search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "veerattaneswarar temple"

    • திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
    • சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவ–ர்சாமி, அம்பாள், உறசவர் பெரியநாயகி அம்பாள்ஆகியோருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சா மிர்தம் மற்றும் மூலிகை திரவியங்கள், மூலிகை பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும், நேர்த்திகடனுக்காகவும் கிரிவலம் வந்து சாமி தரி சனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை–பெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் பெரிய நாயகி ஊஞ்சலில் எழுந்த ருளி சேவை சாதித்தார் பவுர்ணமி உற்சவதாரர் ஏ. வி. குமரன்மற்றும் சிவனடி யா–ர்கள், சிவதொ–ண்டர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

    அப்பர் இல்ல அறக்க–ட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் அர்த்தசாம பூஜை ஆகியவை நடைபெற்றது.

    பவுர்ணமியை முன் னிட்டு பக்தர்களுக்கு மருத்து வம், சுகாதாரம்,குடிநீர், உணவு, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
    • தேரடிக்கு வந்த நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பண்ருட்டி :

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரடிக்கு வந்த நடராஜர் தேரடியை சுற்றி பார்த்தார். அப்போது நடராஜருக்கு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று இரவு துவஜாஅவரோகனம் எனும் கொடி இறக்கமும் நடைபெறஉள்ளது.

    முதல் சோமவாரத்தையொட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
    சந்திரனுக்குரிய நாள் திங்கட்கிழமை. அந்த கிழமையை பொதுவாக சோம வாரம் என்று குறிப்பிடுவார்கள். 12 மாதங்களில் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவாரத்திற்கு சிறப்பு அதிகம் உண்டு என்று புராணங்கள் கூறுகிறது.

    அந்த வகையில் கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் சோமவார விரதங்களை பக்தர்கள் கடைபிடித்து சிவனை வழிபடுவது வழக்கம். ஏனெனில் அந்த நாட்களில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கேட்ட வரங்களை இறைவன் தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது.

    பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவிலில் முதல் சோமவார உற்சவம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது.

    இதையொட்டி காலை வீரட்டானேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து இரவு வீரட்டானேஸ்வரர், பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் இரவு சாமி வீதிஉலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×