search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pedestrian"

    • பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூ. செயலாளர் முத்தரசன் பேட்டியளித்தார்.
    • இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்களின் வாழ்வுரிமை வளர்ச்சி அடிப்படையில் முதன்மை மாவட்ட மாக உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை பொது மக்களிடம் விளக்கிக்கூறும் வகையில் 3 இடங்களில் இருந்து பாத யாத்திரை தொடங்கியது.

    வத்திராயிருப்பில் பாதயாத்திரையை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற ஆகஸ்டு 9-ந் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற பிரமாண்ட பேரணி திருப்பூரில் நடைபெற உள்ளது. அந்தப்பேரணியை அண்ணாமலை வந்து பார்க்கட்டும். அப்போது அவருக்கு தெரியும் கம்யூ னிஸ்டு கட்சிக்கு சுவடு இருக்கிறதா?, இ்ல்லையா? என்று.

    விருதுநகர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் பட்டாசு மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கி றது. எனவே பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். பட்டாசு தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களு க்கும் சட்டரீதியான உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநில அரசு செய்ய க்கூடிய நல்ல திட்டங்களை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கும். மக்களுக்கு எதிராக ஏதாவது பிரச்சினை வந்தால் உடனடியாக தயக்க மில்லாமல் விமர்சனம் செய்வோம். தி.மு.க.வுடன் கம்யூனிஸ்டு கட்சி தோழமை கட்சியாக நீடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமை தாங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பொண்ணு பாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×