என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Rowdy killed"
திருவொற்றியூர்:
எண்ணூர், ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற கிளிபிரபு (வயது 36), ரவுடி. இவர் மீது திருவொற்றியூர், எண்ணூர் போலீஸ் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரபு திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜெ.ஜெ.நகர் ரெயில்வே தண்டவாளம் அருகே பலத்த வெட்டுக் காயத்துடன் பிரபு உயிருக்கு போராடியபடி கிடந்தார். அவரது உடல் முழுவதும் அரிவாள் வெட்டு இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் எண்ணூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிரபுவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பல னின்றி நள்ளிரவில் பிரபு பரிதாபமாக இறந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபு கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்று உடனடியாக தெரியவில்லை. அவரை வேறு எங்காவது கடத்தி சென்று வெட்டி இங்கு வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதையடுத்து பிரபு கடைசியாக யாருடன் சென்றார்? அவருக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? அவரது செல்போனுக்கு பேசியவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
கொலையுண்ட பிரபுவுக்கு வசந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் கிராமத்தில் நேற்று மாலை நசுவினி காட்டாற்று கரை அருகே உள்ள ஒரு வயலில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தலையில் காயமும், கழுத்து அறுபட்ட நிலையிலும் அவர் கிடந்தார்.
இதுபற்றி அப்பகுதி மக்கள், பட்டுக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து வாலிபர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமல கண்ணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
கொலையுண்ட வாலிபர் உடல் அருகே எவர்சில்வர் குடம் ரத்தக்கறையுடன் கிடந்தது. இதனால் குடத்தால் அந்த வாலிபரின் தலையில் தாக்கி பின்னர் கழுத்தை அறுத்து மர்ம கும்பல் கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து இறந்து கிடந்த வாலிபர் யார்? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.
இதில் கொலையுண்ட வாலிபர் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பவரின் மகன் குட்டி பாம்பு என்கிற ஆறுமுகம் (வயது 36) என தெரியவந்தது. ரவுடியான இவர் மீது பட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் இருந்து வந்தன. இதனால் ரவுடி ஆறுமுகத்தை முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் கடத்தி வந்து குடத்தால் தாக்கி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.
ஆறுமுகத்தின் அண்ணன் பெரிய பாம்பு என்ற பட்டபெயருடன் ரவுடியாக இருந்து வந்தார். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ரவுடி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டு இருப்பது பட்டுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.
ரவுடி ஆறுமுகத்தை கொலை செய்த கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
கீழ்வேளூர்:
நாகை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவராமன் (வயது 27). இவர் மீது வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உள்ளது. பிரபல ரவுடியான சிவராமன், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள பரவை என்ற கிராமத்துக்கு சிவராமன் சென்றார்.
பின்னர் அங்குள்ள ஓட்டலில் அவர் சாப்பிட்டார். அப்போது சாப்பிட்டதற்கு பணம் கொடுக்காமல் வாக்குவாதம் செய்து தகராறு செய்தார். இதையடுத்து பணம் எதுவும் கொடுக்காமல் அந்த ஓட்டலை விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் நள்ளிரவில் சிவராமன், வடவூர் ரோட்டில் தலையில் வெட்டு காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவராமனை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி சிவராமன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் பற்றி தகவல் கிடைத்ததும் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவுடி சிவராமன் பரவை கிராமத்தில் உள்ள ஓட்டலில் அடிக்கடி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் தகராறு செய்வாராம். நேற்றும் இதேபோல் தகராறு செய்ததால் இந்த பிரச்சினையால் சிவராமன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அவரை மர்ம கும்பல் கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
ஜாமீனில் வந்த பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகை வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்