search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KXIPvRCB"

    உமேஷ் யாதவின் பந்து வீச்சாலும், 3 ரன் அவுட்டாலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 88 ரன்னில் சுருட்டியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர். #IPL2018 #KXIPvRCB
    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கடந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 245 ரன்கள் குவித்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிக ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் கிறிஸ் கெய்ல் கொடுத்த கேட்சை விக்கெட் கீப்பர் பிடிக்க தவறினார். இதனால் டக்அவுட்டில் இருந்து தப்பினார் கிறிஸ் கெய்ல். கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் 3 ஓவரில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    டிம் சவுத்தி வீசிய 4-வது ஓவரில் கிறிஸ் கெய்ல் 3 பவுண்டரி விரட்டினார். இனிமேல் வாணவேடிக்கை நிகழ்த்தப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். 5-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அத்துடன் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

    2-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய கேஎல் ராகுல் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் 15 பந்தில் 21 ரன்னும், கிறிஸ் கெய்ல் 14 பந்தில் 18 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் கெய்ல் அவுட்டாகும்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்திருந்தது.



    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 15.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 88 ரன்னில் சுருண்டது. கேஎல் ராகுல், கிறிஸ் கெய்ல்-ஐ தவிர்த்து பிஞ்ச் (26) மட்டுமே இரட்டை இலக்க ரன் எடுத்தார். 3 பேர் ரன்அவுட் மூலம் வெளியேறினார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 89 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதாக இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் பேட்டிங் செய்கிறது. லோ-ஸ்கோர் மேட்ச் என்பதால் ஏதும் நடக்கலாம்.
    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #IPL2018 #KXIPvRCB
    ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. அஸ்வின் டாஸ் சுண்ட விராட் கோலி ‘ஹெட்’ என அழைத்தார். விராட் கோலி அழைத்தபடி ‘ஹெட்’ விழ, யோசிக்காமல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. கேஎல் ராகுல், 2. கிறிஸ் கெய்ல், 3. மயாங்க் அகர்வால், 4. கருண் நாயர், 5. பிஞ்ச், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அக்சார் பட்டேல், 8. அஸ்வின், 9. அன்ட்ரிவ் டை, 10. அங்கித் ராஜ்பூட், 11. மோகித் சர்மா



    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பார்தீவ் பட்டேல், 2. மொயீன் அலி, 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. மந்தீப் சிங், 6. சர்பராஸ் கான், 7. கொலின் டி கிராண்ட்ஹோம், 8. டிம் சவுத்தி, 9. உமேஷ் யாதவ், 10. முகமது சிராஜ், 11. சாஹல்.
    ×