search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teacher murder"

    • கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.
    • வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், வெல்கம் மண்டலம் ஊட்டவோலுவை சேர்ந்தவர் கிருஷ்ணா.அங்குள்ள உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.

    அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட நாயுடு. இருவரும் ஒரே அரசியல் கட்சியில் நிர்வாகிகளாக இருந்து வந்தனர்.

    மேலும் வெங்கட நாயுடு அரசு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். தனது அரசியல் வளர்ச்சிக்கு கிருஷ்ணா இடையூறாக இருப்பதாக வெங்கட நாயுடு எண்ணினார். இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் தனது பைக்கில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை காரில் பின் தொடர்ந்து சென்ற வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினர் உங்களது காரில் கிருஷ்ணாவின் பைக் மீது மோதினர். இதில் கிருஷ்ணா நிலை தடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார்.

    அப்போது தாங்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் கிருஷ்ணாவை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கிருஷ்ணா கொலை செய்யப்பட்டது குறித்து அவர்களது ஊர் முழுவதும் தகவல் பரவியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் வெங்கட நாயுடுவின் வீட்டின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெங்கட நாயுடுவின் குடும்பத்தினரை பின்பக்க வாசல் வழியாக பத்திரமாக மீட்டு சென்றனர்.

    வெங்கட நாயுடு மற்றும் கூலிப்படையினரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
    • பட்டப்பகலில் நடந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரது மனைவி மெட்டில்டா (வயது 55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுடைய மகன் சென்னையிலும், ரஸ்கின்டிரோஸ் மும்பையிலும் வசித்து வருகின்றனர். இதனால் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் உள்ள வாடகை வீட்டில் மெட்டில்டா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் மெட்டில்டா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து உடன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்தவர்கள், நேற்று மதியம் மெட்டில்டாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம் என கூறினர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மெட்டில்டாவை கொலை செய்தது அவரது அண்ணன் மகனான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்தருவை பகுதியை சேர்ந்த ஜெயதீபக் (வயது35) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீசில் கூறியதாவது:-

    எனது அத்தையான மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நான் உடன்குடியில் தங்கியிருந்து அத்தைக்கு வீட்டுவேலை போன்ற உதவிகளை செய்து வந்தேன். நான் அவ்வப்போது அவரிடம் செலவிற்கு பணம் கேட்பேன். அந்த வகையில் நேற்றும் செலவிற்கு ரூ. 10 ஆயிரம் தருமாறு மெட்டில்டாவிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த நான் தலையணையால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்தேன். இதனால் கத்தி கூச்சலிட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின்னர் நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திண்டுக்கல் அருகே பஞ்சம்பட்டியில் ஓய்வு பெற்ற ஆசிரியரை கீழே தள்ளி கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டி செபஸ்தியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் யாகப்பராஜ் (வயது 70). இவர் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகன்கள் திருமணமாகி வெளி நாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று என்.பஞ்சம்பட்டியைச் சேர்ந்த சுறா பாஸ்கர் (27) என்பவர் குடிபோதையில் அதே பகுதியில் தகாத வார்த்தைகளால் பேசி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியே சென்ற ஜான்யாகப்பராஜ் அவர் சத்தம் போடுவதை தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு சுறா பாஸ்கர் அவரையும் தகாத வார்த்தைகளால் பேசி கீழே தள்ளியுள்ளார்.

    நிலை தடுமாறி கீழே விழுந்த ஆசிரியர் ஜான் யாகப்பராஜ் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் விரைந்து சென்று ஆசிரியரை கொலை செய்த வழக்கில் சுறா பாஸ்கரை கைது செய்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே குடும்ப தகராறில் கம்பியால் தாக்கி ஆசிரியை கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய கணவரை போலீசார் கைது செய்தனர்.
    கமுதி:

    கமுதி அருகே உள்ள அபிராமம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோட்சே (வயது 32) வேன் டிரைவர். இவரது மனைவி லதா (30).

    இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் லதா ஆசிரியை வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இந்த நிலையில் நேற்று ஊருக்கு வந்த லதா, தான் சேலத்தில் வசிப்பதாகவும், துணிகளை எடுத்துச் செல்ல வந்ததாகவும் கூறினார்.

    அதன்படி துணிகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் அருகே லதா சென்றபோது, மோட்சே மறித்து தகராறு செய்தார். மேலும் அவர் இரும்பு கம்பியாலும் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த லதா ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு சண்முகசுந்தரம், அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். லதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி மோட்சேயை கைது செய்தனர்.
    ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #KumbakonamMurder
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம் பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மகள் வசந்தபிரியா (வயது 25). இவர் கும்பகோணம் லால்பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கும், வலங்கைமானை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே கடந்த 28-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற தை மாதத்தில் திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் கும்பகோணம் அருகே உள்ள உமாமகேஸ்வரபுரம் செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் நேற்று மாலை மர்மமான முறையில் வசந்தபிரியா கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் டி.எஸ்.பி.க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், மணிவேல், மகாதேவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வசந்தபிரியா உடலை கைப்பற்றினர். பிறகு பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்யப்பட்ட இடத்தில் 2 செல்போன்கள் மற்றும் புதிய சிறிய வடிவிலான பேனாகத்தி கிடந்தது.

    தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் ஆசிரியை வசந்தபிரியா, ஒரு வாலிபருடன், மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    ஆசிரியை வசந்தபிரியா

    இதனால் மோட்டார் சைக்கிளில் வசந்தபிரியாவை அழைத்து சென்ற வாலிபர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் வசந்தபிரியாவின் உறவினர்களிடம் வாலிபரின் உருவபடத்தை காட்டி அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டனர்.

    அப்போது உறவினர்கள் அந்த வாலிபர், வசந்த பிரியாவின் மாமா மகன் நந்தகுமார் (வயது 34) என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பதுங்கி இருந்த நந்தகுமாரை நேற்று இரவு போலீசார் கைது செய்தனர். பிறகு அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    ஆசிரியை வசந்த பிரியாவை நந்தகுமார் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் வசந்தபிரியாவுக்கு, வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் நந்தகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நேற்று மாலை ஆசிரியை வசந்தபிரியாவிடம் நைசாக பேச்சு கொடுத்து அழைத்து சென்றார். அங்கு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் வசந்தபிரியா மறுத்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் பேனா கத்தியால் கழுத்தில் குத்தி அவரை கொலை செய்தது தெரியவந்தது.

    ஒருதலை காதலால் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×