search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதயாத்திரை"

    • பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.
    • 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    வந்தவாசி:

    மத்திய பிரதேச மாநிலத்தில் கங்காப்பூர் என்ற இடத்தில் கோலோ கோதாம் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா தாக்கத்திலிருந்து விடுபடவும் இது போன்ற கொடிய நோய் மீண்டும் உலகம் சந்திக்க கூடாது என்ற நோக்கத்திலும் ஆசிரமத்தில் உள்ள சீடர்கள் 3 பேர் சாலையில் ஊர்ந்தப்படி ராமேஸ்வரம் வரை யாத்திரை செல்ல முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்களுடைய பாதயாத்திரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

    சீடர்கள் 3 பேரும் சாலையில் தெர்மாகோல் சீட் மீது படுத்து ஊர்ந்த படி ராமேஸ்வரம் நோக்கி பாதரையாத்திரையாக செல்கின்றனர்.

    இவர்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை சென்றனர். இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

    உலக நன்மைக்காகவும் கொரோனா போன்ற கொடிய நோய் மீண்டும் பரவக்கூடாது என்ற நோக்கத்திலும் உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4,000 கிலோ மீட்டர் தெர்மாகோல் மூலம் நமஸ்காரம் செய்து கொண்டே யாத்திரை செல்கிறோம்.

    தினமும் 10 கிலோமீட்டர் வரை செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • உலக நலன் வேண்டி அறுபடை வீடுகளுக்கு செல்லும் பாதயாத்திரை குழுவினர்.
    • 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்டமிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

    திருப்பரங்குன்றம்

    உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை வேண்டியும் உலக மக்கள் சுபிட்சமாக வாழ வலைய பட்டி சித்தர் பச்சை காவடி ஐயா தலைமையில் 26 பேர் நடை பயண பாதயாத்திரை குழு திருப்பரங்குன்றத்திற்கு வந்தது.

    இவர்கள் கடந்த 7-ந் தேதி சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டு 11-ந் தேதி முருகனின் ஆறாம் படை வீடான மதுரையில் உள்ள பழமுதிர் சோலைக்கு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நேற்று இரவு திருப்பரங் குன்றத்திற்கு வந்து தங்கிய அவர்கள் இன்று காலையில் திருப் பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தனர்.

    இதுகுறித்து வலையபட்டி சித்தர் பச்சை காவடி ஐயா நிருபர்களிடம் கூறியதாவது:- எனது 16 வயதில் அய்யப்பன் கோவி லில் தொடங்கிய இந்த பாத யாத்திரை தற்போது வரை நடைபெற்று வரு கிறது. இதுவரை 12 முறை ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை சென்றும், 16 முறை திருப்பதி மற்றும் அய்யப்பன் கோவிலுக்கும் நடந்தே சென்று சாமி தரி சனம் செய்தேன்.

    தற்போது உலக நலன் வேண்டி, அனைத்து உயிர் களும் இன்புற்று வாழ வேண்டியும் அறுபடை வீடு களுக்கு பாதயாத்திரை பயணத்தை கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கினோம். அதன்படி முதலில் பழமுதிர் சோலை தொடர்ந்து திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலைக்கு சென்று திருத்தணியில் எங்களது நடைப் பயணத்தை நிறைவு செய் வோம். சுமார் 1,157 கிலோ மீட்டர் 67 நாட்கள் திட்ட மிட்டு இந்த பாதயாத்திரை பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். இடை யில் கொரோனா காரண மாக 2 ஆண்டுகள் செல்ல முடியவில்லை.

    தற்போது 6-வது ஆண்டாக இந்த ஆன்மீக யாத்திரையை நிறைவு செய் யும் விதமாக கடந்த 7-ம் தேதி பயணத்தை தொடங்கி னோம். தினமும் இரவு ஒரு மணி அளவில் நடக்க ஆரம் பித்து காலை 9 மணி வரை நடை பயணம் செல்வோம். பின்பு நாங்கள் திட்டமிட்ட இடத்தில் தங்கி பஜனை பாடிவிட்டு தொடர்ந்து அடுத்த இடத்திற்கு செல் வோம். முருகனின் அருளால் இந்த பயணம் சிறப்பாக அமையும் என நம்புகிறோம்

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.
    • இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வுரிமை வளர்ச்சி அடிப்படையில் முதன்மை மாவட்ட மாக உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை பொது மக்களிடம் விளக்கிக்கூறும் வகையில் 3 இடங்களில் இருந்து பாத யாத்திரை தொடங்கியது.

    வத்திராயிருப்பில் பாதயாத்திரையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற பிரமாண்ட பேரணி திருப்பூரில் நடைபெற உள்ளது. அந்தப்பேரணியை அண்ணாமலை வந்து பார்க்கட்டும். அப்போது அவருக்கு தெரியும் கம்யூ னிஸ்டு கட்சிக்கு சுவடு இருக்கிறதா?, இ்ல்லையா? என்று.

    விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கி றது. எனவே பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களு க்கும் சட்டரீதியான உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநில அரசு செய்ய க்கூடிய நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும். மக்களுக்கு எதிராக ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக தயக்க மில்லாமல் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி தோழமை கட்சியாக நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொண்ணு பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×