என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » running bus
நீங்கள் தேடியது "running bus"
சேலத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 வாலிபர்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் கைது செய்தனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் நரசோதிப்பட்டி ஏழுமலை கவுண்டர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). இவர் நேற்று மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஜங்சன் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வரும் போது பஸ் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பெருமாள் பாக்கெட்டில் இருந்து ரூபாய் 200-யை அருகில் இருந்த வாலிபர் எடுத்து மற்றொரு வாலிபரிடம் கொடுத்தார். அதை கண்ட பயணிகள் அவர்களை பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் ஒமலூர் அம்பேத்கர் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் சிரன்ஜீவி (30), சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காதர் பாஷா என்பவர் மகன் ஜாபர் அலி (31) ஆகிய இருவரையும் கைது செய்து. அவர்களிடம் இருந்து ரூ.200-யை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி அருகே ஓடும் பஸ்சின் கண்ணாடி உடைந்து டிரைவர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
வாணியம்பாடி:
ஓசூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சினை கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி வேந்தன் (வயது 40) டிரைவர் ஓட்டி வந்தார்.
வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து தூள்தூளாக சிதறியது.
இதில் பஸ் டிரைவர் முரளி வேந்தன் படுகாயமடைந்தார். பயணிகள் 10 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் காயமடைந் தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X