search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupur district"

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். #PlasticBan
    திருப்பூர்:

    தமிழகத்தில் நேற்று முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளருக்கு பதில் கண்ணாடி டம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பதில் 300 மி.லி. கொண்ட தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என டாஸ்மாக் கடை உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு மது குடிக்க வருபவர்களுக்கு கண்ணாடி டம்ளர், 300 மி.லி. தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய அளவிலான திண்பண்டங்கள் ரூ. 15 முதல் 20 -க்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதன், உதவி மேலாளர்கள் உள்ளடங்கிய 4 குழுவினர் திருப்பூர், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    அங்கு பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்த கூடாது என பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதன் கூறினார்.

    திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டின் போது டாஸ்மாக் மது விற்பனை கடுமையாக சரிந்து உள்ளது.

    கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாள் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 13 ஆயிரத்து 205 பெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. பீர் 10 ஆயிரத்து 210 பெட்டி விற்பனை ஆகி இருக்கிறது.

    ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாளான 31-ந் தேதி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 2 ஆயிரத்து 220 பெட்டிகளும், பீர் 1,890 பெட்டிகளும் தான் விற்பனை ஆகி உள்ளது.மது விற்பனை சரிவு குறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதனிடம் கேட்ட போது கூறியதாவது-

    திருப்பூரில் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தான் அதிக அளவில் தங்கி உள்ளனர்.தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாட சென்று விட்டனர்.இதனால் தான் விற்பனை குறைந்து உள்ளது. இது மட்டுமின்றி குடி போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களை போலீசார் பிடித்து லைசென்ஸ் ரத்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இதுவும் மது விற்பனை குறைவுக்கு ஒரு காரணமாகும். பொங்கலுக்கு பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    திருப்பூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டனர்.
    திருப்பூர்:

    தகுதியின் அடிப்படையில் காலமுறையிலான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு டாக்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். மேற்கொண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4-ந் தேதி (நேற்று) ஒரு நாள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அரசு டாக்டர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் டாக்டர்கள் நேற்று ஒருநாள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

    தற்போது திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்காக சிகிச்சை பெற திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று காலை ஏராளமான புறநோயாளிகள் சிகிச்சை பெற திருப்பூர் தலைமை ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தனர். அவர்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்து நின்றனர். ஆனால் வழக்கமான நேரத்தை கடந்தும் டாக்டர்கள் வரவில்லை. அப்போதுதான் டாக்டர்கள் போராட்டம் நடைபெறுவது குறித்து நோயாளிகளுக்கு தெரியவந்தது.

    இதன் பின்னர் பயிற்சி மருத்துவர்கள் மூலம் புறநோயாளிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அரசு டாக்டர்கள் கூறியதாவது “அரசு டாக்டர்களின் கோரிக்கைகள் குறித்து பலமுறை தெரிவித்தும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (நேற்று) ஒரு நாள் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்காமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றபடவில்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். #ttvdinakaran

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் 3 நாட்கள் சுற்றுப் பணம் செய்கிறார். அதன்படி நாளை (வியாழக்கிழமை) மாலை உடுமலை பகுதியில் சுற்றுப் பயணம் செய்கிறார்.

    21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை மடத்துக்குளம், தாராபுரம் பகுதியிலும் 22-ந் தேதி (சனிக்கிழமை) மாலை மூலனூர், வெள்ள கோவில், காங்கயம் பகுதிகளிலும் சுற்றுப் பயணம் செய்து பேசுகிறார். #ttvdinakaran

    திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    திருப்பூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் வீதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். விநாயகர் சிலைகள் வைப்பதற்கு 20 நிபந்தனைகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்துறை, தீயணைப்புத்துறை, மாநகராட்சி நிர்வாகம், காவல்துறை சார்பில் சிலைகள் வைப்பதற்கு நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூரில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து மக்கள் கழகம், பாரத் சேனா, விஷ்வ இந்து பரி‌ஷத், பொதுமக்கள் தரப்பில் விண்ணப்பித்தனர்.

    திருப்பூர் வடக்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 513 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க விண்ணப்பித்தார்கள். இதில் வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட 5 இடங்கள், வடக்கு போலீஸ் நிலையம், அனுப்பர்பாளையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் 4 இடங்கள் என மொத்தம் 9 இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 504 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அதுபோல் தெற்கு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 350 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க விண்ணப்பிக்கப்பட்டது. இதில் 337 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெற்கு போலீஸ் நிலையம், வீரபாண்டி பகுதியில் தலா 6 இடங்கள், மத்திய போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 1 இடம் என 13 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. மாநகரில் மொத்தம் 841 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதித்துள்ளனர்.

    அனுமதி கடிதங்கள் அந்தந்த போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் அனுமதி கடிதத்தை பெறலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதில் இந்து முன்னணி அமைப்பினர் அனுமதிக்கான கடிதத்தை பெறாமல் உள்ளனர். கட்டுப்பாடுகள் இல்லாமல் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்ட காவல்துறையின் கீழ் உள்ள அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஊத்துக்குளி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் 1,189 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாநகர் பகுதியில் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணைகமி‌ஷனர் உமா நேரடி மேற்பார்வையில் 3 உதவிகமி‌ஷனர் 7 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைபோல் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி நேரடிமேற்பார்வையில் மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்திற்கு 33 புதிய பஸ்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    திருப்பூர்:

    முதலமைச்சர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக 542 பஸ்களை இயக்கி வைத்தார். அதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 33 பஸ்களையும் இயக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் பழைய பஸ் நிலைய வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக திருப்பூர் மண்டலத்தின் சார்பில், திருப்பூர் 1, திருப்பூர் 2, பல்லடம், காங்கயம், தாராபுரம், பழனி 1 மற்றும் பழனி 2 ஆகிய கிளைகளின் சார்பில் திருப்பூர் - ராமேஷ்வரம், திருச்சூர், சிவகாசி, திருச்சி, பரமக்குடி, பொள்ளாச்சி, பாலக்காடு, குருவாயூர் மற்றும் சேலம் ஆகிய 11 புறநகர் பஸ்ககளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன், இ.கா.ப., எம்.எல்.ஏ.,க்கள். குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), கரைப்புதூர் ஏ. நடராஜன் (பல்லடம்), முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ், துணை மேலாளர்கள் குணசேகரன் (வணிகம்), வேலுச்சாமி (தொழில்நுட்பம்), திருப்பூர் தெற்கு தாசில்தார் ரவிச்சந்திரன், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை கலெக்டர் பழனிசாமியுடன் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருப்பூர் நகரின் மைய பகுதியான பழைய பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருமாள் கோவில் அரிசி கடை வீதியில் இருந்து பல்லடம் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் வரை ரூ.43 கோடி மதிப்பீட்டில் 671.1 மீட்டர் நீளம் மற்றும் 12 மீட்டர் அகலத்துடன் 16 தூண்களுடன் பறக்கும் பாலம் கட்டப்பட்டு வரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இப்பாலப்பணிகள் முடிவுற்று தற்போது வடிகால் அமைக்கும் பணி மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் அனைத்தும் விரைவில் முடித்து அடுத்த மாதம் (ஆகஸ்ட்) முதல் பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இப்பாலம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×