search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "union cabinet"

    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதில் வீடு வாங்குகிறவர்களுக்கு நிவாரணம் உண்டா என்ற கேள்வி எழுந்து உள்ளது. #UnionCabinet #Bankruptcy
    புதுடெல்லி:

    மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    அதைத் தொடர்ந்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத், நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்து உள்ளது என்று கூறினார்.

    “திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு 14 உறுப்பினர்களை கொண்ட திவால் சட்ட குழு பரிந்துரைகள் செய்து உள்ளது. அதன் அடிப்படையில், வீடுகள் வாங்குவோருக்கான நிவாரண அம்சங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளதா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு ரவிசங்கர் பிரசாத், “இது ஒரு புதிய சட்டம். நான் எல்லாவற்றையும் இங்கு சொல்லி விட முடியாது. அரசியல் சாசன மரபு என்று ஒன்று இருக்கிறது. அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கிற வரையில், அதன் விவரங்கள் குறித்து நான் பேச முடியாது” என பதில் அளித்தார்.

    திவால் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு கார்ப்பரேட் விவகாரங்கள் துறை செயலாளர் இன்ஜெட்டி சீனிவாஸ் தலைமையிலான குழு செய்த பரிந்துரையில், வீடு வாங்குகிறவர்களை பாதுகாக்கிற விதத்தில் சில புதிய விதிகளை சேர்க்குமாறு கூறப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது.

    குறிப்பாக, வீடு வாங்குபவர்கள் நிதி கடன் வழங்குபவர்களாக கருதப்பட வேண்டும், அப்படி கருதப்படுகிறபோது, அவர்கள் திவால் தீர்மான செயல்முறையில் பங்கேற்க அனுமதி கிடைக்கும்.

    இந்த பரிந்துரைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்ததா என்பது தெரியவில்லை.

    மேலும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அந்த குழு பரிந்துரை செய்தது. அதுவும் என்னவாயிற்று என்பது தெரியவரவில்லை.

    பிற முக்கிய முடிவுகள் வருமாறு:-

    * உணவு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கு டென்மார்க் நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு, மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது.

    * நாட்டின் முதலாவது தேசிய விளையாட்டு பல்கலைக்கழகத்தை மணிப்பூரில் அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.

    * மரபுசாரா எரிசக்தி துறையில், ஒத்துழைப்பதற்காக பிரான்ஸ், மொராக்கோ நாடுகளுடன் இந்தியா செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * பணியாளர் மேலாண்மை, பொது நிர்வாக துறைகளில் ஒத்துழைப்பதற்கு சிங்கப்பூருடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. 
    எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம், மெட்ரோ ரயில் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. #Cabinet #AIIMS
    புதுடெல்லி :

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் நாட்டில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

    அதன்படி பின்வரும் திட்டங்களுக்கு மத்திய மந்திரி ஒப்புதல் வழங்கியுள்ளது:-

    பிரதான் மந்திரி ஸ்வஸ்த்ய சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 1,103 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.

    அந்திரப் பிரதேசம் மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள ஜந்தலூரு கிராமத்தில் 450 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய பல்கலைக்கழகம் அமைய உள்ளது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் காசியாபாத் நகர் வரை இயக்கப்படும் மெட்ரொ ரயில் திட்டத்தை ரூ.1,967 கோடி முதலீட்டில் நொய்டா நகர் வரை விரிவாக்கம் செய்யப்பட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    டெல்லி-மும்பை தொழில்துறை மையங்கள் திட்டத்தின் கீழ் அதிகளவிலான சரக்கு பொருட்களை கையாள வசதியாக 1,029 கோடி ரூபாய் மதிப்பில், அரியானா மாநிலம் மகேந்தரகார்த் மாவட்டத்தில் உள்ள நங்கல் சௌத்ரி பகுதியில் சரக்கு முனையம் அமைக்க மத்திய பொருளாதார விவகாரத்துறை ஒப்புதல் வழங்கியுள்ளது.

    பாதுகாப்பு படையினரின் தகவல் தொலைத்தொடர்பை மேம்படுத்தவும், உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் நவீன அலைவரிசையை பயன்படுத்த ஆப்டிகல் பைபர் தளம் அமைக்க சுமார் 11,330 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Cabinet #AIIMS #CentralUniversity
    ×