search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student molestation"

    கடலூரில் பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த மீனவர் கைது செய்யப்பட்டார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் செல்லங்குப்பம் ஒட்டகூத்தர்தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 22). மீனவர். இவர் அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியை சுப்புராயலுநகருக்கு அழைத்துச்சென்றார். அங்கு அவர் மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. 

    இது பற்றி அந்த மாணவியின் தாய் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர்.

    போத்தனூர் அருகே 8-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    போத்தனூர் அருகே உள்ள கருணாநிதிநகரை சேர்ந்தவர் குமார்(வயது 35). கூலி தொழிலாளி. இவர் அப்பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ஒருவரை காதலிப்பதாக கூறினார். மாணவி மறுப்பு தெரிவித்த போது, என்னை காதலிக்க வில்லை என்றால் உன் மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டினார். இதனால் மாணவி பயந்து போனார்.

    இதை பயன்படுத்தி குமார், மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். நடந்த சம்பவங்களை மாணவி தனது தாயிடம் கூறி அழுதார். அவர் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் குமார் மீது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    இதுதொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய கிழக்கு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×