search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedhika"

    காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்த நடிகை வேதிகா, விருது வழங்கும் விழாவில் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். #Vedhika
    காளை, பரதேசி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நடிகை வேதிகா. தற்போது காஞ்சனா 3-ம் பாகத்தில் நடித்து வருகிறார். மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

    வேதிகா சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு கவர்ந்து வருகிறார். இந்த ஆண்டில் 5 படங்களில் நடித்து வருகிறார் வேதிகா. சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றிற்கு வந்தார் வேதிகா. அவரை கண்டதும் ரசிகர்களும், நட்சத்திரங்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். கண்ணாடிபோன்ற மெல்லிய ஆடை அணிந்திருந்த அவர் உள்ளுக்குள் ஆடை அணியாததுபோல் அவரது தோற்றம் இருந்ததே அதிர்ச்சிக்கு காரணம்.



    நிகழ்ச்சி நடந்தபோதே அவரது ஆடை விவகாரம் முணுமுணுப்பை ஏற்படுத்திய நிலையில் பின்னர் தனது புதுவகை காஸ்டியுமுடன் தன் படத்தை நெட்டில் வெளியிட்டார்.
    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படம் தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'.

    அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்த நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.



    விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படத்தை ஏப்ரல் 19-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக படம் தமிழ் புத்தாண்டன்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence
    ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் `முனி'. 

    அதனைத் தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு `முனி' படத்தின் இரண்டாவது பாகமாக `காஞ்சனா' வெளியாகி மெகா வெற்றி பெற்றது. இதன் மூலம் ராகவா லாரன்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனைத் தொடர்ந்து `காஞ்சனா 2' படமும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  

    இந்நிலையில், `காஞ்சனா' படத்தின் மூன்றாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா,  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் ஓவியா நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் துஹான் சிங், மனோபாலா, சத்யராஜ், கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.


    படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 2019-ல் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa

    சமீப காலமாக படங்கள் இல்லாமல் இருந்த நடிகை வேதிகா, அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். #Vedhika
    கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், அடுத்து ஒரு இந்தி படம் இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு கதாநாயகியாக வேதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    வேதிகா சிலகாலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி படங்கள் சிலவற்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிந்து பரபரப்பாக்கினார். அதன் பிறகு வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்தி முன்னணி நடிகர்களான இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் ஒரு ஆங்கில திரில்லர் படத்தின் தழுவல். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பை ஒரே கட்டமாக 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜீத்து ஜோசப். அடுத்து காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். 

    முன்பெல்லாம் தமிழில் இருந்துதான் இந்திக்கு இயக்குனர்கள் செல்வார்கள். ஆனால் மலையாளத்தில் வரும் படங்களின் தாக்கம் நாடு முழுக்கவே எதிரொலிப்பதால் மலையாள இயக்குனர்களும் இந்தியில் கால் பதிக்கிறார்கள். ப்ரியதர்‌ஷன், சித்திக்கை தொடர்ந்து ஜீத்து ஜோசப்பும் அந்த வரிசையில் இணைகிறார். #Vedhika

    ×