search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "QR Code"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழிப்பறை சுத்தமாக உள்ளதா, போதுமான தண்ணீர், காற்றோட்டம், வெளிச்சம், கதவுகளின் தாழ்பாள் உள்ளதா, துர்நாற்றம் வீசுகிறதா உள்ளிட்ட 7 கேள்விகள் உள்ளன.
    • கழிப்பறைக்கு ரேட்டிங் வழங்க 5 ஸ்டார் மதிப்பீடு வரை வசதி செய்துள்ளனர்.

    தேனி:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் உள்ள பொதுக்கழிப்பறைகளில் தூய்மை, பராமரிப்பு மற்றும் குறைகள் குறித்து கருத்து தெரிவிக்க கியூ ஆர் கோடு பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுகழிப்பிடங்கள், கட்டண கழிப்பிடங்களை சில ஆண்டுகளாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சீரமைத்து சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி நகராட்சியில் உள்ள பொதுகழிப்பிடங்கள், சமூக சுகாதார வளாகங்கள் ஆகியவற்றின் நுழைவுவாயிலில், கியூஆர் கோடு கொண்ட போர்டு பொருத்துகின்றனர். கழிப்பிடங்களை பயன்படுத்துவோர் செல்போன் மூலம் கியூஆர்கோடை ஸ்கேன் செய்தால் நேரடியாக இணையதளத்தில் வரும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் உள்ளது.

    அதில் கழிப்பறை சுத்தமாக உள்ளதா, போதுமான தண்ணீர், காற்றோட்டம், வெளிச்சம், கதவுகளின் தாழ்பாள் உள்ளதா, துர்நாற்றம் வீசுகிறதா உள்ளிட்ட 7 கேள்விகள் உள்ளன. அந்த கழிப்பறைக்கு ரேட்டிங் வழங்க 5 ஸ்டார் மதிப்பீடு வரை வசதி செய்துள்ளனர். பேரூராட்சி சுகாதார வளாகங்களிலும் இந்த வசதி செய்யப்படுகிறது.

    இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 35 கழிப்பிடங்களில் கியூஆர் கோடு பொருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் வரும் புகார்கள் டெல்லி தூய்மை இந்தியா திட்ட செயலில் பார்க்க முடியும். அவர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சிக்கு தகவல் தெரிவித்து கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர்.

    இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் சுகாதாரமான கழிப்பறை கிடைக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
    • இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு போலி, காலாவதி மருந்துகள் கண்டறியப்படுகிறது.காய்ச்சல், இதய நோய், வயிற்றுவலி, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.

    இதனால் மத்திய அரசு அதிகம் விற்பனையாகும், முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில், போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்கும் வகையில் டிராக் அண்ட் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகமுதல் கட்டமாக அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார் கோடு அல்லது க்யூஆர் கோடுபிரின்ட் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை, அட்டையின் விலை, 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் மருந்துகளில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, உண்மை விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், க்யூ ஆர் கோடு ஸ்கேனர் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலவதி தேதி உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசின் இத்திட்டம் வரவேற்கதக்கது என்றார்.

    கியூ.ஆர்.கோடு மூலம் ரெயில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி முதற்கட்டமாக சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #SouthernRailway
    சென்னை:

    சென்னையில் நேற்று தெற்கு ரெயில்வே சார்பில் ‘கியூ.ஆர்.கோடு’ மூலம் முன்பதிவற்ற ரெயில் டிக்கெட் எடுக்க புதிய வசதி தொடங்கப்பட்டது. இதனை தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா தொடங்கி வைத்தார். இந்த திட்டம் மூலம் ரெயில் நிலையங்களில் உள்ள பொது தளத்தில் ‘கியூ.ஆர்.கோடு’ உள்ள பதாகைகள் ஒட்டப்படும்.

    பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள ‘யூ.டி.எஸ்.-ஆப்’ மூலம் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து உடனே முன்பதிவற்ற டிக்கெட் எடுக்கலாம். இதன்மூலம் பயணிகள் டிக்கெட் கவுண்ட்டருக்கு செல்லாமல் முன்பதிவற்ற டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இதுகுறித்து தெற்கு ரெயில்வே முதன்மை வர்த்தக மேலாளர் பிரியம்வதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெற்கு ரெயில்வேயில் ‘யூ.டி.எஸ்.-ஆப்’ வசதியை 5 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இப்போது ‘கியூ.ஆர்.கோடு’ வசதியின் மூலம் ‘யூ.டி.எஸ்.-ஆப்’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும். இந்த வசதி தற்போது முதற்கட்டமாக சென்னை புறநகர் ரெயில் நிலையங்களில் செயல்பட தொடங்கியுள்ளது.

    இந்த புதிய வசதி தெற்கு ரெயில்வேயின் அனைத்து ரெயில் நிலையங்களிலும் விரிவாக்கப்படும். டிக்கெட் கவுண்ட்டர்களில் உள்ள கூட்டத்தை குறைக்க தானியங்கி டிக்கெட் வழங்கும் எந்திரங்கள் பொறுத்தப்பட உள்ளது.

    தெற்கு ரெயில்வே சார்பில் தீபாவளிக்கு 23 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டு, முன்பதிவு தொடங்கியவுடன் அனைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டன. மேலும் நவம்பர் மாதத்தில் 35 சிறப்பு ரெயில்களும், டிசம்பர் மாதத்தில் 28 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளது.



    சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரெயில்களில் 90 சதவீத டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகிறது. விழாக்காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்பதிவற்ற சிறப்பு ரெயில்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #SouthernRailway
    ×