என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "st anthony"
- தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
- இதில் திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
கீழ்வேளூர் அருகே கோகூரில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் ஜெபம், வழிபாடு, திருப்பலி, மரையுறை ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சம்மனசு, மாதா, அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர்.
இதை தொடர்ந்து தமிழக ஆயர் பேரவை துணை செயலர் சகாயராஜ், ஆலய பங்குதந்தை ஜான்பீட்டர் ஆகியோர் தலைமையில் நவநாள், ஜெபம், சிறப்பு திருப்பலி ஆகியவை நடந்தது.
பின்னர் ஆலய வளாகத்தில் இருந்து பெரிய தேர்பவனி தொடங்கியது. தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
- ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது.
- புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன.
சின்னசேலம் :
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் பழமை வாய்ந்த கீழைநாட்டு பதுவா புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது.
இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பங்குதந்தை ஆரோக்கியதாஸ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில் மறை மாவட்ட அருட்தந்தையர்களால் நவநாள் திருப்பலி, புதுசிறப்பு பிரார்த்தனை மற்றும் குணமளிக்கும் வழிபாடு தினந்தோறும் நடைபெற்று வந்தது.
மேலும் மாலை நேரத்தில் முக்கிய தெருக்கள் வழியாக புனித அந்தோணியார் சொரூபம் பவனியாக வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவளி நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 8 மணிக்கு ஆண்டு பெருவிழா திருப்பலியை புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டம் பேராயர் பிரான்சிஸ் நடத்தி வைத்தார்.
இதையடுத்து இரவு 11 மணிக்கு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 5 ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. ஆடம்பர தேர்பவனி அதற்கு முன்பாக புனித சூசையப்பர் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேர்கள் பவனியாக சென்றது.
அப்போது புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன. ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது. இதில் சின்னசேலம் பகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மத வேறுபாடுகள் இன்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- 11-ந்தேதி ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது.
- 12-ந்தேதி வேண்டுதல் தேர், கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தை அடுத்த பூமலூர் பகுதியில் உள்ள பூமலூர் புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.அந்தோணியார் ஆலய தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவிற்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் லாஷ் தலைமை தாங்கினார். பங்கு குருவுடன் இணைந்து குழந்தைசாமி,அருண்,ஸ்டீபன் (ஆக்ரா) ,ஹென்றி டேனியல்,பிலிப், க்ளாட்வின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொடியேற்றத்தை முன்னிட்டு சிறப்பு கூட்டுபாடல் திருப்பலி நடந்தது.
மேலும் வருகிற 11-ந்தேதி ஆடம்பர கூட்டுப்பாடல் திருப்பலி, மின் அலங்கார தேர்பவனி நடைபெறவுள்ளது. பின்னர் வருகிற 12-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, காலை 8 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலி, காலை 10 மணிக்கு வேண்டுதல் தேர், காலை 11 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெறவுள்ளது. மாலை 5 மணிக்கு மதில்சுற்றி தேர்பவனி, திருப்பலி நடைபெறுகிறது.
- விழா நாட்களில் தினமும் நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
- கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூரை அடுத்த கருங்கண்ணியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு விழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தின் உள்ளே மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தால் முடி சூட்டுவிழா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான பெரிய மின் அலங்கார தேர்பவனி நேற்று நடைபெற்றது. இதையொட்டி வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. முன்னாள் மிக்கேல் ஆண்டவர், சவேரியார், அருளானந்தர், மாதா, புனித அந்தோணியார் ஆகிய சொரூபங்கள் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தேரில் எழுந்தருளி பவனி நடைபெற்றது. அப்போது வண்ண, வண்ண வாணவேடிக்கை நடந்தது. இதில் கருங்கண்ணி பங்கு தந்தை சவரிமுத்து, கிறிஸ்தவ சமூக தலைவர் பிராண்சிஸ், துணைத்தலைவர் விக்டர் பவுல்ராஜ் மற்றும் திரளாள கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
18-ந்தேதி இரவு 7மணிக்கு புனித வனத்து சின்னப்பர் கல்லறை புனிதப்படுத்தி அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமானூர் அருளானந்த திருக்கோவில் பங்குதந்தை பெல்லார்மின், இயேசு சபை குழுமம் தலைவர் ஜோசப் ராஜ், கோக்குடி பங்குதந்தை சந்தியாகு, கோக்குடி உதவி பங்கு தந்தை வசந்த், புனவாசல் பங்கு தந்தை மைக்கேல்ராஜ், ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது.
இதையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது. காரைப் பாக்கம் கிராமம் மற்றும் மஞ்ச மேடு கிராமங்களில் பவனி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் தேர் பவனியில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் கிராம தலை வர்கள், இளைஞர்கள், பங்குதந்தை பெல்லார்மின் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று கொடி இறக்கம் நடைபெற்றது.
வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு தேர்பவனியும், 22-ந் தேதி (புதன்கிழமை) இரவு மின் அலங்காரத்துடன் புனித அந்தோணியார் பெரிய தேர்பவனியும் நடக்கிறது. 21, 22-ந் தேதிகளில் இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
28-ந் தேதி காலை 9.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. ரொனால்டு ரெக்ஸ் திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். ஜெகி வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். மதியம் 12 மணிக்கு அன்பு விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
2-ந் தேதி மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, நவநாள், திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு அருட்பணி ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்குகிறார். பிரான்சிஸ் சேவியர் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி மாலை 6.30 மணிக்குஆராதனையும், நற்கருணை ஆசீரும் நடக்கிறது. மாலை ஆராதனைக்கு குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். மார்ட்டின் மறையுரையாற்றுகிறார். ஸ்டீபன் ஜெபிக்கிறார். இரவு 9 மணிக்கு புனிதரின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
5-ந் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டுத்திருப்பலி மற்றும் முதல் திருவிருந்து நடக்கிறது. திருப்பலிக்கு ஜேசுமரியான் தலைமை தாங்கி ஜெபிக்கிறார். பெலிக்ஸ் அலெக்சாண்டர் மறையுரையாற்றுகிறார். திருப்பலியை தொடர்ந்து திருக்கொடியிறக்கம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அருட்பணி பெஞ்சமின், திருத்தல அதிபர் பிரிம்மஸ்சிங், பங்கு இறைமக்கள், பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள் இணைந்து செய்து வருகின்றனர்.
விழாவையொட்டி நடைபெறும் சிறப்பு திருப்பலிகளை மேதகு ஆயர் தேர்மனிக் சாவியோ பெர்னாண்டஸ், பீட்டா் ஜெயகாந்தன், பீட்டர் ரெமிஜியுஸ் ஆகியோர் நிறைவேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர் செபாஸ்டின், தனம், அருட்சகோதரர் ஸ்டீபன் ராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ!
எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும்.
நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்?
தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம்.
எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும்.
- ஆமென்.
மார்ச் 2-ந்தேதி இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு நாஞ்சில் நாதம் இயக்குனர் செல்வன் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலியை தொடர்ந்து கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழு இயக்குனர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். காரியாங்கோணம் சாந்தி ஆசிரம நிர்வாகி அருட்பணியாளர் கிறிஸ்பின் ஆச்சாரியா அடிகளார் ஜெபம் நடத்துகிறார். பகல் 2 மணிக்கு தேர்பவனி இரவு 7.30 மணிக்கு கொடியிறக்கம் ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலையில் மறையுரையும் நடந்தது. 11-ம் திருநாளான கடந்த சனிக்கிழமை இரவு புனித அந்தோணியார் உருவ சப்பர பவனி நடந்தது. நேற்று முன்தினம் மாலை பெருவிழா மாலை ஆராதனையை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அந்தோணியாருக்கு உப்பு, மிளகு, மாலை, மெழுகுவர்த்தி ஆகியவற்றை நேர்ச்சை கடனாக செலுத்தினர்.
13-ம் திருநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பெருவிழா கூட்டு திருப்பலியை, மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி, மாலையில் திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தைகள் தோமினிக் அருள்வளன், ஷபாகர், திருத்தொண்டர் வில்லியம், திருத்தல நிதிக்குழு, பணிக்குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்