search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic Diversion"

    • மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
    • போக்குவரத்து மாற்றம் ஒருவார காலம் அமலில் இருக்கும்.

    சென்னை :

    மெட்ரோ ரெயில் பணிகள் இருவேறு இடங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பனகல் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 12-ந்தேதி (நாளை) முதல் ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் சில போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    தியாகராய சாலையில் தற்போதுள்ள ஒரு வழிப்பாதையில் இருந்து மாற்றப்பட்டு பனகல் பூங்காவில் இருந்து ம.பொ.சி.-க்கு செல்லலாம். தணிகாசலம் சாலை சந்திப்பில் இருந்து பனகல் பூங்காவுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்த வாகனங்கள் தணிகாசலம் சாலை, வெங்கட்நாராயணா சாலை வழியாக உஸ்மான் சாலையை (பனகல் பார்க்) அடையலாம்.

    உஸ்மான் சாலையில் இருந்து பாஷ்யம் சாலை வழியாக போத்தீசுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனங்கள் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

    பர்கிட் சாலையில் இருந்து வரும் மாநகர பஸ்கள் தணிகாசலம் சாலை வழியாக செல்ல தடைசெய்யப்பட்டு சிவஞானம் சாலை, தியாகராயசாலை வழியாக திருப்பி பர்கிட் சிக்னலில் இருந்து வாகனங்கள் வெங்கட்நாராயணா சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்ல தடை செய்யப்படுகிறது. மேற்கண்ட வாகனங்கள் இந்தி பிரசார சபா தெரு, சவுத் போக் சாலை, ம.பொ.சி. சந்திப்பு வந்து அண்ணாசாலையை அடையலாம்.

    தியாகராயநகர் மேட்லியில் இருந்து பர்கிட் சாலை வழியாக அண்ணாசாலைக்கு வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மூப்பாரப்பன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலையை அடையலாம்.

    நந்தனம் சந்திப்பில் இருந்து வெங்கட்நாராயணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள் பனகல் பூங்கா வரை வழக்கம் போல செல்லலாம்.

    மேற்கண்ட தகவல் சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அழகர்கோவில் சாலை பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பறக்கும் மேம்பால பணிகள் நிறைவுபெற்றது.

    மதுரை

    மதுரை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை நகரில் நத்தம் சாலை மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக போக்குவரத்தில் சில மாறுதல்கள் செய் யப்பட்டன.

    இந்த நிலையில் மேம்பால கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த சாலைக ளில் நாளை (வியாழக்கிழமை) முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

    இதன்படி பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் இருந்து யூத் ஹாஸ்டல் (ரேஸ்கோர்ஸ் சாலை) நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக தல்லாகுளம், தமுக்கம் மற்றும் கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து தொடர்ந்து அழகர்கோ வில் சாலையில் பயணித்து, அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட் வழியாக தல்லாகுளம் செல்ல வேண்டும்.

    புதூரில் இருந்து அழகர்கோவில் சாலை மார்க்கமாக கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பை கடந்து அழகர்கோவில் சாலையில் தொடர்ந்து பயணித்து, அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்ல வேண்டும்.

    நத்தம் சாலை, ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து கே.கே.நகர் ஆர்ச் செல்ல வேண்டிய வாகனங்கள், பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலது புறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அவுட்போஸ்ட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, மாவட்ட கோர்ட்டு வழியாக செல்லவேண்டும். நத்தம் சாலை ஐ.ஓ.சி. சந்திப்பில் இருந்து தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம் செல்ல வேண்டிய வாகனங்கள் பாண்டியன் ஓட்டல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி அழகர்கோவில் சாலையில் பயணித்து அம்பேத்கர் சிலை, அவுட்போஸ்ட வழியாக செல்லவேண்டும்.

    மதுரை மாநகராட்சி அலுவலக சாலை-அவுட் போஸ்ட் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி அம்பேத்கர் சிலை வழியாக பாண்டியன் ஓட்டல் சந்திப்புக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

    கே.கே.ந கர் ஆர்ச்சில் இருந்து, அழகர்கோவில் சாலைக்கு கக்கன் சிலை, மதுரை மாநகராட்சி அலுவலக சாலை, அவுட்போஸ்ட் வழியாக வலதுபுறம் திரும்பி பாரதியார் பூங்கா, பாண்டியன் ஓட்டல் சந்திப்பு வழியாக தற்போது சென்று வரும் வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.

    இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் கக்கன் சிலையில் இருந்து வலதுபுறம் திரும்பி யூத் ஹாஸ்டல் (ரேஸ் கோர்ஸ் சாலை) பாண்டியன் ஓட்டல் வழியாக அழகர் கோவில் சாலைக்கு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அவினாசி ரோடு மேம்பால பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மொத்தம் 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 276 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.

    கோவை,

    கோவை அவினாசி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் 10.10 வரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ் சாலைத் துறையின் சார்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 276 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. லட்சுமி மில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜி.கே.என்.எம். சிக்னல் சந்திப்புப் பகுதியில் தூண்கள்அமைக்கப்ப டுவதால், அங்கு வழித்தடம் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜி.கே.என்.எம். ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அண்ணா சிலை சந்திப்பு நோக்கி செல்ல வேண்டுமானால், லட்சுமி மில் சிக்னல் வரை சென்று திரும்ப வேண்டியது இருந்தது.

    இதேபோல, லட்சுமி மில் சிக்னல், அரசு விருந்தினர் மாளிகை ரோட்டில் இருந்து வருபவர்கள் அண்ணா சிலை சந்திப்புக்கு சென்று திரும்பிஜி.கே.என்.எம். சாலைக்கு செல்ல வேண்டியது இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து, அவினாசி ரோட்டில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்ய ப்பட்டுள்ளன. இது குறித்து மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் கூறியதாவது:- லட்சுமி மில் சிக்னலில் இருந்து ஜி.கே.என்.எம். ரோட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகள், பி.ஆர்.எஸ். மைதான நுழைவு வாயில் முன்பு ரோட்டின் நடுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இடைவெளியில் திரும்பி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். இந்த வழியில் இருசக்கர வாகனம் மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். பெரிய வாகனங்கள் வழக்கம் போல அண்ணாசிலை சந்திப்புக்கு சென்று திரும்பி வர வேண்டும்.இதேபோல, ஜி.கே.என்.எம். சந்திப்பில் இருந்து வருபவர்கள் அரசு விருந்தினர் மாளிகை ரோடு சந்திப்பு அருகே திரும்பி அரசு விருந்தினர் மாளிகை ரோட்டிற்கோ அல்லது அண்ணா சிலை சந்திப்புக்கோ செல்லலாம். அதே நேரம் அரசு விருந்தினர் மாளிகை ரோட்டில் இருந்து லட்சுமிமில் சிக்னல் நோக்கி வருபவர்களுக்கு இதில் திரும்ப அனுமதியில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    ஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி இன்று மாலை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BesantNagarChurch
    திருவான்மியூர்:

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 46-வது ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து, தினமும் பெசன்ட்நகர் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தினமும் ஜெபமாலை திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு குருக்கள் பங்கேற்றனர்.

    10-வது திருவிழாவான இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை-மயிலை கத்தோலிக்க பி‌ஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான குருக்கள், கன்னியாஸ்திரிகள், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள்.

    ஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாதா தேர் செல்லும் பாதையான 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 2-வது மற்றும் 7-வது அவென்யூகளில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

    மாலை 4 மணி முதல் எம்ஜி சாலை 7-வது அவென்யூ சந்திப்பிலிருந்து 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்தும், 4-வது மெயின் ரோடு 3-வது அவென்யூ சந்திப்பிலிருந்தும் மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது. சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி. சாலையிலிருந்தும், தாமோதரபுரத்திலிருந்தும் பெசன்ட் நகர் பஸ் டெர்மினல் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது.

    32-வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பெசன்ட் நகர் 4-வது அவென்யூ கஸ்டம்ஸ் காலனி 2-வது குறுக்குத் தெரு 5வது அவென்யூ ஊருர் குப்பம் சாலை 32-வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் 24-வது, 25-வது, 26-வது, 27-வது, 28-வது, 17-வது மற்றும் பெசன்ட் நகர் 21-வது குறுக்குத் தெருக்கள் எலியட்ஸ் கடற்கரை 6-வது அவென்யூ கோஸி கார்னர் முதல் 5வது அவென்யூ சந்திப்பு வரை ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தலாம்.

    மாலை 4 மணி முதல் மாநகர பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து பெசன்ட் அவென்யூ சாலைக்கு இடது புறம் திரும்ப அனுமதியில்லை. பெசன்ட் அவென்யூ சாலைக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி சாலை, எம்.ஜி சாலை வழியாக செல்ல வேண்டும். மாநகர பேருந்துகள் எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர், பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.

    இரவு 8 மணிக்கு மேல் எல்.பி சாலை ஒரு வழிப் பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.

    திருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி, சாலையில் வரும் வாகனங்கள் இந்திரா நகர் 3-வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3-வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு இந்திரா நகர் 3-வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 3-வது குறுக்குத்தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.

    சர்தார் பட்டேல் சாலையில் இருந்து கஸ்தூரிபாய் சாலை 3-வது குறுக்குத் தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BesantNagarChurch

    ×