search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "passenger money theft"

    ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, லட்சுமி தியேட்டர் பவானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது23).

    நேற்று மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார்.

    மணிகண்டனுக்கு பின்னால் 40 வயது மதிக்கத்தக்க நபர் நின்று கொண்டிருந்தார். பஸ் நாச்சியப்பா வீதியில் வந்து கொண்டிருந்த போது மணிகண்டன் அருகில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் மணிகண்டன் பர்சை பறித்து கொண்டு பஸ்சில் இருந்து ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் திருடன்..திருடன்..என கத்தினார். அவரது சத்ததை கேட்டு அந்த பகுதியை மக்கள் சிலர் அந்த மர்ம நபரை விரட்டி சென்று பிடித்தனர்.

    இது குறித்து டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    விசாரணையில் அந்த நபர் சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்த குமார்(45) என தெரிய வந்தது. இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு குமாரை கைது செய்தனர்.மேலும் அவனிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலத்தில் ஓடும் பஸ்சில் பயணியிடம் பணம் திருடிய 2 வாலிபர்களை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேர் கைது செய்தனர்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம் நரசோதிப்பட்டி ஏழுமலை கவுண்டர் நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 47). இவர் நேற்று மனைவியுடன் சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஜங்சன் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வரும் போது பஸ் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது பெருமாள் பாக்கெட்டில் இருந்து ரூபாய் 200-யை அருகில் இருந்த வாலிபர் எடுத்து மற்றொரு வாலிபரிடம் கொடுத்தார். அதை கண்ட பயணிகள் அவர்களை பிடித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

    விசாரணையில் ஒமலூர் அம்பேத்கர் பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் சிரன்ஜீவி (30), சேலம் அஸ்தம்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த காதர் பாஷா என்பவர் மகன் ஜாபர் அலி (31) ஆகிய இருவரையும் கைது செய்து. அவர்களிடம் இருந்து ரூ.200-யை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு. சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 
    ×