search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SLvSA"

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ளால் என்னுடைய முதல் டெஸ்டாகவே கருதுவேன் என ஷாம்சி தெரிவித்துள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது.

    காலே மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். மேலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இலங்கை ஆடுகளத்தை தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தென்ஆப்பிரிக்காவும் கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷாம்சி, ஷான் வோன் பெர்க் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் இருவர் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.

    ஷாம்சி இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். பயிற்சி ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் காலே டெஸ்டில் இடம்கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில் காலே டெஸ்டில் இடம்பிடித்தால், என்னுடைய அறிமுக போட்டியாகவே நினைப்பேன் என்ற ஷாம்சி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷாம்சி கூறுகையில் ‘‘நான் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் இடம்பிடித்துள்ளேன். அதுவும் நீண்ட காலத்திற்கு முன்புதான் களம் இறங்கினேன். இலங்கை தொடரில் இடம்பிடித்தேன் என்றால் அறிமுகம் டெஸ்ட் என்பதை போல்தான் உணர்வேன்.



    தென்ஆப்பிரிக்கா அணி பொதுவாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடாது. இந்த கண்டிசனில் ஒருவேளை விளையாட வாய்ப்புள்ளது. நான் விளையாடுவதை உறுதியாக கூற இயலாது. ஒருவேளை இடம்பிடித்தால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’’ என்றார்.

    தென்ஆப்பிரிக்கா அணி எப்போதுமே வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோரை நம்பியே களம் இறங்கும். தற்போது இந்த வரிசையில் லுங்கி நிகிடி இடம்பிடித்துள்ளார்.

    28 வயதாகும் ஷாம்சி டெஸ்ட் போட்டியில் 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் அறிமுகமானார். அதன்பின் தற்போது வரை டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    இலங்கை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் ஷாமிசி ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 12-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. இதற்கு முன் இலங்கை கிரிக்கெட் போர்டு லெவன் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. அந்த பயிற்சி ஆட்டம் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை போர்டு லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா 53 ரன்னும், சில்வா 76 ரன்னும் அடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கேப்டன் மேத்யூஸ் 92 ரன்கள் சேர்த்து மேலும் வலுவூட்டினார். ஒரு கட்டத்தில் இலங்கை போர்டு லெவன் அணி 161 ரன்கள் எடுத்திருக்கும்போது இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 78.2 ஒவர்களில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.



    தென்ஆப்பிரிக்கா அணியில் சுழற்பந்து வீச்சாளர் ஷாம்சி சிறப்பாக பந்து வீசு 13.2 ஓவரில் 45 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஸ்டெயின் 12 ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
    இலங்கையில் ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட், அதன்பின் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன் வரும் 7-ந்தேதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.



    எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.

    ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து யோசிப்போம்’’ என்றார்.
    இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது.

    இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், முதல் டெஸ்டில் குதிக்காலில் ஏற்பட்ட காயத்தால் 2-வது இன்னிங்சில் இருந்து விலகினார். தற்போது காயம் குணமடைந்ததால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.



    காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரபாடாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுள்ளதால் டி ப்ருயின், கிளாசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ×