என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "vaccination special camp"
- தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் நாளை நடைபெற உள்ளது.
- பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.
கோவை
தமிழக அரசின் பன்முக நோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா நோய் தொற்றுகட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதை கருத்தில்கொண்டு, தடுப்பூசி செலுத்தும் பணிதீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது.இதையடுத்து கோவை மாவட்டத்தில், 35-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் ஆன 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு தடுப்பூசி மையங்களில் செலுத்தப்படுகிறது.
இந்த பூஸ்டர் தடுப்பூசி செப்டம்பா் 30-ந் தேதி வரை மட்டுமே இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், கோவை மாவட்டத்தில் 35-வது கொரோனா தடுப்பூசி முகாம் 1,530 இடங்களில் நாளை நடைபெற உள்ளது.
இதில் தகுதியான நபா்கள் இரண்டாம் தவணை, பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
- சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
- ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று 30-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம்கள் இரவு 7 மணி வரை நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடைபெற்றது.
இதில் சென்னையில் மட்டும் 3,300 இடங்களில் நடைபெற்றது. இன்று காலையில் ஆவடி மாநகராட்சி அருகில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முகாமை தொடங்கி வைத்தார்.
அதன்படி, தமிழகத்தில் இன்று கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 13.83 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்