என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » upi
நீங்கள் தேடியது "UPI"
சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் பேமென்ட் சேவை யு.பி.ஐ. மூலம் இயங்குகிறது. #MiPay
சியோமி நிறுவனம் Mi பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Mi பே சேவை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் இயங்குகிறது. இதனை பயன்படுத்த போன், கான்டாக்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான அனுமதியினை வழங்கினால் மட்டுமே இயக்க முடியும்.
பயனர்கள் தங்களது யு.பி.ஐ. முகவரி மற்றும் வங்கி அக்கவுண்ட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது. Mi பே சேவையை பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு சர்வெர்களிலேயே சேமிக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.
Mi பே சேவை காண்டாக்ட், எஸ்.எம்.எஸ்., ஸ்கேனர் செயலிகளினுள் MIUI தளத்தின் ஆப் வால்ட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிமையாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இத்துடன் மற்ற மொபைல் பேமென்ட் சேவைகளை போன்று மொபைல் போன் பில் / ரீசார்ஜ், டி.டி.ஹெச். ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்தலாம்.
பயனர்களின் முழு தகவல்களும் இந்தியா சார்ந்து இயங்கும் கிளவுட் சேவையில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் சேமித்து வைக்கப்படுவதாக சியோமி தெரிவித்துள்ளது. செயலியை சோதனை செய்தபின் Mi பே செயலியை MIUI 10 பீட்டாவில் அறஇமுகம் செய்து, தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
சியோமியின் Mi பே செயலி வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், Mi ஆப் ஸ்டோரில் பயனர்கள் இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். Mi பே செயலியை கொண்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது பயனர்கள் அதிகபட்சம் 100 ரெட்மி நோட் 7 போன்களையும், 50 Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 இன்ச் மாடல்களை வெல்ல முடியும்.
அமேசான் நிறுவனத்தின் பணப்பரிமாற்றம் செய்யும் அமேசான் பே யு.பி.ஐ. ஆப் ஆண்ட்ராய்டு வலைதளங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. #AmazonPay
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அமேசான் நிறுவனம் அமேசான் பே யு.பி.ஐ. அறிமுகம் செய்திருக்கிறது. தனது வாடிக்கையாளர்களுக்கு யு.பி.ஐ. ஐ.டி.க்களை வழங்க அமேசான் நிறுவனம் ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்திருக்கிறது. இதை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை அமேசான் மொபைல் செயலியுடன் இணைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்த பின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து அதிவேக பணபரிமாற்றங்களை மிக எளிமையாக மேற்கொள்ள முடியும். அமேசான் பே யு.பி.ஐ. ஐ.டி. கொண்டு அமேசான் வலைதளத்தில் பொருட்களை வாங்கவோ, அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்கும் போதோ, ரீசார்ஜ் அல்லது கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து செலுத்த முடியும்.
அமேசான் பே யு.பி.ஐ. மூலம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பரிமாற்றமும் மொபைல் வெரிஃபிகேஷன் மற்றும் யு.பி.ஐ. பின் பதிவிட்ட பின்னரே உறுதிசெய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கை ஒருமுறை இணஐத்துக் கொண்டு யு.பி.ஐ. பின் செட்டப் செய்துவிட்டால், பின் இதை கொண்டு பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம்.
பிம் யு.பி.ஐ. வழிமுறையை டிஜிட்டல் பேமென்ட் முறையாக பயன்படுத்த அமேசான் வாடிக்கையாளர்களுக்கு இது பயன்தரும் சேவையாக இருக்கும் என அமேசான் தெரிவித்துள்ளது. அமேசான் பே யு.பி.ஐ. தளம் மூலம் பல்வேறு புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களது அனுபவத்தை மேம்படுத்தும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமேசான் பே யு.பி.ஐ. பணபரிமாற்றங்களை பயன்படுத்த, வாடிக்கையாளர்கள் தங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனில் இருந்து அமேசான் சேவையில் லாக் இன் செய்து கொண்டு யு.பி.ஐ. சேவையை பேமெண்ட் முறையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் அமேசானில் பொருட்களை வாங்கி, புதிய யு.பி.ஐ. மூலம் வங்கி கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலுத்தலாம்.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் டிஜிட்டல் பேமென்ட்ஸ் வசதியின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் யுபிஐ சார்ந்த டிஜிட்டல் பண பரிமாற்றங்களை வழங்கும் சேவைகளுக்கான போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் பேமென்ட்ஸ் வசதி வரும் நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
செயலியில் பேமென்ட்ஸ் வசதி வழங்குவதற்கான பணிகளை செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்டவை சேவைகளை வழங்க காத்திருக்கின்றது. இதற்கான பணிகள் முறையான சிஸ்டம்கள் இல்லாததால் தாமதமாகி வருகிறது.
அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் முதற்கட்டமாக பாரத ஸ்டேட் வங்கியின் சேவையை மட்டும் சப்போர்ட் செய்யும் படி பேமென்ட்ஸ் வசதியை வழங்க ஃபேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மூன்று நிறுவனங்களுடன் இணைந்து இந்த வசதி வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.
2018 பிப்ரவரி மாதம் முதல் பீட்டா செயலியில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், வாட்ஸ்அப் பேமென்ட்ஸ் அம்சத்தில் ரிக்வஸ்ட் மனி (request money) ஆப்ஷன் இன்வைட் முறையில் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது பேமென்ட்ஸ் அம்சம் பேடிஎம் மற்றும் கூகுள் டெஸ் உள்ளிட்டவற்றுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்சமயம் வரை வாட்ஸ்அப் செயலியை சுமார் 20 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இது பேடிஎம் சேவையை பயன்படுத்துவோரை விட சுமார் 20 மடங்கு அதிகம் ஆகும். முன்னதாக அலிபாபவின் பேடிஎம் வாட்ஸ்அப் யுபிஐ பேமென்ட் தளம் முறையான பாதுகாப்பு கொண்டிருக்கவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X