search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீர்த்தவாரி"

    பௌர்ணமி விசாக நாளில் இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் முருகன் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கோடியக்காடு குழகர் கோயிலில் வைகாசி பெருவிழாவில்நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது

    வேதாரண்யம் தாலுகா கோடியக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது குழகர் கோவில் என்னும் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா ஜூன்-5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முக்கிய திருவிழாவான தேர் திருவிழா கடந்த 13ம் தேதி நடைபெற்றதுநேற்று பௌர்ணமி விசாக நாளில்இடும்பன் சன்னதி அருகே அமிர்த புஷ்கரணியில் நடைபெற்ற தீர்த்தவாரிக்கு முருகன் எழுந்தருளி சென்று தீர்த்தவாரி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து 3 பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், அக்னி மற்றும் சூரியன் என்ற பெயர்களில் குழந்தை உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த குளங்களில் நீராடி சிவனை வழிபட்டால் குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நேற்று ஆனிமாத பிறப்பையொட்டி 3 குளங்களில் அஸ்திர தேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமானின் 3 கண்களில் இருந்து மூன்று பொறிகள் தோன்றி விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களால் மூன்று குளங்கள் உருவானதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    3 குளங்களில் நீராடி சுவேதாரண்யேஸ்வரரை வழிபட்டால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். சிறப்பு பெற்ற இந்த கோவிலில் அமாவாசையையொட்டி 3 குளங்களில் அஸ்திரதேவர் தீர்த்தவாரி நடந்தது.

    இதையொட்டி அஸ்திர தேவருக்கு மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தீர்த்தவாரி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், மேலாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ நாட்களில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    பிரம்மோற்சவம் முக்கிய விழாக்களான கருட சேவை மற்றும் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது. இதனையடுத்து நேற்று வரதராஜ பெருமாள் மேல் பல்லக்கில் காஞ்சீபுரம் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்து மீண்டும் கோவிலை அடைந்தார்.

    பின்னர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஆனந்த சரஸ் குளத்தில் பெருமாள் தீர்த்தவாரி கண்டார். அப்போது குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பெருமாளை வழிபட்டனர்
    ×