என் மலர்
நீங்கள் தேடியது "Rahul Gandhi"
- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
- அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் SIR குறித்த விவாதம் நாளை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இதனைத் தொடக்கி வைக்க இந்த விவாதம் 10 மணி நேரம் நடைபெறும்
இந்த விவாதத்தில் ராகுல் தலைமையின்கீழ் காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், மணீஷ் திவாரி, வர்ஷா கெய்க்வாட், முஹம்மது ஜாவேத், உஜ்வல் ராமன் சிங், இஷா கான் சவுத்ரி, மல்லு ரவி, இம்ரான் மசூத், கோவல் பதி, ஜோதிமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை காலை அவை தொடங்கும் முன் நடைபெற உள்ளது.
காலை 9. 30 மணிக்கு நாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்போது விவாதத்தில் என்ன பதிலளிப்பது என்பது குறித்து முன்கூட்டியே முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
- நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார்.
- நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதம்
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இயற்றப்பட்டு நடப்பாண்டுடன் 150 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. அதனை கொண்டாடும் வகையில் இன்று மக்களவையில் 10 மணிநேரம் சிறப்பு விவாதம் நடத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். அதுபோல இன்று மக்களவையில் வந்தே மாதரம் குறித்த சிறப்பு விவாதத்தையும் தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்பிக்களும் இதுகுறித்து உரையாற்றினர். ஆனால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அந்த சிறப்பு விவாதத்தை தவிர்த்தனர். தொடர்ந்து வந்தே மாதரம் சிறப்பு விவாதம் தொடர்பாக மக்களவையில் பேசிய பிரியங்கா காந்தி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
மக்களவையில் உரையாற்றிய பிரியங்கா காந்தி,
"மேற்குவங்கத்தில் தேர்தல் வருவதனால்தான் வந்தே மாதரத்தை கையில் எடுத்துள்ளது பாஜக. நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே வந்தே மாதர விவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
கடந்த காலம் பற்றி பேசியே பாஜக அரசியல் செய்கிறது. நேரு குறித்து குறை கூறுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார் மோடி. நேரு 12 ஆண்டுகள் சிறையில் இருந்திருக்கிறார். அதே ஆண்டுகள்தான் மோடி பிரதமர் பதவியில் உள்ளார். ஆனால் இன்னும் நேருவை குறைகூறுகிறார் மோடி. அவர் இஸ்ரோவை உருவாக்கவில்லை என்றால், மங்கள்யான் வந்திருக்காது. அவர் AIIM-களைத் தொடங்கவில்லை என்றால், கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்தியிருக்க முடியும்?
நீங்கள் நேருவைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதால், ஒரு காரியத்தைச் செய்வோம். அந்த விவாதத்திற்கென ஒரு நேரத்தை ஒதுக்குவோம். அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் பட்டியலிடுவோம், அதைப் பற்றி விவாதிப்போம், இதை அதோடு முடித்துக்கொள்வோம். நாடாளுமன்றத்தில் வந்தே மாதரம் பற்றி விவாதிப்பது போல, உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலாக, நேருவைப் பற்றி விவாதிப்போம்.
நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் பல பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ளனர், அரசு அதை கவனிக்கவில்லை. இப்போது இதைப்பற்றி விவாதிப்பது ஏன்?. இந்த அரசு நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் புறக்கணித்துவிட்டு கடந்த காலத்தையே திரும்பிப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறது." என்று பேசினார்.
- இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
- ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் நடக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ கடந்த சில நாட்களாக திட்டமிட்டபடி விமானங்களை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இன்றும் நாடு முழுவதும் 750க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடைசி நேரத்தில் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
விமானிகளுகு விடுப்பு வழங்கும் விமான இயக்குநரகத்தின்(DGCA) புதிய விதிகளால் ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக இண்டிகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே விமானிகளுக்கு வாரம் 48 மணி நேரம் ஓய்வு வழங்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை விமான இயக்குனரகம் திரும்பப்பெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'இண்டிகோ பிரச்சினை மத்திய அரசின் ஏகபோக மாடலின் விளைவு.
அரசின் தவறுக்கு, தாமதம், ரத்து, உதவியின்மை என மீண்டும் ஒருமுறை சாதாரண மக்கள் தான் விலை கொடுத்துள்ளனர். ஒவ்வொரு துறையிலும் மேட்ச் பிக்சிங் ஏகபோகங்கள் இல்லாமல் நேர்மையான போட்டிக்கு இந்தியா தகுதியானது என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் இந்தியாவில் பல துறைகளில் ஏகபோகங்களுக்கு அரசு துணை புரிவதை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு அவர் எழுதியிருந்த கட்டுரை ஒன்றையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
- இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை
- சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருகிறார்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியா வந்தநிலையில், இன்று 9 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோ திரும்பினார். இதனிடையே இன்றிரவு 7 மணிக்கு புதினுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் சிறப்பு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் மல்லிகார்ஜுனே கார்கே, ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படாதநிலையில், எம்பி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனை காங்கிரஸ் வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. சொந்தக் கட்சியின் தலைவர்களே அழைக்கப்படாதபோது, தனக்கு வந்த அழைப்பை சசி தரூர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசியுள்ள அவர், "அழைப்பு அனுப்பப்பட்டு, அழைப்பிதழ் ஏற்றுக்கொள்ளப்பட்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அனைவரின் மனசாட்சிக்கும் ஒரு குரல் உண்டு. நமது தலைவர்கள் அழைக்கப்படாதபோது, நாம் அழைக்கப்பட்டிருந்தால், விளையாட்டு ஏன் விளையாடப்படுகிறது, யார் விளையாடுகிறார்கள், நாம் ஏன் அதில் பங்கேற்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்." என தெரிவித்தார்.
நேற்று, "இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்களை (பிரிதிநிதிகளை) சந்திக்க எதிர்க்கட்சிகளை அழைக்கும் மரபை பாஜக பின்பற்றுவதில்லை" என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்த நிலையில் இன்று சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீப நாட்களாகவே சசி தரூர் பாஜக தலைவர்களை புகழ்ந்து பேசிவருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு பேசினார்.
தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பலராலும் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பணிகளை பல மாதங்களுக்கு முன்பே அரசியல் கட்சிகள் கவனிக்க தொடங்கி விட்டனர். இதனிடையே புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு கரூர் சம்பவத்திற்கு பிறகு சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில், தற்போது கட்சியில் இணைந்துள்ள செங்கோட்டையனால் புத்துயிர் ஏற்பட்டு உள்ளது என்றே கூறலாம்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் உடன் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜயின் இல்லத்தில் இச்சந்திப்பானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியுடன் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரான திருநாவுக்கரசரை செங்கோட்டையனும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்களுடன் த.வெ.க.வினரின் சந்திப்பு அக்கட்சியுடன் த.வெ.க இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
- இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
- இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியிடம் புதின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம். வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.
- பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
- எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டனர்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நேற்று முன்தினம் (டிசம்பர் 1) தொடங்கியது.
எதிர்க்கட்சிகள் SIR குறித்து விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் 2 நாட்களாக இரு அவைகளும் முடங்கியது.
இந்நிலையில், பாராளுமன்றத்தில் தோள்பட்டை வலியால் தவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு ராகுல் காந்தி தோள்பட்டை பிடித்து விட்டார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
- கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளான நேற்று காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி, நாய்க்குட்டி ஒன்றுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார்.
கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள் என மறைமுகமாக எதிர்க்கட்சியினரை விமர்சித்ததற்கு ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியும் அதே பொருள்படும் கருத்தை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி,
"நாய்தான் இன்றைய முக்கிய தலைப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நாய் என்ன செய்தது? அது இங்கே வந்ததா? அதற்கு அனுமதி இல்லையா? என கேள்வி எழுப்பியவர், ஆனால் அவை உள்ளே அனுமதிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகளை குறிப்பிடுமாறு கிண்டலாக கூறினார். இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி இடம் பெற்றிருந்தனர்.
- 2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏ.ஜே.எல். நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.90.21 கோடி கடன் அளித்தது.
2010-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'யங் இந்தியன்' நிறுவனத்தில் இயக்குநா்களாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் பொறுப்பேற்றனா்.
இதையடுத்து ஏ.ஜே.எல். நிறுவனத்தின் சுமாா் ரூ.90 கோடி கடனை யங் இந்தியன் நிறுவனம் ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது. அதைத் தொடா்ந்து அந்தக் கடன் தொகைக்காக ஏ.ஜே.எல்.நிறுவனத்தின் சுமாா் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் பண முறைகேடு நடைபெற்றதா என்று கண்டறிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் டெல்லி கோர்ட்டில் அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில் சோனியாவுக்கும், ராகுலுக்கும் யங் இந்தியன் நிறுவனத்தில் 76 சதவீத பங்குகள் உள்ளன. அவா்களின் மேற்பாா்வையில் ஏ.ஜே.எல். நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் அந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கடன் அளித்துள்ளது.
இந்த விவகாரத்தில் சோனியா ராகுல் உள்ளிட்டோர் ரூ.988 கோடிக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மறைந்த தலைவா்களான மோதிலால் வோரா, ஆஸ்காா் பொ்னாண்டஸ், யங் இந்தியன் நிறுவன நிா்வாகிகள் சுமன் துபே, சாம் பிட்ரோடா உள்ளிட்டோர், ஒரு தனியாா் நிறுவனம் மற்றும் யங் இந்தியன் நிறுவனம் மீதும் சதி மற்றும் பண முறைகேடு குற்றச்சாட்டை அமலாக்கத்துறை முன்வைத்தது.
இந்த குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பாக டெல்லி கோர்ட்டில் தொடா் விசாரணையை மேற்கொண் டது. அமலாக்கத் துறையிடம் சில விளக்கங்களையும் கேட்டது.
இந்த வழக்கு டெல்லி கோர்ட்டில் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையை ஏற்பது தொடா்பான உத்தரவை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
ராகுல், சோனியா மீது புதிய வழக்கு
இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி கோர்ட்டில் இந்த வழக்கை ஒத்திவைத்த மறுநாள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லி போலீசாரின் பொருளாதார குற்றப்பிரிவினர் ராகுல் காந்தி, சோனியா மற்றும் 6 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
- உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது
- நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது.
டெல்லியின் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசடைந்து வருகிறது. காற்று மாசு குறித்து டெல்லி அரசின் பாரா முகம் குறித்து ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தீபாவளி அன்று பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாஜக அரசு வழக்கு தொடர்ந்து சாதகமாக தீர்ப்பு பெற்றது. எனவே பல வருடம் கழித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு டெல்லியில் பசுமை பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையை ஆர்வலர்கள் விமர்சித்தனர். தீபாவளிக்கு பின் டெல்லியின் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதற்கிடையே டெல்லியில் செயற்கை மழை பெய்ய செய்ய ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் டெல்லி ஐஐடி மேற்கொண்ட சோதனை தோல்வி அடைந்தது.
கடந்த சில வாரங்களாகவும், இன்றும் டெல்லி காற்றின் தரம் AQI 400 ஐ தாண்டி 'மிகவும் மோசம்' என்ற வகையை அடைந்துள்ளது.
இந்நிலையில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லி காற்று மாசினால் ஏற்பட்டுள்ள சுகாதார அவசரநிலை குறித்து மத்திய அரசின் குறிப்பாக பிரதமர் மோடியின் பாராமுகம் குறித்து விமர்சித்துள்ளார்.
டெல்லியில், தாய்மார்கள் சிலருடன் தனது வீட்டில் ராகுல் காந்தி காற்று மாசு குறித்து கலந்துரையாடி அதன் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், நான் சந்திக்கும் ஒவ்வொரு தாய்மாரும் என்னிடம் ஒரு விஷயத்தை தான் கூறுகிறார்கள். அவர்களின் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசித்து வளர்வது குறித்து அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள் பயத்துடனும், கோபத்துடன், ஏதும் செய்ய முடியாத நிலையிலும் இருக்கிறார்கள்.
மோடி அவர்களே,"இந்தியாவின் குழந்தைகள் நமது கண் முன்னே மூச்சுத்திணறி கொண்டுள்ளனர். நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள். இந்த பிரச்சனையில் உங்கள் அரசு எந்த அவசரமும் கட்டமால், எந்த திட்டமும் இல்லாமல், எந்த பொறுப்பும் இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், காற்று மாசு விவகாரம் குறித்த பாராளுமன்றத்தில் உடனடியாக விவாதம் செய்யப்பட வேண்டும். இதை சுகாதார அவசரநிலையை கருதி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு தூய்மையான காற்றை சுவாசிக்க உரிமை இருக்கிறது, எனவே இந்த விஷயத்தில் இனியும் எந்த சாக்கு போக்குகளும், திசை திருப்புதலும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி உள்ளார்.
வரும் வாரத்திலும் டெல்லியின் காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற நிலையிலேயே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்.
- காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
வாக்கு மோசடிக்கு எதிராக டிசம்பர் 14 ஆம் தேதி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்தப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகவும், நமது அரசியலமைப்பை அழிக்கும் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு செய்தியை அனுப்ப டிசம்பர் 14 அன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் 'வோட் சோர் காடி சோட்' என்ற பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் நடத்தும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் எக்ஸ் இல் பதிவிட்டுள்ளார்.
மேலும், "போலி வாக்காளர்களைச் சேர்ப்பது, எதிர்க்கட்சிகளுக்குச் சார்பான வாக்காளர்களின் பெயர்களை நீக்குவது மற்றும் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மாற்றங்களைச் செய்வது போன்ற பாஜக-தேர்தல் ஆணையத்தின் தீய தந்திரங்களை நிராகரித்து, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கோடிக்கணக்கான கையெழுத்துகளைப் பெற்றுளாம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேரணி நடத்துவது என்று முன்னதாக நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
- தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
கரூர்:
கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கரூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்கள் காங்கிரஸ்- தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்க உள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுகின்றன.
ஆனால் காங்கிரசுக்கு விஜய் அறிமுகம் இல்லாதவர் அல்ல. காங்கிரஸில் சேருவது குறித்து விவாதிக்க 2010 ல் அவர் ராகுல் காந்தியை சந்தித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை.
கரூர் துயர சம்பவத்தின் போது மற்ற காங்கிரஸ் தலைவர்களை போலவே விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார்.
சமூக ஊடகங்களில் நாம் பார்ப்பதை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். கூட்டணி விஷயங்களை பற்றி விவாதிக்க இன்னும் நேரம் இருக்கிறது.
தற்போது நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் என்பது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் கிடையாது. குடியுரிமை திருத்தம்.
பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யாமல் வாக்காளர் பட்டியல் திருத்தம் மட்டும் செய்கின்றனர். இதற்கு அஸ்ஸாமில் நடத்தப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறுகின்றனர்.
இதுபோல எஸ்.ஐ.ஆர் வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பில் இல்லாத தமிழகம், கேரளாவில் எஸ்.ஐ.ஆர் செயல்படுத்துவதன் நோக்கம் என்ன? தேர்தல் ஆணையம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஒரு நிலைப்பாடும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் வேறு ஒரு நிலைப்பாடும் என இரட்டை நிலைபாடுகளுடன் செயல்படுகிறது. பா.ஜ.க.வின் ஒரு அணி போல தான் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்றார்.






