search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student missing"

    கீரனூர் அருகே தேர்வு தோல்வி பயத்தால் 10-ம் வகுப்பு மாணவி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த கோட்ரப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் லாவண்யா (வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்த லாவண்யா திடீரென மாயமானார். அதிகாலையில் எழுந்த அவரது பெற்றோர்கள் மகள் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் லாவண்யா குறித்த எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. இது குறித்து கீரனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கடந்த 23-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகின. எனவே தேர்வில் தோல்வியுற்றால் பெற்றோர்கள் திட்டிவிடுவார்கள் என்ற அச்சத்தில் மாணவி லாவண்யா வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    மேலும் மாணவியை யாரும் கடத்தி சென்றனரா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×