என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தான் 109 ரன்னில் சுருண்டது- பாலோ-ஆன் கொடுத்தது இந்தியா
Byமாலை மலர்15 Jun 2018 9:27 AM GMT (Updated: 15 Jun 2018 9:27 AM GMT)
அறிமுக டெஸ்டில் இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் 109 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. #INDvAFG
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இந்தியா தவான், முரளி விஜய் சதத்தால் முதல்நாள் ஆட்ட முடிவில் 78 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷேசாத் 18 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். ஜாவித் அஹ்மதி 1 ரன் எடுத்த நிலையில் இசாந்த சர்மா பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த ரஹ்மத் ஷாவை எல்பிடபிள்யூ மூலம் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் அஃப்சர் சசாய் 6 ரன் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அதன்பின் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. 10-வது நபராக களம் இறங்கிய முஜீப் உர் ரஹ்மான் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார். முகமது நபி அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 109 ரன்னில் சுருண்டது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டும், ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 365 ரன்கள் குறைவாக இருந்ததால், பாலோ ஆன் ஆனது.
இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் பாலோ-ஆன கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
இன்று 2-வதுநாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 104.5 ஓவரில் 474 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. ஹர்திக் பாண்டியா 71 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டும், வஃபாதர், ரஷித்கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. முகமது ஷேசாத், ஜாவித் அஹ்மதி தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஷேசாத் 18 பந்தில் 14 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆகி வெளியேறினார். ஜாவித் அஹ்மதி 1 ரன் எடுத்த நிலையில் இசாந்த சர்மா பந்தில் க்ளீன் போல்டானார்.
அடுத்து வந்த ரஹ்மத் ஷாவை எல்பிடபிள்யூ மூலம் உமேஷ் யாதவ் வெளியேற்றினார். விக்கெட் கீப்பர் அஃப்சர் சசாய் 6 ரன் எடுத்த நிலையில் இசாந்த் சர்மா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார்.
அதன்பின் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. 10-வது நபராக களம் இறங்கிய முஜீப் உர் ரஹ்மான் 2 பவுண்டரி, 1 சிக்சர் அடித்து ஆட்டமிழந்தார். முகமது நபி அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்க்க ஆப்கானிஸ்தான் 27.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 109 ரன்னில் சுருண்டது.
இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டும், ஜடேஜா, இசாந்த் சர்மா தலா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியாவை விட ஆப்கானிஸ்தான் 365 ரன்கள் குறைவாக இருந்ததால், பாலோ ஆன் ஆனது.
இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட விரும்பாமல் பாலோ-ஆன கொடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X