search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Besant Nagar Arogya Matha Temple festival"

    ஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி இன்று மாலை பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #BesantNagarChurch
    திருவான்மியூர்:

    பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயத்தின் 46-வது ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து, தினமும் பெசன்ட்நகர் ஆரோக்கிய மாதா ஆலயத்தில் தினமும் ஜெபமாலை திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பல்வேறு குருக்கள் பங்கேற்றனர்.

    10-வது திருவிழாவான இன்று மாலை 5.30 மணிக்கு சென்னை-மயிலை கத்தோலிக்க பி‌ஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம் கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. ஆரோக்கிய மாதாவின் ஆடம்பர தேர்பவனியும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான குருக்கள், கன்னியாஸ்திரிகள், லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கிறார்கள்.

    ஆரோக்கிய மாதா தேர் பவனியையொட்டி பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மாதா தேர் செல்லும் பாதையான 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு, 2-வது மற்றும் 7-வது அவென்யூகளில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை.

    மாலை 4 மணி முதல் எம்ஜி சாலை 7-வது அவென்யூ சந்திப்பிலிருந்து 6-வது அவென்யூ, 4-வது மெயின் ரோடு சந்திப்பில் இருந்தும், 4-வது மெயின் ரோடு 3-வது அவென்யூ சந்திப்பிலிருந்தும் மாதா ஆலயத்தை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது. சாஸ்திரி நகர் முதல் அவென்யூவில், எல்.பி. சாலையிலிருந்தும், தாமோதரபுரத்திலிருந்தும் பெசன்ட் நகர் பஸ் டெர்மினல் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதிக்கபடமாட்டாது.

    32-வது மற்றும் 33வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு திடல்களில் வாகன நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பெசன்ட் நகர் 4-வது அவென்யூ கஸ்டம்ஸ் காலனி 2-வது குறுக்குத் தெரு 5வது அவென்யூ ஊருர் குப்பம் சாலை 32-வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர் 24-வது, 25-வது, 26-வது, 27-வது, 28-வது, 17-வது மற்றும் பெசன்ட் நகர் 21-வது குறுக்குத் தெருக்கள் எலியட்ஸ் கடற்கரை 6-வது அவென்யூ கோஸி கார்னர் முதல் 5வது அவென்யூ சந்திப்பு வரை ஒரு புறம் மட்டும் வாகனங்கள் நிறுத்தலாம்.

    மாலை 4 மணி முதல் மாநகர பேருந்துகள் மட்டும் டாக்டர் முத்துலட்சுமி சாலையிலிருந்து பெசன்ட் அவென்யூ சாலைக்கு இடது புறம் திரும்ப அனுமதியில்லை. பெசன்ட் அவென்யூ சாலைக்கு செல்ல வேண்டிய மாநகர பேருந்துகள் அனைத்தும் எல்.பி சாலை, எம்.ஜி சாலை வழியாக செல்ல வேண்டும். மாநகர பேருந்துகள் எம்.ஜி. சாலை, பெசன்ட் நகர் 1வது மெயின் ரோடு வழியாக பேருந்து நிலையத்தை அடைந்து வெளியே செல்லும் வழியாக திருவான்மியூர், பகுதிக்கு செல்லும் சாஸ்திரி நகர் 1வது அவென்யூ வழியாகவும் செல்லலாம்.

    இரவு 8 மணிக்கு மேல் எல்.பி சாலை ஒரு வழிப் பாதையாக பயன்படுத்தப்படும். அடையாறு பாலத்தில் இருந்து திருவான்மியூர் சிக்னல் செல்லும் வாகனங்கள் எல்.பி. சாலை வழியாக செல்லலாம்.

    திருவான்மியூர் சிக்னலில் இருந்து எல்.பி, சாலையில் வரும் வாகனங்கள் இந்திரா நகர் 3-வது அவென்யூ சந்திப்பில், இந்திரா நகர் 3-வது அவென்யூவில் திருப்பிவிடப்பட்டு இந்திரா நகர் 3-வது அவென்யூ, கஸ்தூரிபாய் நகர் 3-வது குறுக்குத்தெரு வழியாக சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சென்றடையலாம்.

    சர்தார் பட்டேல் சாலையில் இருந்து கஸ்தூரிபாய் சாலை 3-வது குறுக்குத் தெரு செல்வது தடை செய்யப்படுகிறது. அத்தகைய வாகனங்கள் எல்.பி.சாலை வழியாக கஸ்தூரிபாய் நகர் செல்லலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BesantNagarChurch

    ×