search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvannamalai Maha Deepam"

    • பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக டிசம்பர் 6-ந்தேதி அதிகாலை பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

    தீப திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த 2-ம் கட்ட ஆய்வுக் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது :-

    கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள். 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

    அங்கிருந்து பக்தர்கள் தடையின்றி தரிசனம் மற்றும் கிரிவலம் செய்துவிட்டு திரும்பி செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இது குறித்த அறிவிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்.

    வரும் பவுர்ணமி கிரிவலத்தை தீபத் திருவிழாவுக்கான ஒத்திகையாக பார்க்க வேண்டும். கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை உள்ளே அனுமதித்து, வெளியே செல்வதற்கான வழி தடத்தை இந்து சமய அறநிலையத்துறை தெரிவிக்க வேண்டும்.

    தரிசனத்துக்கு ஒரு சிலரை நீண்ட நேரம் அனுமதிப்பதால், கூட்ட நெரிசல் அதிகரிக்கிறது. காவல்துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 2,692 சிறப்பு பஸ்கள் மூலம் 6,500 நடைகள் இயக்கப்பட உள்ளன.

    மகா தீபத்தன்று பரணி தீபம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருதல் நிகழ்வை விஐபிக்கள் தரிசிப்பதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் அவர்களுக்கு இருக்கைகள் ஒதுக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சியையொட்டி, வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்றும், நாளையும் சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    சென்னை:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நிகழ்ச்சியையொட்டி, வேலூர் கன்டோன்மெண்ட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு பயணிகள் ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் வேலூரில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, திருவண்ணாமலையை இரவு 11.20 மணிக்கு சென்றடையும்.



    மறுமார்க்கமாக திருவண்ணாமலை-வேலூர் கன்டோன்மெண்ட் இடையே 23 மற்றும் 24-ந்தேதிகளில் சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, வேலூரை காலை 5.55 மணிக்கு சென்றடையும்.

    இந்த பயணிகள் ரெயில் கன்னியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி ரோடு, போளூர், அகரம், துரிஞ்சாபுரம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும்.

    சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மெண்ட் இடையே இன்றும், நாளையும், மறுமார்க்கமாக 23 மற்றும் 24-ந்தேதிகளில் சிறப்பு பயணிகள் இயக்கப்படுகிறது.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.  #KarthigaiDeepam #ArunachaleswararTemple

    திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    மகா தீப தரிசனத்துக்காக மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    மகா தீப தரிசனத்தன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள தீப மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மலை ஏற அனுமதிச்சீட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 23-ந் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வருபவர்கள் உரிய அடையாள சான்று, ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மலை ஏறுவதற்கென அறிவிக்கப்பட்ட பேகோபுரம் எதிர்புறத்தில் அனுமதி சீட்டை காண்பித்து மலை ஏற வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை.

    மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் கோவிலுக்குள் செல்லத் தேவையான கட்டண டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    பரணி தீபத்துக்கான ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் 500 எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன.

    மகா தீபத்துக்கு ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் ஆயிரமும், ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் 100 என மொத்தம் ரூ. 1,600 எண்ணிக்கையிலான சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த டிக்கெட்டுகளை இன்று பகல் 11 மணி முதல் கோவிலின் இணைய தளமான www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, செல்லிடபேசி எண், இணையதள முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்லிப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டணச் சீட்டு அசல், ஆதார் அட்டை அசலுடன் வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    ×