search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Umesh Yadav"

    அறிமுக டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 109 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷேசாத் 18 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். ஜாவித் அஹ்மதி 1 ரன் எடுத்த நிலையில் இசாந்த சர்மா பந்தில் க்ளீன் போல்டானார்.



    அடுத்து வந்த ரஹ்மத் ஷாவை எல்பிடபிள்யூ மூலம் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் அஃப்சர் சசாய் 6 ரன் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    அதன்பின் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. 10-வது நபராக களம் இறங்கிய முஜீப் உர் ரஹ்மான் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார். முகமது நபி அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 109 ரன்னில் சுருண்டது.



    இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டும், ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 365 ரன்கள் குறைவாக இருந்ததால், பாலோ ஆன் ஆனது.

    இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் பாலோ-ஆன கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் ரஹ்மத் ஷாவை வீழ்த்தியதன் மூலம் 100 விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் உமேஷ் யாதவ் இடம்பிடித்தார். #INDvAFG
    இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.

    இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.



    பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. 9-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரஹ்மத் ஷா 14 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழந்தார்.

    ரஹ்மத் ஷா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்கள் கபில்தேவ் (434), ஜாகிர்கான் (311), ஸ்ரீநாத் (236), இசாந்த் ஷர்மா (236), முகமது ஷமி (110), கே காவ்ரி (109), இர்பான் பதான் (100) ஆகியோர் 100 விக்கெட்டிற்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.
    உமேஷ் யாதவின் பந்து வீச்சாலும், 3 ரன் அவுட்டாலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 88 ரன்னில் சுருட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #KXIPvRCB
    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 245 ரன்கள் குவித்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிக ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் கிறிஸ் கெய்ல் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் பிடிக்க தவறினார். இதனால் டக்அவுட்டில் இருந்து தப்பினார் கிறிஸ் கெய்ல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 3 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டிம் சவுத்தி வீசிய 4-வது ஓவரில் கிறிஸ் கெய்ல் 3 பவுண்டரி விரட்டினார். இனிமேல் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 5-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அத்துடன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

    2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய கேஎல் ராகுல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 15 பந்தில் 21 ரன்னும், கிறிஸ் கெய்ல் 14 பந்தில் 18 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் கெய்ல் அவுட்டாகும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 15.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 88 ரன்னில் சுருண்டது. கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல்-ஐ தவிர்த்து பிஞ்ச் (26) மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். 3 பேர் ரன்அவுட் மூலம் வெளியேறினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதாக இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செய்கிறது. லோ-ஸ்கோர் மேட்ச் என்பதால் ஏதும் நடக்கலாம்.
    ×