என் மலர்
நீங்கள் தேடியது "bus ruining"
ஈரோடு:
ஈரோடு, லட்சுமி தியேட்டர் பவானி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது23).
நேற்று மணிகண்டன் ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து பன்னீர்செல்வம் பார்க் செல்லும் டவுன் பஸ்சில் ஏறினார்.
மணிகண்டனுக்கு பின்னால் 40 வயது மதிக்கத்தக்க நபர் நின்று கொண்டிருந்தார். பஸ் நாச்சியப்பா வீதியில் வந்து கொண்டிருந்த போது மணிகண்டன் அருகில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் மணிகண்டன் பர்சை பறித்து கொண்டு பஸ்சில் இருந்து ஓடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் திருடன்..திருடன்..என கத்தினார். அவரது சத்ததை கேட்டு அந்த பகுதியை மக்கள் சிலர் அந்த மர்ம நபரை விரட்டி சென்று பிடித்தனர்.
இது குறித்து டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொது மக்களிடம் இருந்து அந்த நபரை மீட்டு விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த நபர் சத்தியமங்கலம், ரங்கசமுத்திரத்தை சேர்ந்த குமார்(45) என தெரிய வந்தது. இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு குமாரை கைது செய்தனர்.மேலும் அவனிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.






