search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers day"

    தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை மாலை நடைபெறுகிறது. #TeachersDay
    சென்னை:

    ஆசிரியர் தினம் நாளை (செப்டம்பர்5) கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மைப் பள்ளி விருது வழங்கும் மும்பெரும் விழா கலைவாணர் அரங்கில் நாளை (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது.

    விழாவுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் முன்னிலை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் திட்ட விளக்கவுரை நிகழ்த்துகிறார்.

    அனைவரையும் பள்ளிக் கல்வி இயக்குனர் முனைவர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்கிறார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று 373 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, 920 பேருக்கு காமராஜர் விருது, 40 பள்ளிகளுக்கு தூய்மை பள்ளி விருதுகளை வழங்கி விழா பேருரை நிகழ்த்துகிறார்.

    இதில் முதல் முறையாக மாற்றுத்திறனாளிகள் 2 பேருக்கு விருது கிடைக்கிறது.

    மதிப்பெண் ரேங்கில் சிஸ்டம் மாற்றப்பட்டு தமிழ் வழியில் 10-வது, பிளஸ்-2 படித்தவர்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தும் 30 பேர் வீதம் 920 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுகிறது.

    40 பள்ளிகளுக்கு தூய்மை விருதுகளும் வழங்கப்படுகிறது. மொத்தம் 1373 விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    விழாவில் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்ற, அமைச்சர் டி.ஜெயக்குமார், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி மற்றும் அதிகாரிகள் பங்கேற்று பேசுகிறார்கள். முடிவில் தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி நன்றி கூறுகிறார்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் முன்னின்று கவனித்து வருகிறார்.  #TeachersDay
    நாளை ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #TeachersDay
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    ஆசிரியராக பணியை தொடங்கி, தமது கடின உழைப்பினாலும், நற்சிந்தனையாலும் இந்திய குடியரசுத் தலைவராக உயர்ந்து, நமது தாயகத்தின் சிறப்பைத் தரணிக்கு உணர்த்திய தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5-ம் நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அத்துடன், இந்நன்னாளில் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான கல்வியை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றிட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

    ஆசிரியர் பணி சிறக்கட்டும்! அறிவோங்கித் தமிழ்நாடு உயரட்டும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    ஏழைக்குடும்பத்தில் பிறந்து, ஆசிரியராக பணி செய்து, இந்தியாவின் முதல் குடிமகன் என்ற உன்னத நிலையை அடைந்தவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியர் என்று போற்றப்படும் அவரது பிறந்த நாள் தான் ஆசிரியர் நாளாக கொண்டாடப்படுகிறது.

    இந்த நன்னாளில் தமிழக அளவிலும், தேசிய அளவிலும் நல்லாசிரியர் விருது பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழகத்தில் தரமான கல்வி முறை நடைமுறைப்படுத்தப்படுவதும், ஆசிரியர்களுக்கு சிறப்பான பயிற்சி வழங்குவதுடன், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப்படுவதும் அவசியம் ஆகும். இவற்றை செய்து முடிப்பதுடன், ஆசிரியர்களின் உதவியுடன் தமிழகத்தில் தமிழ் வழிக் கல்வியை வழங்கவும் இந்த நல்ல நாளில் அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களை கவுரவிக்கும் மத்திய-மாநில அரசுகள் மாணவ, மாணவிகளின் கல்வி சிறக்கவும், ஆசிரியர் பணிக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்வதில் நேர்மையான வழிமுறைகளை கையாளவும், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வலியுறுத்துகிறேன்.

    நல்லாசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு த.மா.கா. சார்பில் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். உன்னத மனிதர்களாக, சிறந்த படைப்பாளிகளாக திகழ்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு த.மா.கா. சார்பில் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TeachersDay


    ×