search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
    X

    காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் காரைப்பாக்கம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் கடந்த 15-ந்தேதி திருமானூர் பங்குதந்தை பெல்லார்மின் தலைமையில் நடைபெற்றது.

    18-ந்தேதி இரவு 7மணிக்கு புனித வனத்து சின்னப்பர் கல்லறை புனிதப்படுத்தி அன்னதானம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து திருமானூர் அருளானந்த திருக்கோவில் பங்குதந்தை பெல்லார்மின், இயேசு சபை குழுமம் தலைவர் ஜோசப் ராஜ், கோக்குடி பங்குதந்தை சந்தியாகு, கோக்குடி உதவி பங்கு தந்தை வசந்த், புனவாசல் பங்கு தந்தை மைக்கேல்ராஜ், ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

    இதையடுத்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் பவனி நடைபெற்றது. காரைப் பாக்கம் கிராமம் மற்றும் மஞ்ச மேடு கிராமங்களில் பவனி நடைபெற்றது. அனைத்து மதத்தினரும் தேர் பவனியில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் கிராம தலை வர்கள், இளைஞர்கள், பங்குதந்தை பெல்லார்மின் ஆகியோர் செய்திருந்தனர். நேற்று கொடி இறக்கம் நடைபெற்றது.
    Next Story
    ×