search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Single Leadership Crisis"

    • நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு 2700 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இன்றே சென்னை வர தொடங்கி உள்ளனர்.
    • இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களிலும் அறைகள் நிரம்பி உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அவர்களை சந்தித்து ஆதரவு கூறி வந்தனர்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நாட்கள் செல்ல செல்ல வளர்பிறை போல ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    அதே வேளையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேய்பிறை போல் அவருக்கு ஆதரவாளர்கள் குறைந்து வருகிறார்கள். நேற்றும், இன்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு ஆதரவாளர்கள் கூட்டம் திரண்டு வந்தபடியே இருந்தனர்.

    பரபரப்பான இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயன், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் ஆகியோர் இன்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

    இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தரப்பில் முக்கிய நிர்வாகிகளாக வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்பட குறிப்பிட்ட சிலரே ஓ.பி.எஸ்.சுக்கு ஆதரவாக உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்த வேளச்சேரி அசோக் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் பிளவு ஏற்படக்கூடாது. ஊர் கூடி தேர் இழுப்போம், அனைவரும் ஒன்று கூடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த சட்டமன்ற தேர்தலை வென்று கோட்டையை பிடிப்போம். அம்மாவின் வழியில் அ.தி.மு.க.வின் பொற்கால ஆட்சியை வழங்குவோம்.

    அனைவரும் ஒற்றைத் தலைமையை ஆதரிப்போம். எடப்பாடி பழனிசாமி கரத்தை வலுப்படுத்துவோம்.

    ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எடப்பாடி பழனிசாமியின் கிரீன்வேஸ் இல்லத்தில் இன்றும் காலையில் இருந்தே ஏராளமான மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், கிளை செயலாளர்கள் என ஏராளமான தொண்டர்கள் ஒன்று திரண்டு ஆதரவு தெரிவித்ததால் அந்த பகுதி திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது. அனைவரும் பூங்கொத்து கொடுத்தும், சால்வை, மாலை அணிவித்தும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    அவர்களை தோளில் தட்டி கொடுத்து நன்றி தெரிவித்ததுடன் அனைவரும் ஒன்று கூடுவோம் என்று உற்சாகப்படுத்தினார்.

    நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்திற்கு 2700 பேருக்கு அழைப்பு விடுவிக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் இன்றே சென்னை வர தொடங்கி உள்ளனர்.

    இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களிலும் அறைகள் நிரம்பி உள்ளன.

    • எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.
    • இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. கடந்த 9 நாட்களாக அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கருத்து வலுத்து வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஒற்றை தலைமை என்பதை எதிர்த்து வருகிறார்.

    எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தேனி சையது கான், கன்னியாகுமரி அசோகன் வெல்லமண்டி நடராஜன், வைத்தியலிங்கம், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மனோஜ் பாண்டியன், தர்மர் எம்.பி. ஆகியோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவி வகிக்கும் ஓ.பன்னீர்செல்வம் பொருளாளர் பதவியையும் வகித்து வருகிறார். பொதுக்குழு கூட்டங்களில் பொருளாளர்தான் கட்சியின் வரவு-செலவு விவரங்களை வாசித்து தாக்கல் செய்வார்.

    அதற்கு பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும். அதுதான் கட்சியின் அதிகாரப்பூர்வ வரவு-செலவு கணக்காக எடுத்துக்கொள்ளப்படும்.

    தற்போது எடப்பாடி பழனிசாமி அணியுடன் உரசல் ஏற்பட்டு இருப்பதால் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்றாலும் அ.தி.மு.க.வில் பொருளாளர் என்ற அடிப்படையில் அவரிடம் இன்று வரவு-செலவு கணக்குகள் கொடுக்கப்பட்டன.

    நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வாசிப்பதற்காக இந்த வரவு-செலவு கணக்கு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் கூட்டத்திற்கு வராதபட்சத்தில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

    • நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை தலைமைக்காக விதிகளை நீக்கிவிட்டு 2017-ம் ஆண்டுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற பழைய விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
    • அதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமையை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளருக்கு தான் முழு அதிகாரமும் இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சியை இணைந்து வழிநடத்தி செல்லும் வகையில் பொதுச்செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

    இந்த இரட்டை தலைமையால் கட்சியினரின் அதிகாரம் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை தலைமைக்காக விதிகளை நீக்கிவிட்டு 2017-ம் ஆண்டுக்கு முன்பு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்ற பழைய விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

    அதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆலோசித்து வருகிறார்கள். இது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து இரட்டை தலைமையை முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் ஒற்றை தலைமையில் பொதுச்செயலாளருக்கே அனைத்து அதிகாரமும் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது.
    • பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் இதற்கு அனுமதி தரக்கூடாது என்றும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இதற்கு ஆவடி போலீஸ் தரப்பில் இன்று கூறப்பட்டு இருப்பதாவது:-

    கோர்ட்டு உத்தரவுபடி பொதுக்குழு கூட்டத்துக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். தனி நபர் அரங்கில் கூட்டம் நடைபெறுவதால் இதில் தலையிட முடியாது.

    பொது வெளியில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதியோ, மறுப்போ கூற முடியும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை ஆவடி போலீஸ் நிராகரித்தது.

    ×