search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trucks"

    ஏரியில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைபோர் ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இங்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 27-ந் தேதி மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று காலை கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் தீர்வு ஏற்படவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஏரியில் மணல் அள்ளுவதற்காக 50-க்கும் மேற்பட்ட லாரிகள் அணி வகுத்து வந்தன. இதனை அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் திரண்டனர்.

    அவர்கள் லாரிகளை சிறைபிடித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. டி.எஸ்.பி. சந்திரதாசன், தாசில்தார் ரவிச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மணல் குவாரி தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க கிராம மக்களிடம் அறிவுறுத்தினர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். அவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மணல் குவாரிக்கு எதிராக மனு கொடுக்க முடிவு செய்து உள்ளனர். #Tamilnews

    அருப்புக்கோட்டையில் 4 வழிச்சாலையில் போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    அருப்புக்கோட்டை:

    திருட்டு மணல் தடுப்பு சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ள முத்திரைத்தாள் துறை அலுவலர் காசிசெல்வி, காரியாபட்டி தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் அருப்புக்கோட்டையில் ராமசாமிபுரம் 4 வழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருச்சுழி பகுதியில் இருந்து போலி அனுமதி சீட்டுடன் மணல் அள்ளி வந்த 3 லாரிகள் சிக்கின. அதனை பறிமுதல் செய்து டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

    இதுதொடர்பாக லாரி டிரைவர்களான ராஜபாளையம் சத்திரப்பட்டியை சேர்ந்த மோகன், சாமிநாதன், வேல்முருகன் ஆகியோரிடம் விசாரணை நடந்து வருகிறது. 
    ×