search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "speaker dhanapal"

    திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் கைது பற்றிய தகவல்களை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. #SpeakerDhanapal #Karunas
    சென்னை:

    தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகக் குற்றம்சாட்டி திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ. கருணாசை, அவரது சாலிகிராமம் வீட்டில் வைத்து 23-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவர் அடுத்த மாதம் அக்டோபர் 5-ந் தேதிவரை நீதிமன்றக் காவலில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டால், சட்டசபை விதிகளின்படி அதுகுறித்து சபாநாயகரிடம் போலீசார் மற்றும் சிறைத்துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில், சபாநாயகர் ப.தனபாலுக்கு, கருணாஸ் எம்.எல்.ஏ. கைது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தபால் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

    அதுபோல கருணாஸ் அடைக்கப்பட்டு இருக்கும் சிறையின் விவரங்கள் பற்றி சிறைத்துறை ஐ.ஜி., சபாநாயகர் ப.தனபாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். சபாநாயகருக்கு தபால் மூலம் வரப்பெற்ற கடிதங்களில், கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கான காரணம், அவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் சட்டப்பிரிவுகள், அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை பற்றிய விவரங்கள் உள்ளன.

    எம்.எல்.ஏ. கைது பற்றிய தகவல்களை அவை விதிகளின்படி, மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும், சபாநாயகர் ப.தனபால் தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார் என்று சட்டசபை வட்டாரம் தெரிவித்தது. இதில், இ-மெயில் தகவல்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.  #SpeakerDhanapal #Karunas

    ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளர் முத்துசாமி மனைவி மறைவுக்கு சபாநாயகர் தனபால் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
    ஈரோடு:

    முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருப்பவர் முத்துசாமி. இவரது மனைவி முத்துலட்சுமி சமீபத்தில் மரணமடைந்தார்.

    இதையொட்டி முத்துசாமிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் நேரில் வந்து அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றனர். இந்த நிலையில் இன்று ஈரோடு வந்த தமிழக சபாநாயகர் தனபால் நேராக ஈரோடு பெரியார் நகரில் உள்ள தி.மு.க. மாவட்ட செயலாளர் முத்துசாமி வீட்டுக்கு சென்றார்.

    அங்கு அவரை வீட்டிலிருந்த முத்துசாமி வரவேற்றார். அவருக்கு சபாநாயகர் தனபால் மனைவி இறந்ததையொட்டி ஆறுதல் கூறினார். மேலும் இருவரும் 30 நிமிடம் தனியாக அமர்ந்து பேசி கொண்டனர். அதன் பிறகு வெளியே வந்த தனபாலிடம் நிருபர்கள் பேட்டி கேட்டனர். அதற்கு சபாநாயகர், “ நான் இங்கு நண்பர் முத்துசாமி மனைவி மறைவு குறித்து ஆறுதல் கூற வந்தேன். அவரை சந்தித்து ஆறுதலும் கூறினேன். வேறொன்றும் சொல்வதிற்கில்லை” என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

    இந்த சந்திப்பின்போது எதிரும் புதிருமாக உள்ள அ.தி.மு.க-தி.மு.க பிரமுகர்களும் சந்தித்து பரஸ்பரம் நட்பை பரிமாறிக் கொண்டனர்.

    இதை பார்த்தவர்கள் மத்தியில் வியப்பாக இருந்தது. #Tamilnews
    மானிய கோரிக்கைகளை விவாதிக்கும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் சபாநாயகர் தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று சபாநாயகர் தனபால் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    13.6.2018 அன்று எடுத்துக் கொள்வதாக இருந்த மானியக் கோரிக்கை எண். 26- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் 9.7.2018 அன்று எடுத்துக் கொள்வதாக இருந்த மானியக் கோரிக்கைகள் எண். 38- பொதுத்துறை, 1- மாநிலச் சட்டமன்றம், 2- ஆளுநர் மற்றும் அமைச்சரவை, 16- நிதித்துறை, 36- திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, 50. ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், 35- பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை ஆகியன 5.7.2018, 6.7.2018 ஆகிய நாட்களில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 9.7.2018 அன்று பதிலுரை வழங்கப்படும்.

    5.7.2018 அன்று எடுத்துக்கொள்ளப் பெறுவதாக இருந்த மானியக் கோரிக்கைகள் எண். 46- தமிழ் வளர்ச்சி (தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை), 47- இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை), 49- இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆகியன 13.6.2018 அன்றும், 6.7.2018 அன்று எடுத்துக் கொள்வதாக இருந்த மானியக் கோரிக்கைகள் எண். 12- கூட்டுறவு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை), 13- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை) ஆகியன 2.7.2018 அன்றும் எடுத்துக் கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #Dhanapal
    தமிழக சட்டமன்றத்தில் திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணியிடம் சபாநாயகர் தனபால் தெரிவித்த கருத்தால் சபையில் சிரிப்பலை எழுந்தது. #TNAssembly #Dhanapal
    சென்னை:

    சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பதில் அளித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது சட்டமன்ற கொறடா சக்கரபாணி, தனது தொகுதியில் உள்ள வனப்பகுதியில் சாலை அமைப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் நீங்கள் சபைக்கு வராமல் இருந்த நேரத்தில் 23 வனப்பகுதிகளில் சாலை மற்றும் பல்வேறு வசதிகள் செய்வது குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். எனவே உங்கள் பகுதிக்கும் உரிய வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.


    நீங்கள் வெளியே நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் ஒருநாள் சபாநாயகராக இருந்ததாக கேள்விப்பட்டேன் என்றார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய சபாநாயகர் தனபால், “சபாநாயகராக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கும்” என்றார்.

    இதனால் சபையில் சிரிப்பலை எழுந்தது. #TNAssembly #Dhanapal

    ×