search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கம்"

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் தங்கம் வாங்குவோர் மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்நிலையில் வார தொடக்கமான முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,660-க்கும் சவரன் ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,280-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.88-க்கும் பார் வெள்ளி ரூ.88,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் விற்பனை.
    • தங்கம் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி சவரன் விலை ரூ.50 ஆயிரத்தை எட்டியது. இதையடுத்து வந்த நாட்களிலும் தங்கம் விலை உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை ஜெட் வேகத்தில் ஏறியுள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,615-க்கும் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 2ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.87-க்கும் பார் வெள்ளி ரூ.87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகிறது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,510-க்கும் சவரன் ரூ.52,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.85-க்கும் பார் வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.
    • தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.

    சென்னை

    தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்திலேயே பயணிக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் ஒரு பவுன் ரூ.46 ஆயிரம் முதல் ரூ.47 ஆயிரம் வரை விற்பனை ஆனது. அதன் பின்னர் ஏற்ற, இறக்கத்துடனேயே தங்கம் விலை இருந்து வந்தது.

    அதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தில் (மார்ச்) இருந்து விலை கிடுகிடுவென உயரத்தொடங்கியது. யாரும் எதிர்பார்த்திராத வண்ணம் ஒரு பவுன் தங்கம் ரூ.48 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை கடந்த மாதம் 5-ந் தேதி பதிவு செய்தது. அதற்கு பிறகு விலை அதிகரித்து, கடந்த 9-ந் தேதி ஒரு பவுன் ரூ.49 ஆயிரத்தையும் கடந்தது.

    அதனைத் தொடர்ந்து விலை குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்திலேயே தங்கம் விலை காணப்பட்டது. இந்த விலை உயர்வால் கடந்த மாதம் 28-ந் தேதி ஒரு பவுன் ரூ.50 ஆயிரம் என்ற வரலாறு காணாத உயர்வை எட்டியது. அதற்கு மறுநாளே (29-ந் தேதி) பவுனுக்கு ரூ.1,120 அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.51 ஆயிரம் என்ற நிலையையும் ஒரே நாளில் தாண்டியது.

    தங்கத்தின் விலை உயர்வு இல்லத்தரசிகளை கலக்கம் அடையச் செய்தது. இப்படியே போனால், ஏழை, நடுத்தர மக்களுக்கு தங்கம் ஒரு கனவாக மாறிவிடுமோ? என்று அவர்கள் நினைக்கும் அளவுக்கு அதன் விலை இருந்தது. அதன் பின்னர் ஓரிரு நாட்கள் விலை குறைந்த நிலையில், கடந்த 1-ந் தேதி மீண்டும் அதிகரித்து, ஒரு பவுன் ரூ.52 ஆயிரத்தை தொடும் அளவுக்கு சென்றது. ஓரிரு நாட்களில் ரூ.52 ஆயிரத்தை தொட்டு விடும் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து, ஆறுதலை தந்தது.

    நேற்று ஏறுமுகத்தில் தங்கம் விலை காணப்பட்டு, மீண்டும் புதிய உச்சத்தை எட்டிப்பிடித்து இருக்கிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 360 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலையில் 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனையாகிறது.

    • தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.200 குறைந்தது.
    • தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும், 2-ந்தேதி ரூ.51,640-க்கும், நேற்று ரூ. 51,440-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தங்கத்தை போலவே வெள்ளியும் உயர்ந்து வருகிறது.
    • வெள்ளி கிராமுக்கு 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த மாதம் 28-ந்தேதி வரலாற்றிலேயே முதன்முறையாக சவரன் ரூ.50,000-க்கு விற்பனையானது. மறுநாள் ரூ.51,120-க்கும், 30 மற்றும் 31-ந்தேதிகளில் ரூ.50,960-க்கும் நேற்று ரூ.51,640-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும் கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளியும் உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி கிராமுக்கு 40 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.82-க்கும் கிலோவுக்கு 400 ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ.82,000-க்கும் விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.51,120-க்கு விற்பனையானது. இதனால் தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    இந்நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,370-க்கும் சவரன் ரூ.50,960-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.81-க்கும் கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.81 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.
    • ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாகனியாகவே போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் ஏற்பட்டபோது தங்கம் விலை உயர ஆரம்பித்தது. ரஷியா-உக்ரைன் இடையிலான போரும் தீவிரம் அடைந்ததால் சர்வதேச அளவில் பல நாடுகளில் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இது தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

    அமெரிக்காவில் உள்ள வங்கிகளின் தலைமை வங்கியான மத்திய பெடரல் வங்கி வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்தாமல் இருக்கிறது. மேலும் வரும் காலங்களில் அந்த வட்டி தொகையை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. இதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் வங்கியில் உள்ள பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர். இது மற்ற நாடுகளின் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கி உள்ளது.

    இதற்கிடையே இந்தியாவில் கடந்த சில மாதங்களாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கி இருக்கிறார்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தவர்களும், வங்கிகளில் பணத்தை அதிகளவு இருப்பு வைத்திருந்தவர்களும் அவற்றை எடுத்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் மும்பை பங்கு வர்த்தகத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டது. இதனால் பங்கு சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் என்ற தகவல் பரவியது. இதனால் பலரும் பங்கு சந்தையில் முதலீடு செய்யாமல் அதற்கு பதில் தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். பொருளாதாரம் பாதிக்கப்படும் போது பங்கு சந்தைகளும் வீழ்ச்சியை சந்திக்க தொடங்கி விடும்.

    இத்தகைய காரணங்களால் கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. கடந்த 21-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.760 உயர்ந்தது. அதன் பிறகு குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது.

    நேற்று தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,250-க்கு விற்பனையானது. ஒரு பவுன் விலை 50 ஆயிரம் ரூபாயை எட்டியது. இது நடுத்தர மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக தங்கத்தின் விலை மிக பயங்கரமாக அதிகரித்தது. மக்களை கதிகலங்க வைக்கும் வகையில் இன்றைய தங்கம் விலை உயர்வு இருந்தது. ஒரு கிராம் 140 ரூபாய் அதிகரித்தது. இதனால் தங்கம் விலை பவுனுக்கு 1,120 ரூபாய் அதிகரித்து ரூ.51,120-க்கு விற்பனையானது.

    தங்கம் விலை வரலாற்றில் முதன் முறையாக பவுன் ரூ.51,120-ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் கிராம் ரூ. 190-ம், பவுனுக்கு ரூ. 1,520-ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மட்டுமின்றி நகை வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நகை வியாபாரிகள் கூறுகிறார்கள்.

    தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இனி திருமணம் போன்ற விசேஷ நாட்களில் தங்க நகைகளை வாங்க முடியுமா? என்ற ஏக்கத்தையும் அவர்கள் மனதில் எழுந்துள்ளது.

    பொதுவாக உறவினர் விட்டு நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலான நடுத்தர வர்க்கத்தினர் ஒரு கிராம் அல்லது 2 கிராமில் கம்மல் மூக்குத்தி, மோதிரம் போன்றவற்றை வாங்கி பரிசாக கொடுப்பது உண்டு. 2 கிராம் வாங்கினாலும் ரூ.15 ஆயிரத்துக்கு மேல் கொடுக்க வேண்டி இருப்பதால் நடுத்தர மக்கள் இத்தகைய நகைகளை வாங்குவதற்கு தயங்குவார்கள் என்று நகை வியாபாரிகள் கருதுகிறார்கள்.

    மேலும் ஏழைகளுக்கு தங்கம் என்பது எட்டாகனியாகவே போய் விடுமோ என்ற அச்சமும் எழுந்து இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்தனர். அதே சமயத்தில் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் நகை வியாபாரிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது என்ற கருத்தும் நிலவுகிறது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று கிராம் 30 காசுகள் உயர்ந்து ரூ.80.80-க்கும், கிலோ 300 ரூபாய் அதிகரித்து ரூ. 80,800-க்கும் விற்பனை ஆகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சவரன் ரூ.50 ஆயிரத்தை எட்டி தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,250-க்கும் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும், பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 19-ந்தேதி சவரன் ரூ.49,080-க்கு விற்பனையானது. அதன் பின் சவரன் ரூ.49ஆயிரத்திற்கு மேலேயே விற்பனையாகி வருகிறது.

    இந்நிலையில் இன்று சவரன் விலை மேலும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,720-க்கும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,215-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 30 பைசாக்கள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கும், பார் வெள்ளி ரூ.80,200-க்கும் விற்கப்படுகிறது.

    • வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த சனிக்கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,480 விற்பனையானது.

    இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,640-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,205-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கும் பார் வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனையாகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து சற்று ஆறுதல் அளித்தது.

    இந்நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,185-க்கும் சவரன் ரூ.49,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ×