என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Private factories"
- தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.
- தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கரும்புகையினால் துர்நாற்றம் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது.
திருப்பூர் :
உடுமலை பெரியபாப்பனூத்து ஊராட்சி அந்தியூர் விவசாயிகள் திருப்பூர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அந்தியூர் ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை கடந்த ஒரு வருடமாக இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.இந்த தொழிற்சாலை முதலில் தேங்காயில் இருந்து எண்ணெய் எடுக்கும் ஆலை என்று அதன் உரிமையாளரால் சொல்லப்பட்டது.நாளடைவில் இந்த தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் கரும்புகையினால் துர்நாற்றம் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. இது தொடர்பாக இந்த தொழிற்சாலையில் என்ன உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலை முறையான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி துறையிடமும் ஊராட்சி நிர்வாகத்திடமும் பெறப்பட்டுள்ளதா என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல் கோரினோம்.ஆனால் இந்த தகவல் கோரிய மனு மீது எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாளடைவில் இந்த தொழிற்சாலையினால் பல்வேறு வகையான நோய்களுக்கு மக்கள் உட்படுகின்றனர்.பள்ளிக்குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் இந்த தொழிற்சாலை வழியாகச்செல்ல வேண்டியுள்ளது. இதனால் மூச்சு திணறல் மற்றும் வாந்தி ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம்பலமுறை பொதுமக்கள் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தற்காலிகமாக நடவடிக்கையாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் இந்த தொழிற்சாலை இயங்குகிறது.ஆழ்துளை கிணறு அமைத்து கழிவு நீரை அதனுள் இறக்குகின்றனர். இதனால் நிலத்தடிநீர் மாசுபடுகிறது. இதனால் கால் நடைகளுக்கும் மற்றும் விவசாய பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நச்சுப்புகை காற்றில் பரவுவதால் அருகில் உள்ள ஊர்பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய் தொற்று பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இந்ததொழிற்சாலையை உடனே நிறுத்தி வைத்து பொதுமக்களை காக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்