search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rahul gandhi. pmmodi"

    பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
    பாட்னா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பீகார் மாநிலத்தில் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் 15 லட்சம் ரூபாய், விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்று கடந்த தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனது ஏன்? என்று உங்களுக்கு அவர் எப்போதாவது விளக்கம் அளித்திருக்கிறாரா?

    தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதாவது செய்திருக்கிறாரா? 

    நான் உங்கள் காவலாளி என்று கூறும் மோடி இந்த நாட்டின் பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளியாக இருக்கிறார். பணக்காரர்கள் மட்டுமே வாசலில் காவல்காரர்களை நிறுத்தி வைப்பார்கள். ஏழைகளின் வீடுகளில் எங்காவது காவலாளியை பார்த்தது உண்டா? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிரபல தொழிலதிபர்கள் அனில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரை சகோதரர்களே என்று அழைத்து சகோதரர்களைப்போல் நடத்தும் மோடி, உங்களைப்போன்ற சாமான்ய மக்களை நண்பர்களே என்று அழைக்கிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பலகாலமாக கஷ்டப்பட்டு பெண்கள் சேமித்து வைத்திருந்த பணம்கூட பறிக்கப்பட்டது. வசதி படைத்தவர்களின் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடனை தள்ளுபடி செய்ய முடிந்த மோடி அரசால் ஏழை விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முடியாமல் போனது ஏன்?

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தோம். மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சி அமைத்தவுடன் முதல் வேலையாக இந்த வாக்குறுதியை நிறைவேற்றினோம்.

    அதேபோல், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தால் குறைந்தபட்ச வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் நிதியுதவி திட்டத்தை நிச்சயமாக நாங்கள் நடைமுறைப்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #RahulmocksModi #chowkidar #chowkidarcampaign
    மசூத்அசார் விவகாரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack

    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய விமானப்படை பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை கடந்த 26-ந்தேதி குண்டு வீசி அழித்தது.

    இந்த சூழ்நிலையில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கவாதியாக அறிவிக்ககோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தன.

    10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தால் தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது.

    எந்த உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கெடு நேரம் முடியும் தருவாயில் சீனா தொழில் நுட்ப ரீதியில் சில கேள்விகளை முன் வைத்து தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டது.

    மசூத்அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடுப்பது இது 4-வது முறையாகும்.


    இந்த சம்பவத்தில் சீனா குறித்து எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் பிரதமர் மோடி இருப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    பலவீனமான மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவுக்கு எதிரான சீனாவின் நடவடிக்கை பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.

    மோடியின் சீன தூதரக கொள்கை என்பது:

    1. குஜராத்தில் ஜின் பிங்குடன் ஊஞ்சலாடினர்.

    2. டெல்லியில் ஜின்பிங்கை கட்டி அணைத்தார்.

    3. சீனாவில் ஜின் பிங்குக்கு தலை குனிந்து வணங்கினார்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கூறி இருப்பதாவது:-

    மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் இந்தியாவின் முயற்சியை சீனா தடுத்து விட்டது. இதுகுறித்து ஒவ்வொரு இந்தியர் மனதிலும் கேள்வி எழுகிறது. அப்படியென்றால் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி ஊஞ்சலாடியதில் என்ன பயன் இருக்கிறது.

    கொடூரமான, ரத்தத்தை உறைய வைக்கும் கொலைகளை நடத்திய பயங்கரவாதி பா.ஜனதாவால் மீண்டும் தப்பி இருக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MasoodAzharcase #rahulgandhi #pmmodi #kashmirattack

    ×