search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup cricket"

    • சூர்யகுமார் யாதவ் ஃபார்ம் குறித்து எதிரணிகள் கலக்கம் அடைந்துள்ளன.
    • குரூப் 12 சுற்றில் மூன்று அரைசதங்கள் விளாசியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் நாளை அடிலெய்டில் நடைபெற இருக்கும் 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து அணியின் ஒரே கவலை, சூர்யகுமாரை எப்படி அவுட்டாக்குவதுதான். சூர்ய குமார் வித்தியாசமாக ஷாட்டுகளை இவ்வளவு எளிதாக எப்படி விளையாடுகிறார் என்பதுதான், கிரிக்கெட்டில் உலகில் தற்போதைய பேச்சாக இருக்கிறது.

    இங்கிலாந்து எதிராக நாளை அரையிறுதியில் இந்தியா விளையாட இருக்கும் நிலையில், இன்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

    அப்போது சூர்யகுமார் யாதவை பெரிய அளவில் இந்தியா நம்புகிறது. இது அவருக்கு நெருக்கடியாக அமையாதா? என்பது போல் கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    தன்னுடன் எந்த வகையான பேக்கேஜ்-ஐயும் எடுத்துச் செல்லாத நபரை போன்றவர் சூர்யகுமார் யாதவ். அவருடைய சூட்கேஸை மட்டுமல்லை. நான் சொல்வதின் அர்த்தம், அவர் ஏராளமான சூட்கேஸ்களை வைத்துள்ளார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் ஷாப்பின் செய்வதை மிகவும் விரும்புவார். ஆனால், கூடுதல் சுமையை (extra pressure) சுமக்கும்போது, அவரிடம் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் விளையாடும்போது அதை நீங்கள் பார்க்க முடியும். கடந்த ஒரு வருடமாக அவர் இப்படித்தான் விளையாடி கொண்டிருக்கிறார்.

    பேட்டியளிக்கும்போது அவரது பேச்சு உங்களுக்கு கேட்குமா என்று எனக்குத் தெரியாது. அதே பாணியில்தான் அவர் பேட்டிங் செய்கிறார்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்தார்.

    • பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார்.
    • பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது.

    சிட்னி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 12 சுற்று நேற்று முன்தினம் முடிவடைந்தன. இதன் முடிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா , தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நெதர்லாந்து, வங்காளதேசம், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஆப்கா னிஸ்தான் ஆகியவை வெளியேற்றப்பட்டன.

    2 நாட்கள் ஓய்வுக்கு பிறகு அரை இறுதி ஆட்டம் நாளை தொடங்குகிறது. சிட்னியில் புதன்கிழமை நடைபெறும் முதல் அரை இறுதி போட்டியில் குரூப் 1 பிரிவில் முதல் இடத்தை பிடித்த நியூசிலாந்து -குரூப் 2 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளது.இதற்கு முன்பு கடந்த உலக கோப்பையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.

    அந்த அணி ஒரேயொரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றது. இங்கிலாந்திடம் 20 ரன்னில் தோல்வி அடைந் தது. ஆஸ்திரேலியா (89 ரன்), இலங்கை (65 ரன்), அயர்லாந்து (35ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆப்கானிஸ்தானுடனான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    நியூசிலாந்து அணியின் பேட்டிங்கில் பிலிப்ஸ் (195 ரன்), கான்வே, கேப்டன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் சான்ட்னெர் (8 விக்கெட்), சவுத்தி, பெர்கு சன் (தலா 7 விக்கெட்) ஆகி யோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    பாபர்அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 3-வது தடவையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்கையில் இருக்கிறது. அந்த அணி இதற்கு முன்பு 2007, 2009-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்து இருந்தது. இதில் 2009-ல் இலங்கையை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. 2007-ல் இந்தியாவிடம் தோற்று இருந்தது.

    பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவை 33 ரன்னிலும், நெதர்லாந்தை 6 விக்கெட்டிலும், வங்காளதேசத்தை 5 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்தியாவிடம் 4 விக்கெட் வித்தியாசத்திலும், ஜிம்பாப்வேயிடம் 1 ரன்னிலும் தோற்றது.

    அந்த அணியில் முகமது ரிஸ்வான், ஷான் மசூதி, இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர். கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கில் மோசமான நிலையில் காணப்படுகிறார். பாகிஸ்தான் அணியின் பலமே பந்துவீச்சுதான். ஷதாப்கான் (10 விக்கெட்), ஷகீன்சா அப்ரிடி (8 விக்கெட்), முகமது வாசிம் (7விக்கெட்) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக கடந்த மாதம் 14-ந்தேதி நடந்த போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    இறுதிப் போட்டிக்குள் நுழைய நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் கடுமையாக போராடும் என்பதால் நாளைய அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
    • அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.

    அடிலெய்ட்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் அடிலெய்டு மைதானத்தில் நாளை மறுநாள் (10-ந் தேதி) நடக்கிறது.

    இதில் ரோகித்சர்மா தலைமையிலான இந்தியா-பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் அடிலெய்டு மைதானத்தில் இன்று காலை தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது.

    வலை பயிற்சியின்போது அவருக்கு வலது முன்னங் கையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தால் அவர் வலியால் துடித்தார். உடனே பயிற்சியை விட்டு வெளியேறினார்.

    அவரது கையில் ஐஸ் கட்டி வைக்கப்பட்டது. ஐஸ் கட்டியை தடவி அவருடன் காயம் குறித்து பயிற்சி குழுவை சேர்ந்த பேடி அப்டன் பேசிக் கொண்டு இருந்தார். ரோகித் சர்மாவின் காயத்தின் தன்மை குறித்து பின்னர் ஆய்வு செய்யப்படும்.

    இந்த காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி போட்டியில் ரோகித் சர்மா ஆடுவாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    போட்டிக்கு இன்னும் 48 மணி நேரம் இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அணி நிர்வாகம் கருதுகிறது. அவரது காயம் குறித்து மருத்துவக் குழு ஆய்வு செய்த பிறகே முடிவு தெரிய வரும்.

    ரோகித்சர்மா விளையாடாமல் போனால் மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.
    • நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நேற்றுடன் குரூப் ஆட்டங்கள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    முதல் அரையிறுதியில் நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளும், 2-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டி20 போட்டியை பொறுத்த வரையில், டாஸ் முக்கியத்துவம் பெறும். போட்டி இரவில் நடப்பதால் பனித்துளி ஆதிக்கம் செலுத்தும். இதனால், 2-வது பந்து வீசும் அணிக்கு பாதகமாக இருக்கும். இதனால் டாஸ் வென்றாலே கண்ணை மூடிக்கொண்டு கேப்டன்கள் பந்து வீச்சைதான் தேர்வு செய்வார்கள்.

    இதற்கு உதாரணம் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த உலகக் கோப்பையை சொல்லலாம். டாஸ் வென்ற அணிகளே பெரும்பாலும் வெற்றி பெற்றன.

    இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக டாஸ் தோற்றதுடன் போட்டியில் தோல்வியடைந்து தொடக்க சுற்றோடு வெளியேறியது.

    தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவில் டாஸ் வென்று அணிகளுக்கு ஒன்றிரண்டு போட்டிகளில் சாதகமாக அமைந்திருக்கலாம்.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதும் அடிலெய்டு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை கொடுத்துள்ளது. இந்த உலகக் கோப்பையில் ஆறு போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதற்கு முன் ஐந்து போட்டிகளில் முடிந்துள்ளன. இந்த 11 போட்டிகளிலும் டாஸ் வென்ற அணி தோல்வியை தழுவியுள்ளது.

    நேற்று நெதர்லாந்து அணிக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து தோல்வியை தழுவியது.

    இதனால் 10-ந்தேதி (வியாழக்கிழமை) மோதும் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின்போது, அப்போதும் டாஸ் வென்றேயாக வேண்டும் என நினைக்கும் கேப்டன்கள், இந்த போட்டியில் டாஸ் வெல்லக் கூடாது என நினைக்கலாம்.

    என்ன இருந்தாலும், அன்றைய தினம் யாருக்கு சிறந்த நாளாக அமைகிறதோ, அவர்களே வெற்றி வாகை சூடுவார்கள்.

    • இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
    • ரன்ரேட் முறையில் ஆஸ்திரேலியா அணி உலக கோப்பையில் இருந்து வெளியேறியது.

    England won by 4 wkts

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. குரூப் 1-ல் இன்றைய கடைசி சுற்று லீக் ஆட்டத்தில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிசங்கா 67 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களான ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 74 ரன்கள் குவித்தது. இதனால் 15 ஓவரில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 ரன்னில் முதல் விக்கெட்டை இழந்த இங்கிலாந்து அணி 111 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து ஸ்டோக்ஸ் - சாம் கரன் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சாம் கரன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். 12 பந்துகளில் 13 ரன்கள் எடுக்க வேண்டியது நிலையில் கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது.

    கடைசி ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 44 ரன்கள் எடுத்தார்.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா அணி உலககோப்பையில் இருந்து வெளியேறியது.

    • அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்
    • இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா - குசல் மெண்டிஸ் களமிறங்கினர். பவர் பிளேயில் இந்த ஜோடி அதிரடியாக விளையாடினர். மெண்டிஸ் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த தனஞ்ஜெயா 9 ரன்னிலும் அசலங்கா 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய நிசங்கா 45 பந்தில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த சனகா 3, ராஜபக்சா 22, ஹசரங்கா 9, கருரத்ணே 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
    • இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

    சூப்பர் 12 சுற்றில் விளையாடி வரும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி குரூப்-2 பிரிவில் உள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசம், ஜிம்பாப்வே, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

    இந்திய அணி மெல்போர்ன் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்திலும், சிட்னியில் நடைபெற்ற 2-வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. பெர்த்தில் நடந்த 3-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. 4-வது போட்டியில் வங்காள தேசத்தை 5 ரன்னில் வென்றது.

    இந்திய அணி 5-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை நாளை (6- ந் தேதி ) எதிர் கொள்கிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்திய அணி 6 புள்ளியுடன் முதல் இடத்தில் உள்ளது. ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி 8 புள்ளியுடன் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இருக்கிறது. அரை இறுதியில் நுழைய இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

    வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் திக்கு முக்காடிதான் வெற்றி பெற்றது. அதாவது தோல்வியில் இருந்து தப்பி வெற்றி கிடைத்தது.

    இதனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும். ஜிம்பாப்வே அணி எல்லா வகையிலும் இந்தியாவுக்கு சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென் ஆப்பிரிக்கா-நெதர்லாந்து, பாகிஸ்தான்-வங்காள தேசம் மோதும் போட்டிக்கு பிறகுதான் இந்தியா விளையாடும் ஆட்டம் இருப்பதால் அதற்கு ஏற்ற வகையில் ஆடும்.

    பேட்டிங்கில் விராட் கோலி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். 4 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 220 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோல சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து நிலையாகவும், அதிரடியாகவும் விளையாடி வருகிறார்.

    லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் திரும்பி இருப்பது அணிக்கு சாதகமே.

    தினேஷ் கார்த்திக் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா நாளைய ஆட்டத்திலாவது அவருக்கு பதிலாக ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று எதிர் பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் (9 விக்கெட்), ஹர்த்திக் பாண்ட்யா (6 விக்கெட்), முகமது ஷமி (4 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர்.

    ஜிம்பாப்வே அணி ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்து விட்டது. அந்த அணி 3 புள்ளியுடன் இருந்தது. பாகிஸ்தானை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப் பட்டது. வங்காளதேசம், நெதர்லாந்து அணிகளிடம் தோற்று இருந்தது.

    ஜிம்பாப்வே அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    • இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும்.
    • இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது.

    சிட்னி:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்1-ல் இன்று (சனிக்கிழமை) சிட்னியில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து-இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இதுவரை 5 புள்ளிகள் (2 வெற்றி, ஒரு தோல்வி, ஒரு முடிவில்லை) பெற்று இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்றால் அரைஇறுதிக்கு முன்னேறி விடும். தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டும்.

    அதே சமயம் 4 புள்ளியுடன் உள்ள (2 வெற்றி, 2 தோல்வி) தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி ஏற்கனவே அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அழுத்தம் இன்றி விளையாடுவார்கள். தொடரை வெற்றியோடு நிறைவு செய்யும் முனைப்புடன் அவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    இந்த ஆட்டத்தில் இலங்கை வாகை சூடினால், இங்கிலாந்து வெளியேறுவது மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவுக்கு அரைஇறுதிக்கான கதவு திறக்கும். அதனால் இலங்கை வெற்றிக்காக ஆஸ்திரேலிய ரசிகர்களும் பிரார்த்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    ஆனாலும் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பலம் வாய்ந்த அணியாக திகழும் இங்கிலாந்தை இலங்கை சமாளிக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இவ்விரு அணிகளும் இதுவரை 13 இருபது ஓவர் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 9-ல் இங்கிலாந்தும், 4-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. 20 ஓவர் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை அணி, இங்கிலாந்தை வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    இந்த ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைக்கும் என்பதால் ஹசரங்கா, தீக்‌ஷனா ஆகியோரின் சுழல் தாக்குதலை இலங்கை அதிகமாக நம்பி இருக்கிறது. போட்டிக்கு மழை ஆபத்து இல்லை.

    இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • ரஷித் கான் அதிரடியாக விளையாடி 48 ரன்கள் சேர்த்தார்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணி வீரர்கள் அதிரடியால் ஸ்கோர் 200-க்கு மேல் வரும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் துல்லியமான் பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது.

    அதிகப்பட்சமாக மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் - கானி ஆடினர். கானி தொடக்க முதலே தடுமாறினார். அவர் 7 பந்துகளில் 2 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த இப்ராஹிம் பொறுமையாக விளையாடினார். ஒருபக்கம் அதிரடி காட்டிய குர்பாஷ் 17 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும்.

    இதனையடுத்து இப்ராஹிம் - குல்பாடின் நைப் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற சதவிதத்தில் ஆப்கானிஸ்தான் 66 சதவிதமும் ஆஸ்திரேலியா 34 சதவிதமும் இருந்தது.

    இந்நிலையில் 13-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் எடுக்க முயற்சித்த போது குல்பாடின் நைப் ரன் அவுட் ஆனார். 2-வது பந்தில் இப்ராஹிம் 26 ரன்னிலும் 4-வது பந்தில் நஜிப்புல்லா 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த ஓவரில் நபி 1 ரன்னில் அவுட் ஆனார்.

    இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. 14.3 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 103 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அடுத்ததாக ரஷித்கான் -ரசூல் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரஷித் கான் 3 சிக்சர்களை விளாசினார்.

    கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்டது. ரஷித் கானின் அதிரடியில் கடைசி 2 பந்தில் ஆப்கானிஸ்தானுக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தில் 2 ரன்னும் கடைசி பந்தில் பவுண்டரியும் எடுக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கடைசி வரை வெற்றிக்கு போராடிய ரஷித் கான் 23 பந்தில் 48 ரன்னில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் சம்பா, ஹசில்வுட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிதாஸ் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் மற்றும் டிம் டேவிட் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. மிட்செல் ஸ்டார்க்கு பதிலாக ரிச்சர்சன் அணியில் இடம் பிடித்தார். கேப்டனாக மேத்யூ வேட் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

    முதலில் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக டேவிட் வார்னர் - கீரின் பேட்டிங் செய்தனர். கீரின் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் மார்ஸ் - டேவிட் வார்னர் ஜோடி அதிரடியாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 50 எடுத்த போது வார்னர் 25 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ஸ்மித் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஸ் 45 ரன்னிலும் ஸ்டோய்னிஸ் 25 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த கேப்டன் வேட் 6 ரன்னிலும் போல்ட் ஆனார்.

    கடைசி வரை போராடிய மேக்ஸ்வெல் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    உலக கோப்பை கிரிக்கெட்டில் குரூப்-1 பிரிவில் இன்று காலை அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

    இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. ஆனால் பால் ஸ்டிரிசிங் (37 ரன்) பால்பிர்னி (30 ரன்) அவுட் ஆன பிறகு விக்கெட்டுகள் சரிந்தது. அயர்லாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 150 ரன்னே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து 35 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து தரப்பில் பெர்குசன் 3 விக்கெட்டும், சோதி, டிம்சவுத்தி, சான்ட்னெர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அரை இறுதி வாய்ப்பு கிட்டதட்ட உறுதியாகி விட்டது. அந்த ரன் ரேட் வலுவாக இருப்பதாக அரை இறுதிக்கு செல்வதில் எந்த சிக்கலும் இருக்காது.

    • வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார்.
    • அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

    அடிலெய்டு:

    8-வது இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 'சூப்பர்-12' சுற்றில் விளையாடும் 12 அணிகள் இரண்டாக பிரிக்கப்பட்டன.

    சூப்பர்-12 சுற்றின் ஆட்டங்கள் 6-ந் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால் இதுவரை எந்த அணியும் அரை இறுதியை உறுதி செய்யவில்லை.

    குரூப்-1 பிரிவில் ஆப்கானிஸ்தானும், குரூப்-2 பிரிவில் நெதர்லாந்தும் வெளியேற்றப்பட்டுள்ளன. குரூப்-1 பிரிவில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது.

    காலை 9.30 மணிக்கு அடிலெய்டில் தொடங்கிய போட்டியில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. நியூசிலாந்து அணி 4 ஆட்டத்தில் 2 வெற்றி, ஒரு தோல்வி பெற்றது. ஒரு ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. 5 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அரை இறுதியை உறுதி செய்து விடலாம் என்ற சூழலில் களம் இறங்கியது.

    மூன்று புள்ளிகளுடன் (ஒரு வெற்றி, 2 தோல்வி, ஒரு ஆட்டம் முடிவில்லை) உள்ள அயர்லாந்து அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு முடிந்து போய்விட்டது.

    டாஸ் ஜெயித்த அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பின் ஆலென், டிவான் கான்வே களம் இறங்கினர்.

    முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 52 ரன்கள் குவித்தது. ஃபின் ஆலன் 32 ரன்னிலும் கான்வே 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்த வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். பிலிப்ஸ் 9 பந்தில் 17 ரன்னிலும் வில்லியம்சன் 35 பந்தில் 61 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

    அடுத்துவந்த நீசம், சட்னர் 0 ரன்னில் ஆட்டமிழந்தனர். மிட்செல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் விளாசினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

    அயர்லாந்து தரப்பில் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். 

    ×