என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sooriya Bagavan"
- சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.
- சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.
சூரியனுடன் இணைந்த புதன், சிந்தனை வளத்தைப் பெருக்குவான்.
அதனை நிபுணயோகம் எனப் பெருமைபடத் தெரிவிக்கிறது ஜோதிடம்.
ஆனால் அவனுடன் முற்றிலும் ஒன்றினால், விபரீத பலனைத் தந்து, துயரத்தைச் சந்திக்க நேரிடும்.
குருவுடன் சேரும் போது, ஆன்மிக நெறியைத் தந்தருள்வான்.
செவ்வாயுடன் இணையும் போது, உலகவியலில் திளைத்து, சிறப்பான செயலால் பேரும் புகழும் பெற்றுத் திகழலாம்.
சந்திரனுடன் இணைந்தால், மனத் தெளிவை ஏற்படுத்துவான்.
சுக்கிரனுடன் இணைந்தால், தாம்பத்தியத்தை இழக்க நேரிடும், சனியுடன் இணைந்தால், தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டு, செல்வ வளம் பெற்றாலும், செல் லாக்காசாக மாற நேரிடும்.
ராகுவுடன் சேர்ந்தால் வீண்பழி, அவப் பெயர்தான் மிஞ்சும். பலவீனமான மேகம், சில தருணங்களில் சூரியனின் ஒளிபரவாமல் தடுப்பது உண்டு. அதே போல், ஒளிப்பிழம்பான சூரியனை, இருள் கிரகம் மறைப்பதும் உண்டு.
கேதுவுடன் சேர்ந்தால், வசதி இருந்தும் அனுபவ அறிவு இல்லாது போகும்.
வசதி உலகவியலில் அடங்கும், சுகம், மனம் சார்ந்த விஷயம், ஒன்றை அழித்து மற்றொன்றை அளிக்க வைப்பான்.
உச்சம், ஸ்வஷேத்திரம் போன்ற நிலைகளில் சூரியன் இருந்தால், செல்வாக்கு மிகுந்தவனாக மாற்றி விடுவான்.
அவனது தனித்தன்மையை அழியாமல் காப்பாற்றுவான்.
நீசம், சத்ருஷேத்திரம் ஆகிய நிலைகளில் இருந்தால், விழுந்து, விழுந்து வேலை செய்தாலும், தகுதி இருந்தும் சிறக்க முடியாது போகும்! சமூகத்தில் அங்கீகாரம் இருக்காது.
பலம் பொருந்திய குரு, புதன் ஆகியோருடன் இணைந்தால், சிந்தனை வளம் பெருகும், தன்னம்பிக்கை பிறக்கும்,
மக்கள் சேவையுடன் திகழலாம், புகழுடன் வாழலாம்!
ஆன்ம காரகனின் தொடர்பு, பலன்களைச் சுவைக்கத் துணைபுரியும், சூரியனும் சந்திரனும் பலம் பெற்றிருந்தால், மற்ற கிரகங்களின் தாக்கத்தை, அதனால் விளையும் சங்கடங்களை எளிதாகக் கடந்து விடலாம்.
- அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.
- ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.
சூரியனின் வெப்பம் ஏறும் போதும் இறங்கும் போதும், நாம் படாதபாடுபடுகிறோம்.
நீரை உறிஞ்சுபவனும், மழையைப் பொழியச் செய்பவனும் அவனே.
இன்பத்தை அளிப்பதும் துன்பத்தைச் சுமக்க வைப்பதும் சூரியனே! இயற்கையின் சட்ட திட்டங்களில் இவனது பங்கு உண்டு.
இயற்கையில் தோன்றிய சாஸ்திரம், ஜோதிடம். ஆகவே அதற்கு அழிவில்லை.
பிரளயம் முடிந்து, புதிய படைப்பு துவங்கும் போது, பிரளயத்துக்கு முன்பு இருந்த சூரியனையும், சந்திரனையும் அப்படியே தோற்றி வைக்கிறார் கடவுள் என்கிறது வேதம்.
இனப் பெருக்கத்துக்கு காரணமான ராசி புருஷனின் ௫ ஆம் வீடான சிம்மத்தை அவனது ஆட்சிக்கு உட்பட்டதாகச் சொல்கிறது ஜோதிடம்.
தன்னம்பிக்கை, துணிச்சல், வீரம், பெருந்தன்மை, அலட்சியம், பொறுமை, அபிமானம் ஆகியவை சிம்மத்துக்கு உண்டு, சூரியனுக்கும் உண்டு, பொருட்களின் தோற்றத்துக்கு அவனது வெப்பம் வேண்டும்.
எனவே அவனை பித்ருகாரகன் என்றும் சொல்வர். அவனுடன் இணைந்த கிரகங்கள் அனைத்தும் வலுப்பெறும்.
ஆன்ம சம்பந்தம் இருப்பதால் திறமை வெளிப்படும்.
அவனது கிரணத்தில் மூழ்கி, உருத்தெரியாமல் மங்கி விடுவதும் உண்டு.
- எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.
- ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.
சிம்மத்துக்கு அதிபதியாக சூரியனைச் சொன்னாலும், அத்தனை ராசிகளிலும் சூரியன் (ஆன்மா) நிறைந்திருக்கிறான்.
எண்ணக் குவியல்களின் தொகுப்பை மனம் என்கிறோம்.
மனசஞ்சல இயல்பு, சந்திரனுக்கும் உண்டு. சந்திரனுக்குக் கடகம் என்று சொன்னாலும், எல்லா ராசிகளிலும் நிறைந்திருக்கிறான்.
அவன்! "ஹோரா" என்கிற பெயரில், எல்லா ராசிகளிலும் இரண்டு பேரும் சமபங்கில் நிறைந்திருப்பதாகச் சொல் கிறது ஜோதிடம்.
இந்த 2 பேரின் தொடர்புடன் ராசி நாதனான மற்ற கிரகங்கள் செயல்படுகின்றன.
ஆன்மாவும், மனமும் இணைந்தால் மட்டுமே புலன்கள் செயல்படும்.
ஜீவாத்மா வெளியேறிய பிறகு, மனம் இருந்தும் உடல் இயங்குவதில்லை.
ஒவ்வொரு ராசியும் ஆன்மாவுடன் இணைந்த மனம் படைத்த உடலாகவே செயல்படுகிறது.
த்ரேக்காணம், ஸப்தமாச்சம், நவாம்சம், தசாம்சம், த்ரிம்சாம்சம் ஆகிய ராசியின் உட்பிரிவுகளில் மற்ற கிரகங்களும் சேர்ந்திருக்கும்.
ஒவ்வொரு ராசியிலும் எல்லா கிரகங்களின் பங்கு இருக்கும்.
ராசிச்சக்கரத்தில் சூரியனின் ஊடுருவல், அத்தனை கிரகங்களையும் செயல்பட வைத்து, நன்மை தீமைகளை, கர்ம வினைக்குத் தக்கபடி, நடைமுறைப்படுத்த வைக்கிறது.
- சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும்
- மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.
மாறிக்கொண்டே இருக்கிற உலகில், அதனை நடைமுறைப்படுத்துபவனே சூரியன்!
சூரியனின் கிரணம், பனியை உருக வைக்கும்.
சேற்றில் இருக்கும் தண்ணீரை உறிஞ்சி, கட்டியாக்கும், தாமரையை மலரச் செய்யும், ஆம்பலை வாட வைக்கும்.
இலைகளை காயச் செய்யும், ஈரத்தை உலரவைக்கும், வெப்பம் ஏறிய புழுக்கத்தில், ஈசல் போன்ற உயிரினங்களைத் தோற்றி வைக்கும்.
பொருளின் இயல்புக்கு உகந்தபடி, மாறுபாட்டை ஏற்படுத்தும், கர்மவினையின் இயல்பை ஒட்டி, மாறுபாட்டை நடைமுறைப்படுத்தும்.
மாறுபாட்டை வெளிப்படுத்த மாறுபட்ட கிரகங்களை துணைக்கு அழைத்துக் கொள்வான் சூரியன்.
அவனுடைய வெப்பம், குளிச்சியை சந்தித்த சந்திர கிரணத்துடன் இணைந்து ஆறு பருவ காலங்களை உருவாக்குகிறது.
தட்பவெட்பங்கள் தான் உலகச் சூழல் என்கிறது சாஸ்திரம், இடைவெளியை நிரப்பும் இந்த இரு பொருள்களின் மூலாதாரம் அவன் என்கிறது வேதம் மோட்சத்தின் நுழைவாயில் சூரியன் என்கிறார் வராகமிஹிரர்.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களைப் படிப்படியே அடையச் செய்பவன் சூரியன்!
கர்மத்தை முற்றிலும் துறந்த துறவியும், கர்மமே கடவுள் என அதில் ஒட்டிக் கொண்டு போராடும் வீரனும் சூரிய மண்டலத்தைப் பிளந்து, வீடுபேறு அடைகின்றனர் என்கிறது புராணம்.
- நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.
- எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.
ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிற சூரியனைப் பார்த்து, கர்மமே கண்ணாக இருக்க வேண்டும் என்கிறது வேதம்.
இருண்ட சந்திரனுக்கு ஒளியை வழங்குபவன் சூரியன்.
நட்சத்திரங்களும், மற்ற கிரகங்களும் இவனது ஒளி பட்டு மிளிருகின்றன.
ஒளியை வெளியிடும் அனைத்துப் பொருட்களும் சூரியனிடம் இருந்து ஒளியைப் பெற்றவையே.
இருளில் ஒளிந்திருக்கிற பொருளை அடையாளம் காட்டுகிறது வெளிச்சம்.
ஒளிந்திருக்கிற கர்ம வினையை அடையாளம் காட்டுகிறது, இவனுடைய வெளிச்சம்.
மற்ற கிரகங்களும் இவனுக்குத் துணை போகின்றன. இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தும் சூரியனை வைத்தே நிகழ்கின்றன.
அதாவது, முற்பிறவியில் நம் செயல்பாட்டைக் கண்காணித்தவன் அவன். இந்தப் பிறவியிலும் அதனைத் தொடர்கிறான்,
எதிர்காலத்திலும் தொடருவான். ஆக முக்கால நிகழ்வுகளுக்கு அவனே சாட்சி.
"முக்காலத்திலும் நிகழ்கிற பலன்களை வெளியிடும் தகுதியை எனக்கு அளித்து அருளுங்கள்" என வராகமிஹிரர் சூரிய பகவானை வேண்டுகிறார்.
நம் உடலில் உள்ள சூடு, அவனுடைய பங்கு.
அவனுடைய வெப்பம், பொருளில் அதன் இயல்பை வெளிக்கொண்டு வர உதவும்.
- தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது
- அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
தினமும் சூரிய நமஸ்காரம் செய்துவந்தால், கண் ஆஸ் பத்திரிக்குச் செல்ல வேண்டியிருக்காது.
பூதவுடலை, பெரும்பூதங்களுடன் இணைக்கும் போது, கண்கள் சூரியனில் இணையட்டும் என்கிறது வேதம்.
தோற்றம் மறைவு இல்லாதவன் சூரியன்.
ஒளிப் பிழம்பாகத் தோன்றுபவன் அவன். நம் கண்களுக்குத் தென்படுகிற போது, "சூரியன் தோன்றுகிறான்" என்கிறோம்.
தென்படாத போது, "சூரியன் மறைந்து விட்டான்" என்கிறோம்.
ஆனால், அப்போது சூரியன் வெளிநாட்டில் தோன்றுகிறான்.
சூரியன் தோன்றி மறைகிற இடைவெளியை பகலாக ஏற்கிறோம்.
அன்றாட அலுவல்களை அவனை வைத்தே நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் ஆகியவை அனைத்தும் சூரியனை வைத்துத் தீர்மானிக்கப்பட்டவையே.
சூரியனின் கிரணம் படாத இடமே இல்லை.
கிரணம் பட்டு, அதன் தாக்கத்தால் பொருளில் தென்படும் மாற்றங்களைக் கொண்டு உருவானதே காலம்.
அதாவது வேளை என்கிறது வேதம்.
சூரியனின் செயல்பாட்டின் அளவே கால அளவாக மாறியது.
- கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்.
- வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன்.
கிரகங்களின் நாயகன் சூரியன். ஒளி வடிவானவன்.
அவன் "உலகின் அணையா விளக்கு" என்பவார் வராகமி ஹிரர் சூரியனது கிரணங்களே, மற்ற கிரகங்களை இயக்க வைக்கிறது.
காலை, மதியம் மற்றும் அந்தி சாயும் வேளைகளில் அவனை ஆராதிப்பது சிறப்பு என்கிறது வேதம்.
மேலும், சராசரங்களின் ஆன்மா என சூரியனை அடையாளம் காட்டுகிறது வேதம்.
சூரியன், உலகை உணர்த்துகிறான். இயங்க வைக்கிறான், உறங்க வைக்கிறான் என்கிறது ஜோதிடம்.
அவன் தோன்றும் போது உயிரினங்களுக்கு உயிரூட்டுகிறான்.
மறையும் வேளையில், உறக்கத்தில் ஆழ்த்தி இளைப்பாறச் செய்கிறான் என்கிறது வேதம்.
மும்மூர்த்திகளும் அவனுள் அடக்கம்.
முத்தொழில்களையும் அவனே நடத்துகிறான்.
வேதத்தின் வடிவமான ஒலி, ஆகாயத்தில் ஒளி வடிவில் உலா வருகிறது. அதுவே சூரியன் என்கிறது வேதம்.
- ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.
- இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.
ஸ்ரீ ராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமர் எதிரே தோன்றி ஆதித்ய ஹ்ருதயம் என்னும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்து அருளினார்.
ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி.
இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய ஒன்று! ராமர் இதை ஓதி ராவணனை எதிர் கொண்டார்.
ராவணன் மீது பலம் பொருந்திய பாணங்கள் பாய்ந்தாலும் அவன் சமாளித்து மீண்டும் மீண்டும் எழுவதைக் கண்டார் ராமர்.
அருகில் இருந்த விபீஷணன் ராமரைக் குறிப்பாக பார்த்தார்.
விபீஷணன் ஏதோ சொல்ல விரும்புவதைத் தெரிந்து கொண்ட ராமர் விபீஷணனை அருகில் அழைத்தார்.
ராமரை நோக்கி விபீஷணன், "ஐயனே! அன்னையை அனவரதமும் (காம வசத்தால்) நினைத்துக் கொண்டே
இருக்கிறான் ராவணன் உலகத்திற்கே அருள்பாலிக்கும் அன்னையை அவன் இடைவிடாது அடி மனத்திலிருந்து
நினைப்பதால் இயல்பாகவே நினைப்பவர் தம்மைக் காக்கும் அன்னையின் சக்தி அவனைக் காக்கிறது
ஆகவே அந்த ஆசையை முதலில் நீங்கள் அழித்தால், பின்னர் அவன் அழிந்து விடுவான்"
என்று ராவணனின் உயிர் ரகசியத்தைக் கூறினார்.
உடனே ராமர், ஒரு பாணத்தை எடுத்து அவன் நாபியை நோக்கி அடித்தார்.
அடிவயிற்றில் இருந்த அன்னை நினைவு போனவுடன் அது ராவணன் மரணத்திற்கு வழி வகுத்தது.
அடுத்து பத்து பாணங்களால் பத்துக் தலைகளையும், இருபது பாணங்களால் இருபது கைகளையும் அறுத்துக் தள்ளினார் ராமர்.
ஆக முப்பத்தியொரு பாணங்களை ராமர் செலுத்தி ராவணனை அழித்ததை துளசிதாசர் அழகாக அரக்கன் அழிவின் ரகசிய விளக்கமாக ராமசரித மானசத்தில் கூறுகிறார்.
ஆதித்ய ஹ்ருதயம் தரும் பலன்கள்
இப்படி பலம் பொருந்திய எதிரியை அழிக்க வழி வகுத்தது ஆதித்ய ஹ்ருதயம்,
எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
ஆதித்ய ஹ்ருதயத்தைத் தினமும் ஓதினால் பெரும் பயன் பெறலாம் என மகான்களும் ஞானிகளும் காலம் காலமாகக் கூறி வருகின்றனர்.
- நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.
- லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள்.
அதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவர்.
சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம்.
இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவிற்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை.
தலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும்.
ஒருவர் ஏதாவதொரு வகையில் நம்பர் ஒன்னாக தலைமை பொறுப்பில், கையெழுத்திடும் இடத்தில் இருக்க வேண்டும் என்றால் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்து இருந்தால்தான் அவரவர் ஜாதக பலத்துக்கு ஏற்ப பதவி கிடைக்கும்.
நல்ல யோகமான சூரிய திசை நடக்கும்போது பட்டம், பதவி தேடி வரும்.
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறப்பது யோகம்.
சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தால் கூடுதல் யோகம் கிடைக்கும்.
லக்னத்தில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் நல்ல யோகம் உடையவர்கள்.
சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள்.
கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் நட்சத்திரத்தில் பிறப்பது சிறப்பானது.
- பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.
- ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.
உலகில் பரவலாக காணப்படும் வழிபாடு சூரிய வழிபாடு.
பண்டைய நாகரிகங்கள் பலவற்றிலும் சூரிய வழிபாடு இருந்ததென்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன.
எந்த கடவுளையும் நாம் கண்ணால் காண முடியாது.
ஆனால் சூரிய வழிபாட்டில் மட்டும் வழிபடும் கடவுளான சூரியனை நேரில் காணமுடியும்.
அதிர்ஷ்டம், ராஜயோகம், பட்டம், பதவி, பணம், பங்களா, நிலபுலன்கள் போன்ற அமைப்புகளை ஒருவருக்கு வழங்குவதில் நவக்கிரகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
ஒரு இடத்தில் நின்றும் இடம் பெயர்ந்தும் கிரகங்கள் தரும் பலன்களே ஒருவருக்கு நன்மை, தீமைகளை ஏற்படுத்துகிறது.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு வலிமை உண்டு.
நவக்கிரகங்களின் நாயகன் என்றழைக்கப்படுபவர் சூரியன்.
தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம்.
ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம்.
- சிவனின் அம்சமாக சூரியன் கருதப்படுகிறது ஜோதிட சாஸ்திரத்தில்!
- சிவன்தான் பரம்பொருள் என்பது திருமூலர் திருமந்திர வாக்கு!
சிவனின் அம்சமாக சூரியன் கருதப்படுகிறது ஜோதிட சாஸ்திரத்தில்!
இது அறிவியல் பூர்வமாக உண்மையாகிறது என்பதற்கு அணுக்கருவினைகளே ஆதார சாட்சியாகும்!
எனவே, சிவனே சூரியன்.
சூரியன்தான் சிவன்!
சிவன்தான் பரம்பொருள் என்பது திருமூலர் திருமந்திர வாக்கு!
எனவே, பரம்பொருளே சூரியனாகி பிரகாசித்துக் கொண்டிருக்கிறது!
மனிதக் கண்களால் நேரடியாக காணக்கூடிய கண்கண்ட தெய்வம்தான் சூரியன்!!!
ஆற்றல் களஞ்சியமாகத் திகழும் ஆதிசிவன் சூரியனை வணங்கி ஆற்றல் பெற்று அற்புதமாக அகில வாழ்வை வாழலாமே!!
சூரியன்-அறிவியல்
பிரபஞ்சத்தில் மிகவும் இளையவர், 4.57 பில்லியன் ஆண்டுகளாக தன் கடமையை செய்து வருகிறார்.
இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தன் கடமையை செய்வார் என்று விண்வெளி விஞ்ஞானிகள், தமது ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
சூரியனைப் போல பல கோடி சூரியன்கள் இருப்பதாக அறிவியல் கூறுகிறது.
திருமணத்திற்கு ஆயிரம் பேர் வந்தாலும், நமது பெற்றோருக்கே பாத பூஜை செய்து வணங்குவது நமது பண்பாடு அல்லவா! அதைப்போல நம்முடைய குடும்பத்துக்கு தலைவர் என்ற முறையில் அவருக்கு தலை வணங்குவோமாக!
அறிவியல் சூரிய ஒளியில் 7 நிறங்கள் உள்ளதாக கண்டுபிடித்தது.
ஆனால், பாரத நாட்டில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அவருக்கு வாகனமாக 7 குதிரைகள் பூட்டிய தேரை சிம்பாலிக்காக கொடுத்துள்ளமை சிந்தனைக்குரியதே!
- சூரியனின் தேர் 10,000 யோசனை நீளமும், அகலமும் கொண்ட ஒற்றைச் சக்கரத்தேர் ஆகும்!
- கிழமைகள் என்கிற “நாள்” உருவாவதற்கு ஆதியாக அமைபவர் ஆதிபகவன் சூரியனே!
ஊதா, இண்டிகா, நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு
ஏழு நிற குதிரைகளின் பெயர்கள்:
1. காயத்ரி, 2. உஷ்ணிக், 3. அனுஷ்டுப், 4. பிரகதி, 5. பங்க்தீ, 6. திரிஷ்டுப், 7. ஜகதீ (சந்தஸ்)
* சூரியனின் தேர் 10,000 யோசனை நீளமும், அகலமும் கொண்ட ஒற்றைச் சக்கரத்தேர் ஆகும்!
* ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள் கொண்டதாகும். இந்த ஒவ்வொரு நாளும் சூரியனைக் கொண்டே அமைகிறது.
அதாவது பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள ஆகும் காலமாகிய 24 மணி நேரமே ஒருநாள் எனப்படுகிறது.
எனவே, ஒருநாள் என்பது சூரியனின் உதயமுதல் மறுநாள் உதயம் வரை உள்ள காலம் (24 மணி) ஆகும்.
பகல் = 12 மணி நேரம்
இரவு = 12 மணி நேரம்
1 நாள் = 1 பகல் + 1 இரவு
கிழமைகள் என்கிற "நாள்" உருவாவதற்கு ஆதியாக அமைபவர் ஆதிபகவன் சூரியனே!
காலத்தைக் கணக்கிட ஆதிமூல மையமாக இருப்பவரும் சூரியனே!
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்