search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Two women Naxals"

    மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் பெண் மாவோயிஸ்டுகள் இரண்டு பேரை கமாண்டோ படையினர் சுட்டு வீழ்த்தினர். #WomenNaxalsKilled
    கட்சிரோலி:

    மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து அவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு கமாண்டோ படை களமிறங்கி உள்ளது. இந்த கமாண்டோ படையினர் நேற்று இரவு முதல் தனோரா தாலுகாவிற்கு உட்பட்ட நிகல்கே வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலையில் நடந்த தேடுதல் வேட்டையின்போது மாவோயிஸ்டுகளுக்கும் கமாண்டோ படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சண்டையில் 2 பெண் மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.



    துப்பாக்கி சண்டை முடிந்த பிறகு அப்பகுதியில் ஆயுதம் தாங்கிய இரண்டு பெண் மாவோயிஸ்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டதாகவும், தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் கட்சிரோலி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேந்திர பண்டிட் தெரிவித்தார். #WomenNaxalsKilled
    ×