என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Emraan Hashmi"

    • கணவர் அகமது கான் அவரை விவாகரத்து செய்து ரூ.200 ஜீவனாம்சம் கொடுக்க மறுத்துவிட்டார்.
    • இதனை எதிர்த்து மனைவி ஷாஜியா பானோ வழக்குத் தொடுத்தார்

    பாலிவுட்டில் இம்ரான் ஹாஷ்மி மற்றும் யாமி கவுதம் ஆகியோர் நடிப்பில் HAQ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.

    1978 ஆம் ஆண்டு ஷாஜியா பானு என்பவருக்கு 60 வயது இருக்கும் போது அவரது கணவர் அகமது கான் அவரை விவாகரத்து செய்து ரூ.200 ஜீவனாம்சம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனை எதிர்த்து வழக்குத் தொடுத்து வெற்றி பெற்ற ஷாஜியா பானோ கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தில் ஷாஜியா பானோவாக யாமி கவுதம் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் ஷாஜியா பானு ஒரு இளம் பெண்ணாகக் காட்டப்படுகிறார். இந்நிலையில், இப்படம் நவம்பர் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

    ஷாஜியா பானோவின் போராட்டம் இந்திய முஸ்லிம் பெண்கள் சம உரிமைகளுக்கான போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

    பிரபல இந்தி நடிகர் இம்ரான் ஆஸ்மியின் மகன், தொடர் சிகிச்சைக்குப் பிறகு புற்று நோய் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளான். #EmraanHashmi #Ayaan
    இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இம்ரான் ஆஸ்மி. இவரது மகன் அயான். கடந்த 2014-ம் ஆண்டு அயான் 3 வயதாக இருக்கும்போது, மிக அரிதாக ஏற்படும் சிறுநீரக புற்றுநோயால் பாதிக்கப்பட்டான். பின்னர் தொடர் சிகிச்சைக்கு பிறகு அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளான். இந்த மகிழ்ச்சியை நடிகர் இம்ரான் ஆஸ்மி வலைதளம் மூலம் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.



    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    5 ஆண்டு சிகிச்சைக்கு பின்பு எனது மகன் புற்றுநோயில் இருந்து விடுபட்டுவிட்டான் என்பது பரிசோதனையில் தெரியவந்தது. உங்கள் அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. புற்றுநோயை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் அனைவரும் அதிலிருந்து விடுபட பிரார்த்தனை செய்கிறேன். எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை உங்கள் நீண்டதூர லட்சியங்களை அடைய உதவும். நீங்கள் இந்த போராட்டதில் வெற்றி பெறுவீர்கள்.

    இவ்வாறு கூறியுள்ளார்.
    சமீப காலமாக படங்கள் இல்லாமல் இருந்த நடிகை வேதிகா, அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். #Vedhika
    கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், அடுத்து ஒரு இந்தி படம் இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு கதாநாயகியாக வேதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

    வேதிகா சிலகாலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி படங்கள் சிலவற்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிந்து பரபரப்பாக்கினார். அதன் பிறகு வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்தி முன்னணி நடிகர்களான இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் ஒரு ஆங்கில திரில்லர் படத்தின் தழுவல். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பை ஒரே கட்டமாக 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜீத்து ஜோசப். அடுத்து காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். 

    முன்பெல்லாம் தமிழில் இருந்துதான் இந்திக்கு இயக்குனர்கள் செல்வார்கள். ஆனால் மலையாளத்தில் வரும் படங்களின் தாக்கம் நாடு முழுக்கவே எதிரொலிப்பதால் மலையாள இயக்குனர்களும் இந்தியில் கால் பதிக்கிறார்கள். ப்ரியதர்‌ஷன், சித்திக்கை தொடர்ந்து ஜீத்து ஜோசப்பும் அந்த வரிசையில் இணைகிறார். #Vedhika

    ×