search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sangu abhishekam"

    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.
    கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலிலுள்ள பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெருவுடையார் சன்னதி முன்பு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்ட புனித நீரால் பெருவுடையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. அபிஷேகத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    வருகிற 29-ந்தேதி 2-வது சோமவாரமும், அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந்தேதி 3-வது சோமவாரமும், 13-ந்தேதி கடைசி சோமவாரமும் கடைபிடிக்கப்படுகிறது.

    திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு நேற்று மாலையில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாக 1008 சங்குகளில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் புனித தலங்களின் மண் மற்றும் வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் நிறைந்த கலயம் மற்றும் சங்குகளுக்கு ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் ஐயாறப்பர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.
    சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் சூரசம்ஹாரம் நேற்று நடந்தது. இதையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.
    முருகனின் ஆறுபடைவீடுகளில் 4-வது படைவீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றில் சிறப்புடையது. கட்டுமலையால் ஆன இத்தலத்தைப் பற்றி நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும், அருணகிரிநாதரால் திருப்புகழிலும் குறிப்பிட்டு உள்ளனர். பிரசித்தி பெற்ற சுவாமிநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் தொடக்க நிகழ்வாக சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோவிலிலிருந்து படி இறங்கி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது.

    விழா நாட்களில் காலை, மாலை நேரத்தில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகாரத்தில் மட்டுமே புறப்பாடு நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. சூரசம்ஹார தினமான நேற்று காலை முதல் மதியம் வரை பக்தர்கள் கோவிலுக்குள் வழிபட அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலை முதல் இரவு வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    நேற்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கி, கோவில் உள் பிரகாரத்தில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் கோயில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
    முதல் சோமவாரத்தையொட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    சந்திரனுக்குரிய நாள் திங்கட்கிழமை. அந்த கிழமையை பொதுவாக சோம வாரம் என்று குறிப்பிடுவார்கள். 12 மாதங்களில் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவாரத்திற்கு சிறப்பு அதிகம் உண்டு என்று புராணங்கள் கூறுகிறது.

    அந்த வகையில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவார விரதங்களை பக்தர்கள் கடைபிடித்து சிவனை வழிபடுவது வழக்கம். ஏனெனில் அந்த நாட்களில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கேட்ட வரங்களை இறைவன் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் முதல் சோமவார உற்சவம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.

    இதையொட்டி காலை வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் இரவு சாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×