமயத்தில் நடத்தப்படும் லஞ்ச ஒழிப்பு சோதனையினால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது அரசு அலுவலகங்களில் பரிசுபொருட்கள் மற்றும் பணம் பெறுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை கண்காணித்து தடுக்க மாநிலம் முழுவதும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. திண்டுக்கல் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேற்று லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடந்தது.

    இரவு 7 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. அலுவலகத்தில் இருந்த 5 அறைகளிலும் பூட்டப்பட்டிருந்த மேஜை, பீரோ அனைத்தையும் திறந்து சோதனை நடத்தினர்.

    மேலும் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதேபோல் பல்வேறு அலுவலகங்களிலும் சோதனை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பணம் அதிகளவில் புழங்கக்கூடிய வட்டார போக்குவரத்து அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் மற்றும் அரசுத்துறை அலுவலகங்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    தீபாவளி சமயத்தில் நடத்தப்படும் இந்த சோதனையினால் அரசு அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    ×