என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » supplementary
நீங்கள் தேடியது "supplementary"
மத்திய அரசின் ரூ.85,949 கோடிக்கான துணை மானியக் கோரிக்கை மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. #SupplementaryDemand #ArunJaitley
புதுடெல்லி:
கூடுதல் செலவினத்தை மேற்கொள்ள வசதியாக, இரண்டாம் கட்ட துணை மானிய கோரிக்கை இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி அருண் ஜெட்லி இதனை தாக்கல் செய்தார். அதில், 2018-19ம் நிதியாண்டில் கூடுதல் செலவினத்தை மேற்கொள்வதற்கு ரூ.85,948 கோடியே 86 லட்சம் தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதில், கிட்டத்தட்ட பாதி தொகையானது பொதுத்துறை வங்கிகளுக்கு நிதி வழங்குவதற்காக பயன்படுத்தப்படும். அரசு பங்கு பத்திரங்கள் மூலம் 41000 கோடி ரூபாய் அரசுத்துறை வங்கிகளில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை சரிவிலிருந்து மீட்பதற்கு 2345 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துணை மானியக்கோரிக்கை மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும்.
ஆனால், துணை மானியக்கோரிக்கை மீது விவாததம் தொடங்குவதற்கு முன், ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தியது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்தார். #SupplementaryDemand #ArunJaitley
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X