search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling cannabis"

    சங்கரன்கோவில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற முதியவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகர் பகுதியில் அதிக அளவில் போதை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நகைகடை பஜார் பகுதியில் போலீசார் செல்லும் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவரிடம் இருந்து விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 5 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். 

    விசாரணையில் அவர் சங்கரன்கோவில் சங்குபுரம் 4-வது தெருவை சேர்ந்த குருசாமிசெட்டியார் மகன் கோவிந்தராஜ் (60) என தெரியவந்தது. 

    இது சம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்தனர். மேலும் நகர் பகுதியில் போதை பொருள் விற்பனை பற்றிய தகவல் எதுவும் தெரிந்தால் பொதுமக்கள் உடனே டவுன் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ளது.
    சென்னை எம்ஜிஆர் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ரவுடி உள்பட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    சென்னை எம்.ஜி.ஆர். நகர் ஜாபர்கான்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருவதாக எம்.ஜி.ஆர்.நகர் போலீசாருக்கு புகார்கள் வந்தது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஜாபர்கான் பேட்டை ஆர்.வி. நகரைச் சேர்ந்த தினேஷ், கணேஷ், சரவணன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட தினேஷ் மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்கு மற்றும் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகள் உள்ளன. மேலும் அவர் பிரபல ரவுடியான சின்ன சிவாவின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×