search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "க்யூ ஆர் கோடு"

    • ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.
    • இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உத்தரவின் பேரில் அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டு போலி, காலாவதி மருந்துகள் கண்டறியப்படுகிறது.காய்ச்சல், இதய நோய், வயிற்றுவலி, தைராய்டு உள்ளிட்ட பிரச்னைகளுக்கான போலி மருந்துகள் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆய்வு நடத்தி அழிக்கப்பட்டாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை.

    இதனால் மத்திய அரசு அதிகம் விற்பனையாகும், முக்கியத்துவம் வாய்ந்த மருந்துகளில், போலி மற்றும் தரமற்றவற்றை தடுக்கும் வகையில் டிராக் அண்ட் டிரேஸ் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகமுதல் கட்டமாக அதிகம் விற்பனையாகும் 300 மருந்து பொருட்களின் லேபிள்கள் மீது பார் கோடு அல்லது க்யூஆர் கோடுபிரின்ட் செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக அதிகம் விற்பனையாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள், இதய நோய், வலி நிவாரணி மாத்திரை, அலர்ஜிக்கான மாத்திரை, அட்டையின் விலை, 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் மருந்துகளில் இந்த வசதி அறிமுகமாக உள்ளது. இந்த திட்டத்தை 2023 ஏப்ரல் மாதம் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இந்த க்யூஆர் கோடு ஸ்கேன் செய்தால் மருந்தின் தயாரிப்பு தேதி, உண்மை விலை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், போலி, தரமற்ற, காலாவதியான மருந்துகளை தடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட மருந்து வணிகர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், க்யூ ஆர் கோடு ஸ்கேனர் மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பு தேதி, காலவதி தேதி உள்ளிட்ட விபரங்களை வாடிக்கையாளர் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும். மத்திய அரசின் இத்திட்டம் வரவேற்கதக்கது என்றார்.

    ×