search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sehwag"

    சவுத்தாம்ப்டன் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றிக்கு திரும்ப நினைக்கையில், இந்தியா பசித்த புலிபோல் விளையாடும் என சேவாக் கூறியுள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் தொடரில் இந்தியா 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 30-ந்தேதி தொடங்கும் (வியாழக்கிழமை) சவுத்தாம்ப்டன் டெஸ்டில் வெற்றி பெற்று இங்கிலாந்து தொடரை கைப்பற்ற நினைக்கும். அதேவேளையில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய விரும்பும்.

    நான்காவது டெஸ்டில் இந்தியா பசித்த புலியை போன்று விளையாடும் என்று முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்திய அணி 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதை வைத்து பார்க்கும்போது 4-வது டெஸ்டில் இந்தியா நான்காவது நாள் ஆட்டத்தில் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். அவர்கள் வெற்றி உத்வேகத்தில் உள்ளனர். ஆனால், இங்கிலாந்து அணியும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். ஆனால், இந்தியா பசித்த புலிகள் மாதிரி. அவர்கள் வெற்றிக்காக கடுமையாக பாடுபடுவார்கள்.



    தற்போதுள்ள வேகப்பந்து யுனிட் மிகவும் சிறப்பானது. இதுவரை நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளனர். கடைசி டெஸ்ட் பிளாட் டிரக். அதில் கூட 20 விக்கெட் வீழ்த்த முடியும்.

    ஆஸ்திரேலியா ஆடுகளம் பேட்டிங் செய்ய மிகவும் சிறந்ததாக இருக்கும். அங்கு 20 விக்கெட்டுக்கள் வீழ்த்தினால், வீரர்கள் பெயர்கள் வரலாற்றில் எழுதப்படும். இந்திய பந்து வீச்சாளர்கள் அவர்களது பெருமையை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
    டெல்லி கிரிக்கெட் சங்க கமிட்டியின் உறுப்பினராக முன்னாள் வீரர்களான சேவாக், காம்பீர் மற்றும் ஆகாஷ் சோப்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #Sehwag #DDCA
    டெல்லி கிரிக்கெட் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில் புதிய நபர்கள் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வுக்குழு போன்ற விவகாரத்தில் முறைகேடு நடப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.

    இந்நிலையில் டெல்லி அணியின் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை நியமிப்பதை மேற்பார்வையிட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரேந்தர் சேவாக், ஆகாஷ் சோப்ரா, ராகுல் சங்வி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். மேலும், காம்பீர் சிறப்பா அழைப்பாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.



    காம்பீர் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். இருந்தாலும் தேர்வாளர்களை முடிவு செய்வதில் இவரது பங்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மோசமானது. இதனால் இந்தியா விளையாடக் கூடாது என்று சேவாக் சாடியுள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கடெ் தொடர் துபாய் மற்றும் அபுதாயில் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணிகள் என 6 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி 11-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் இந்தியா 19-ந்தேதி முதல் ஆட்டத்தில் வியைாடுகிறது.

    இந்த தொடர் 15-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 28-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் ஒவ்வொரு அணிகளும் அடுத்தடுத்த நாள் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘ஒவ்வொரு நாடும் அடுத்ததடுத்த நாட்களில் விளையாடும் வகையில் அமைக்கப்பட்ட அட்டவணை பார்த்தும் நான் அதிர்ச்சியடைந்தேன். இங்கிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் கூட இரண்டு நாட்கள் இடைவெளி இருந்தது.



    துபாயில் கடுமையான வெயில் தாக்கம் இருக்கும். இதில் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த நாட்களில் விளையாட வேண்டியுள்ளது. ஆகவே. இது சரியான அட்டவணை இல்லை.

    ஏன் ஆசியக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று கூக்குரலிட வேண்டும். ஆசிய கோப்பையில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அணிகள் உள்நாடு அல்லது வெளிநாடு தொடருக்கு தயாராக வேண்டியதுதான். அடுத்தடுத்த நாட்களில் விளையாட வேண்டும் என்று உண்மையிலேயே கடினமானது.
    ×