search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மசூத்அசார்"

    மசூத்அசார் விவகாரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை கடந்த 26-ந்தேதி குண்டு வீசி அழித்தது.

    இந்த சூழ்நிலையில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கவாதியாக அறிவிக்ககோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தன.

    10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது.

    எந்த உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கெடு நேரம் முடியும் தருவாயில் சீனா தொழில் நுட்ப ரீதியில் சில கேள்விகளை முன் வைத்து தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டது.

    மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடுப்பது இது 4-வது முறையாகும்.


    இந்த சம்பவத்தில் சீனா குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.

    மோடியின் சீன தூதரக கொள்கை என்பது:

    1. குஜராத்தில் ஜின் பிங்குடன் ஊஞ்சலாடினர்.

    2. டெல்லியில் ஜின்பிங்கை கட்டி அணைத்தார்.

    3. சீனாவில் ஜின் பிங்குக்கு தலை குனிந்து வணங்கினார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து விட்டது. இதுகுறித்து ஒவ்வொரு இந்தியர் மனதிலும் கேள்வி எழுகிறது. அப்படியென்றால் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஊஞ்சலாடியதில் என்ன பயன் இருக்கிறது.

    கொடூரமான, ரத்தத்தை உறைய வைக்கும் கொலைகளை நடத்திய பயங்கரவாதி பா.ஜனதாவால் மீண்டும் தப்பி இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack

    ×