என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "selling cannabis"
- காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூதிஷ்டர்தாஸ்(வயது30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள மல்லே கவுண்டம்பாளையம் ஊராட்சி ஊத்துக்குளி பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த யூதிஷ்டர்தாஸ்(வயது30) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 2 கிலோ பறிமுதல்
- சேலம் மத்திய சிறையில் அடைப்பு
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், கோட் டீஸ்வரன் மற்றும் போலீசார் கீழ்பென்னாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது வட்ராபுத்தூர் சூர்யா (வயது 22), கீக்களூர் புரவடை வினோத் (23), மங்கலம் அஜித்குமார் (19), சந்துரு (21) ஆகிய 4 பேர் கஞ்சா விற்றதாக தெரிகிறது. அவர்களிடம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 2/4கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
- குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
- போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை
ஆற்காடு:
ஆற்காடு டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து கைது செய்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மேற்பார்வையில் ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 16-ந்தேதி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த ஆற்காடு மாசா பேட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் (வயது 29), ஆற்காடு வேலூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு (27) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்ட சதீஷ் மற்றும் பிரபு ஆகியோரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின் பேரில் சிறையில் உள்ள 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணை வழங்கப்பட்டது.
- ரோந்துப் பணியின் போது சிக்கினர்
- சிறையில் அடைப்பு
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாசன் தலைமையிலான போலீசார் நேற்று ஷா நகர், ஹபில்ஸ் பேட்டை, பழனிபேட்டை மற்றும் கிருஷ்ணாம்பேட்டை பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பழனி பேட்டை எஸ்.ஆர்.கேட் பகுதியில் உருட்டுக் கட்டை வைத்து க்கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த நபரை கண்ட சப்-இன்ஸ்பெக்டர் தாசன் அந்த நபரை பிடித்து விசாரித்தார்.
அவர் ஷா நகர் பகுதியை சேர்ந்த சுனில் (வயது 21) என்பது தெரியவந்தது. இதே போன்று ஹபில்ஸ் பேட்டை ரெயில்வே குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது சந்தே கிக்கும் வகையில் நின்றிருந்த வெங்கடேசபுரம் பகுதியை ரூபேசிடம் (22) சோதனை செய்தனர்.
இருவரிடமும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- 250 கிராம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
சோளிங்கர்:
சோளிங்கர் கீழாநெண்டை மோட்டூர் திருத்தணி மெயின் ரோட்டில் வசித்து வரும் முனுசாமி மகன் வெங்கடே சன் (வயது 30).இவர் வீட்டின் பின்புறம் முட்புதரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர்கள் மோகன் , ரவி உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கஞ்சா விற்ற வெங்கடேசனை கைது செய்தனர் . அவரிடம் இருந்த 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
காரைக்குடி
தமிழகத்தில் மது பழக்கத்துக்கு அடுத்து கஞ்சா மற்றும் போதை பொருட்களை இளைஞர்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இந்த பழக்கம் காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் முற்றிலும் நாசமாகிவிடும் அபாயம் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ கத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா வியாபாரிகளின் சொத்துக்கள் முடக்கப்படு கிறது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழும் நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் சமீபகாலமாக கஞ்சா விற்பனை அதிகமாக நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய தனிப்படை அமைக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி ஆலோசனைபடி தனிப்படை போலீசார் காரைக்குடி பகுதி முழு வதும் கடந்த 3 நாட்களாக தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு மாணவர் மதுரையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்தவர் என்பதும், அவர் பாதியில் படிப்பை நிறுத்தி விட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு லட்சம், லட்சமாக சம்பாதித்து வந்ததும் தெரியவந்தது.
பிடிபட்ட 2 கல்லூரி மாணவர்களிடம் இருந்து 1 கிேலா 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசாரின் விசாரணை யில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வந்தது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
காரைக்குடி பகுதியில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்டட பலர் 22 வயதுக்குட்பட்ட வர்கள். அதில் பெரும்பா லானவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தொடர்ந்து தனிப்படை போலீசார் கஞ்சா வியாபாரிகளை கண்காணித்து நடவடிக்ைக எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தல்
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சண்முகம் தலைமை வகித்தார், மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் அன்பழகன் முன்னிலை வகித்தார், அனைவரையும் பொதுச் செயலாளர் சரவணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் சி.வாசுதேவன், மாநிலச் செயலாளர் கொ. வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் முன்னாள் நகரத் தலைவர் அருள்மொழி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொதுச் செயலாளர் ஈஸ்வர், கவியரசு, உட்பட ஏராளமான கலந்து கொண்டனர். இறுதியில் பொதுச் செயலாளர் டிவி பார்த்திபன் நன்றி கூறினார். கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட விவரம் வருமாறு;-
திருப்பத்தூர் நகராட்சி குடி தண்ணீர் எந்தெந்த நேரங்களில் விடுகிறார்கள் என்று பொதுமக்களுக்கு தெரியவில்லை. ஆகவே திருப்பத்தூரில் அனைத்து வாடுகளில் எந்தெந்த நாட்களில் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை அட்டவணை வெளியிட வேண்டும், ஆலங்காயம் ரோடில் உள்ள நகைக்கடை பஜாரில் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் அந்தப் பகுதியில் கழிப்பறை இல்லாததால் அந்த இடத்தில் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து தர வேண்டும், திருப்பத்தூர் நகரத்தில் சாராயம் கஞ்சா குட்கா போன்றவை அதிக அளவில் உள்ளது செல்போனில் கூறினால் எடுத்து வந்து கொடுக்கிறார்கள்.
இதுதான் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள் இதை கட்டுப்படுத்த போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
ஜோலார்பேட்டையில் நகர பாஜக செயற்குழு கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அணி பிரிவு தலைவர்கள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்திற்கு நகரத் தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். நகரத் துணைத் தலைவர்கள் அறிவுச்சுடர், சௌந்தர்ராஜன், நகர பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், விவேகானந்தன் ஆகியோர் முன்னில வகித்தனர். மேலும் இந்த செயற்குழுக் கூட்டத்தில் மாநில செயலாளர் கொ. வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சி. வாசுதேவன், விவசாய அணியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. கே. மணி, மாவட்ட பொதுச்செயலாளர் சி. கவியரசு ஆகியோர் பேசினர்.
இதனைத் தொடர்ந்து புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிற அணி நிர்வாகிகளுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும் இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஐஸ்வர்யா, மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் வா. கி. அருணா, மாவட்டத் துணைத் தலைவர் முன்னாள் ராணுவ பிரிவு கே. அருள், மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் ரஞ்சித் உள்ளிட்ட மாவட்ட, நகர, பிராணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் நகர இளைஞரணி தலைவர் ஆசைமுத்து நன்றி கூறினார்.
- பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
- கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பவானி:
பவானி அருகே மண் தொழிலாளர் வீதி சின்ன ஆற்றோரம் கஞ்சா விற்பனை செய்வதாக பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த விஜயன், பாம்பாட்டி மணி, மாணிக்கம் ஆகிய 3 பேரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பல்லடம்
பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணர் பகுதியில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கள்ளக்கிணர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் சென்னை வடபழனியைச் சேர்ந்த பாண்டியன் (58) என்பதும் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் ரெயில்நிலையப்பகுதியில் போலிச்சாமியார்கள் அதிகளவில் உலாவி வருகின்றனர். குட்செட் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இவர்களை போலீசார் பிடித்து அபராதம் விதித்த போதும் கஞ்சாவிற்பனையை தடுக்க முடியவில்லை.
குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஒருமுறை புகைத்தால் மீண்டும் அதை தேடிவரும் நிலை உள்ளது.
திண்டுக்கல் மாவட்ட சிறைச்சாலை பின்புறம் தற்போது கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. ஆண்கள் விற்பனையில் ஈடுபட்டால் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்பதால் பெண்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனையை தொடர்ந்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்கால் கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட சமூகவிரோத செயல்களுக்கு கஞ்சா புகைப்பது தூண்டுதலாக உள்ளது.
எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கஞ்சாவிற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்